பொள்ளாச்சி, ஏப்.26- அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கு வது போல, வீட்டு கடன், தொழில்கடன், இல வச ஆடு, மாடு மற்றும் வீட்டுமனை பட்டா உள்ளிட்ட அடிப்படை தேவைகளை ஏற்ப டுத்தி, சாதாரண வாழ்வை வாழ வழிவிடக் கோரி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவல கத்தை அனைத்து திருநங்கைகள் கூட்ட மைப்பினர் முற்றுகையிட்டு தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து திருநங்கைகள் கூட்டமைப் பினர் கூறுகையில், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் 80க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். கடந்த பத்து ஆண்டுகளுக்கு முந்தைய திமுக ஆட்சியில் 25 திருநங்கை களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட் டது.
ஆனால், அதில் தற்போது வரை மூன்று பேர் மட்டுமே வீடு கட்டியுள்ளனர். மீதமுள்ள திருநங்கைகள் வங்கி கடன் மூலமாக வீடு கட்ட விண்ணப்பித்தால் குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் அளவில் அஸ்திவாரம் அமைத்திருக்க வேண்டுமென வங்கி அதி காரிகள் கூறுகின்றனர். அன்றாடம் பிழைப் பிற்கே யாசகம் பெற்று வாழ்வாதாரம் நடத்துகின்ற திருநங்கைகளால் ஒரு லட் சத்தில் வீட்டு அஸ்திவாரம் அமைப்பது நடைமுறையில் சாத்தியமற்றது. இதனால், பிரதமர் மற்றும் முதலமைச்சர் வீடுகட்டும் திட்டத்தில் நிதி பெற முடியாத சூழல் உரு வாகியுள்ளது. வீடுகளின்றி வாழும் திருநங்கை களுக்கு இதுவரை தொகுப்பு வீடுகள் கூட கட்டித்தருவதற்கு அரசு முன்வரவில்லை. பெரியார் நினைவு சமத்துவபுரம் மற்றும் பசுமை வீடுகள் திட்டத்தின் படி ஒரு திரு நங்கைக்கு கூட பலனில்லை.
இது தொடர் பாக பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கை யும் இல்லை திருநங்கைகளுக்கான ஓய்வூ தியம் பெற அரசாணை வெளியிட்டு பல வருடங்கள் கடந்துவிட்டது. ஆனாலும், இன்றளவும் அதற்கான நடவடிக்கைகள் இல்லை. பொள்ளாச்சி பகுதியில் திருநங் கைகளின் வாழ்வாதாரம் பறிபோகும் வகை யில் உள்ளது. எனவே, தமிழக அரசும், கோவை மாவட்ட ஆட்சியரும் உடனடியாக தலையீடு செய்து திருநங்கைகள் வாழ்வா தாரத்தை மேம்படுத்த வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்ததது. முன்னதாக, பொள்ளாச்சி சார் ஆட்சி யர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு சகோதரி அறக் கட்டளை நிறுவனர் கல்கி சுப்ரமணியம் தலைமை வகித்தார். கோவை மாவட்ட திரு நங்கைகள் நல சங்கத்தின் செயலாளர் ஸ்ரீ வீனா யாழினி தர்ணா போராட்டத்தினை துவக்கி வைத்து உரையாற்றினார். முடி வில், திருநங்கை நலவாரிய உறுப்பினர் பிரியா பாபு நன்றி கூறினார். இதில் ஐம்ப துக்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துக் கொண்டனர்.