districts

img

மாற்றுத்திறனாளிகளை அலைகழிக்கும் ஆன்லைன் முறையை ரத்து செய்திடுக

சேலம், ஏப்.29- அடையாள அட்டைக்காக மாற் றுத்திறனாளியை அலைகழிக்கும் சட்டவிரோத ஆன்லைன் முறையை  ரத்து செய்யக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற் றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் சிறப்பு மருத்துவர்கள் மூலம் வாரந் தோறும் செவ்வாய்க்கிழமை  அடை யாள அட்டை வழங்கி வந்ததை  மீண்டும் நடைமுறை வேண்டும். கோட் டாட்சியர் தலைமையில் குறை கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். மருத்துவச்சான்று பெற்ற நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலர்களிடம் அடையாள அட்டையை வழங்க வேண்டும். அடையாள அட்டைக்காக மாற் றுத்திறனாளியை அலைகழிக்கும் சட்டவிரோத ஆன்லைன் முறையை  ரத்து செய்ய வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் அம்மாசி தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயலாளர் வி.கே.வெங்கடாசலம், மாவட்ட பொருளாளர் பி.ஹரி கிருஷ்ணன், மாவட்ட இணைச்செய லாளர் ஆ.கந்தன், நிர்வாகிகள் உமா காந்த், க.காளிதாஸ், ஜான் பெர்னாண் டஸ், வி.சின்னதுரை, பி.பாரதி உட் பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தின் முடிவில் மாவட்ட ஆட்சியரின் நேர் முக உதவியாளரிடம் சங்கத்தின் நிர் வாகிகள் மனு அளித்தனர்.