நாமக்கல், ஏப்.8- மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு நாளன்று பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட உள்ள 692 காவ லர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில், மக்க ளவை தோதல் வாக்குப்பதிவு நாளன்று பாதுகாப்புப் பணிக ளில் ஈடுபட உள்ள காவல் துறையினருக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் ச.உமா தலைமை யில், காவல் பார்வையாளர் உஷா ராதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஷ் கண்ணன் ஆகியோர் முன்னி லையில் நடைபெற்றது. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில், ஒரு வாக்குப்பதிவு மையத்திற்கு ஒரு காவலர் பணியமர்த்தப்பட உள்ளார். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பா ளர்கள், 8 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 7 காவல் ஆய்வாளர்கள், 692 காவலர்கள் பணியாற்ற உள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள காவலர்களுக்கான பயிற்சி வகுப்பில் வாக்குப்பதிவின்போது, பொதுமக்கள் சுதந்திர மாக வாக்களிப்பதற்கு தேவையான பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், தேர்தல் விதிமுறைகளை முறையாக பின் பற்றுவதை கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எ.கனகேஸ்வரி, துணை காவல் கண்காணிப்பாளர் ஆர்.தனராசு உட்பட பலர் கலந்து கொண்ட னர்.