districts

img

கனமழையால் தண்டவாளத்தில் சரிந்து விழுந்த மரம்

மேட்டுப்பாளையம், மே 4- மேட்டுப்பாளையத்தில் செவ் வாயன்று இரவு பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக மலை ரயில் இருப்பு பாதையில் மரம் சாய்ந்து விழுந்தததால், மலைரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார  பகுதிகளில் செவ்வாயன்று இரவு கடும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ய துவங்கியது. இதில்  நகர்ப் பகுதியிலிருந்த 10க்கும் மேற் பட்ட சாலையோர மரங்கள் காற்றின் வேகம் தாங்காமல் முறிந்து விழுந் தன. சில மரங்கள் மின் கம்பங்கள் மீது சரிந்ததால் மின்சாரம் துண்டிக் கப்பட்டு நகர்பகுதியை இருள் சூழ்ந் தது. அதே நேரத்தில் காட்டூர் என்னு மிடத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை இயக்கப் பட்டு வரும் நீலகிரி மலைரயில் கடந்து செல்லும் இருப்பு பாதை மீதும் பெரிய மரமொன்று அடி யோடு சாய்ந்து விழுந்தது. மின்சா ரம் தடைபட்டிருந்த இரவு நேரத்தில் மரம் விழுந்ததால் உடனடியாக சீர மைப்பு பணிகள் மேற்கொள்ள இய வில்லை. இதையடுத்து புதனன்று காலையே தண்டவாளத்தின் மீது  சரிந்து கிடந்த மரத்தை அப்புறப் படுத்தும் பணியிணை ரயில்வே ஊழி யர்கள் துவங்கினர். இதனால் மேட் டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து வழக்கம் போல் காலை 7.10 மணிக்கு புறப்பட வேண்டிய மலைரயில் போக்குவரத்து தடை பட்டது. இருப்பு பாதை மீது கிடந்த  மரத்தை அறுவை இயந்திரம் மூலம் வெட்டியும், மரக்கிளைகளை பொக் லைன் இயந்திரம் மூலம் அப்புறப் படுத்தியும் சீரமைப்பு பணிகள் நடை பெற்றன. காலை சுமார் 8.40 மணிக்கு தண்டவாளத்தின் மீது கிடந்த மரம் அகற்றப்பட்டு, பாதை சீரானதும் 8.50 மணியளவில் மலைரயில் இயக்கப் பட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து சரியாக காலை 7.10 மணிக்கு உதகை நோக்கி புறப்பட வேண்டிய மலைரயில், சுமார் ஒன்றரை மணி  நேரத்திற்கும் மேல் தாமதமாக காலை 8.50 மணிக்கு புறப்பட்டு சென் றது. இந்த தாமதத்தால் சுற்றுலா  பயணிகள் பெரும் சிரமத்திற்குள் ளாகினர்.