ஈரோடு, பிப்.21- தாளவாடியை அடுத்த திம்பம் மலைப்பாதையில், லாரி பழுதான தால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், திம்பம் மலைப் பாதையில் 27 கொண்டை ஊசி வளை வுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தமிழகம்- கர்நாடக இடையேயான போக்குவரத்திற்கு முக்கிய சாலை யாக உள்ளது. இந்த மலைப்பாதை யில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி, போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், இரவு நேரத்தில் சாலையை கடக்கும் வன விலங்குகள் வாகனத் தில் மோதி உயிரிழப்பதால் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மலைப்பாதையில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந் தது. இந்நிலையில் கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து சேலத்துக்கு பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்று திம்பம் மலைப்பாதை 10 ஆவது கொண்டை ஊசி வளைவில் சென்று கொண்டு இருந்தது. திடீரென லாரி வளைவில் திரும்பும்போது பழுதாகி நின்றது.
இதனால் அச்சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் அனைத்தும் மலைப் பாதையில் பல கிலோ மீட்டர் தூரத் துக்கு அணிவகுத்து நின்றன. பின்னர் பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டது. ஆனால், அதிக பாரம் காரணமாக கிரேன் மூலமாக லாரியை அப்புறப்படுத்த முடிய வில்லை. இதனால் திம்பம் மலைப் பாதையில் விடிய, விடிய போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், உணவு, தண்ணீர் மட்டுமின்றி மலைப் பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற் பட்டதால் இரவு முழுவதும் வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி னர். அதேநேரம், மலைப்பாதையில் குறைந்த எடையுள்ள வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளது. ஆனால், சுமார் 30 முதல் 40 டன் எடையுள்ள லாரிகள் திம்பம் மலைப்பாதையில் சர்வ சாதாரணமாக இயக்கப்பட்டு வருகிறது. இதை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.