districts

img

ஏற்காடு மலைப்பாதையில் உருண்டு விழுந்த ராட்சத பாறையால் போக்குவரத்து பாதிப்பு

சேலம், மே 22- ஏற்காடு மலைப்பாதை யில் திடீரென உருண்டு விழுந்த ராட்சத பாறையால் போக்குவரத்து பாதிப்பு ஏற் பட்டது. சேலம் மாவட்டம், ஏற் காடு சுற்றுலா தளத்தில்  கடந்த சில தினங்களாக  தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மலைப் பாதைக ளில் ஆங்காங்கே கடந்த சில தினங்க ளுக்கு முன்பு 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் வெள்ளியன்று  ஏற்காடு மலைப்பாதை 18 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே திடீரென ராட்சத பாறை உருண்டு சாலையில் விழுந்தது. இத னால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த ஏற்காடு  காவல்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் கொண்டு ராட்சத பாறை உடைத்து அப்புறப் படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பாறை  உருண்டு விழுகின்ற பொழுது வாகன ஓட்டி கள் வராததால் நல்வாய்ப்பாக அசம்பாவி தங்கள் தவிர்க்கப்பட்டது. தற்போது பாறை கள் அகற்றப்பட்டு வருவதால் மலைபாதை யில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள் ளது.