districts

img

ஹோட்டல், பேக்கரி உரிமையாளர்களுக்கு பயிற்சி

தாராபுரம், ஜூன் 26- தரமான, உணவுப் பொருட்களை பாதுகாப்பான முறையில் விற்பனை  செய்வது குறித்த தாராபுரத்தில் உணவு  பாதுகாப்பு துறை சார்பில் ஹோட்டல், பேக்கரி உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப் பட்டது. தாராபுரம் ஆனந்தா ஹோட்டலில், உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடை பெற்ற பயிற்சி முகாமில், தாராபுரம்  பகுதியில் உள்ள ஹோட்டல், பேக்கரி, மெஸ் உரிமையாளர்கள் மற்றும் பணி யாளர்கள் பங்கேற்றனர். உணவு பாது காப்பு துறை அலுவலர்கள் ஸ்ரீரஞ்சீவி  ரகுநாதன் ஆகியோர் பவர்பாயிண்ட் மூலம் பயிற்சி அளித்தனர். இதில், டீக்க டைகளில் டீ பிளாஸ்டிக் கவர்களில் வினியோகம் செய்யக்கூடாது. ஹோட் டல்களில் சூடான உணவுப் பண்டங் களை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்பனை செய்யக்கூடாது. பேக்கரி, இனிப்பகங்களில் உண வுப் பொருட்களில் கலர் பொடிகளை உபயோகிக்கக்கூடாது.  ஒவ்வொரு உணவு பாக்கெட்டி லும் உணவு பாதுகாப்பு துறை வழங் கிய லைசென்ஸ் எண், தயாரிக்கப்பட்ட தேதி, காலவாதியாகும் தேதி, எடை அளவு ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். ஹோட்டல் மற்றும் பேக்க ரிகளில் உணவு பொருட்களை வாடிக் கையாளர்களுக்கு கொடுக்கும் பொழுது கைகளில் கிளவுஸ் அணிந்து  இருக்க வேண்டும்.  தரமான மற்றும் பாதுகாப்பான முறையில் உணவு பொருட்களை விற் பனை செய்ய உணவு பாதுகாப்பு துறை உடன் ஹோட்டல் உரிமையாளர்கள் பேக்கரி உரிமையாளர்கள் உரிமை யாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என  பயிற்சியின் போது எடுத்துக் கூறப்பட் டது.  உணவு பாதுகாப்பு துறை சார்பில் அளிக்கப்பட்ட பயிற்சியில் பங்கேற்ற ஊழியர்களுக்கு சான்றிதழ்கள் வழங் கப்பட்டது. உணவுப்பொருள்களில் உப்பு, எண்ணெய், சர்க்கரையை குறைத்து சாப்பிடுவதென உறுதி மொழி எடுக்கப்பட்டது. முடிவில் தாரா புரம் ஓட்டல் உரிமையாளர்கள் சங்க  தலைவரும் நகராட்சி துணைத் தலை வருமான ரவிச்சந்திரன் நன்றி கூறி னார்.