திருப்பூர், நவ.16- உள்ளாட்சி நிர்வாகத்தில் சமூகநீதி குறித்து தலித் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு திருப்பூரில் பயிற்சி முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருப்பூர் மாவட் டக்குழு சார்பில் திருப்பூர் மாவட் டத்தில் உள்ள தலித் ஊராட்சித் தலைவர்களுக்கு, “உள்ளாட்சி நிர்வாகத்தில் சமூகநீதி” பயிற்சி முகாம் புதனன்று திருப்பூர் கும ரன் சாலை அரிமா சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது. இம்முகா முக்கு மாவட்டத் தலைவர் ச.நந்த கோபால் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் ஏ.பஞ்ச லிங்கம் வரவேற்றார். மாநில துணை பொதுச்செயலா ளர் யு.கே.சிவஞானம் தொடங்கி வைத்துப் பேசினார். 73 ஆவது சட்டத் திருத்தம் - தமிழ்நாடு உள்ளாட்சிகள் சட்டம் - 1994 - கிராமசபை முக்கிய அம்சங்கள் என்ற தலைப்பில் மாநிலக்குழு உறுப்பினர் கா.வேணி, கிராம ஊராட்சிகளுக்கான திட்டங்களும் - நிதி ஒதுக்கீடுகளும் என்ற தலைப் பில், கொள்கை மற்றும் சட்டத் தலையீடு அமைப்பின் எம்.எல். தாஸ், தலித் / பழங்குடி ஊராட் சித் தலைவர்கள் மீதான பாகுபாடு களும் - தடுப்பதற்கான சட்ட வழிமுறைகளும் என்ற தலைப்பில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநிலத் தலைவர் த.செல்லக் கண்ணு ஆகியோர் கருத்துரை வழங்கினர். அதன்மீது, முகாமில் கலந்து கொண்ட ஊராட்சித் தலைவர்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண் டனர். பயிற்சி முகாமின் கோரிக்கை கள் - தீர்மானங்கள் குறித்து மாவட்ட செயலாளர் சி.கே.கனக ராஜ் விளக்கினார். தலைவர்க ளுக்கு நினைவுப் பரிசினை மாவட்ட துணைத்தலைவர் செல்ல முத்து வழங்கினார். நிறைவில் மாவட்ட துணைச்செயலாளர் ஆர்.பழனிச்சாமி நன்றி கூறினார்.