உதகை, டிச.23- கோத்தகிரி அருகே திடீர் நிலச்சரிவு ஏற் பட்டு, பாறைகள் சாலையில் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப் பட்டது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரியிலிருந்து கூக்கல்தொரை செல்லும் சாலை மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலை உதகை மற்றும் ஏராள மான கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. இதனால். எப்போது இந்த சாலையில் போக்குவரத்து அதிக ளவில் காணப்படும். இந்நிலையில், வியாழனன்று கோத்தகிரி - கூக்கல்தொரை சாலையில் சீக்கூர்மட்டம் பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட் டது. சாலையின் பக்கவாட்டில் 100 அடி உயர முள்ள செங்குத்தான பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு, மண் மற்றும் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. மேலும், மண் மற்றும் 30க்கும் மேற்பட்ட ராட்சத பாறைகள் சாலையில் உள்ள தடுப்புகளை உடைத் துக்கொண்டு, தாழ்வான பகுதியில் விவசாய நிலங்கள் மற்றும் நீரோடைக்குள் உருண்டு சென்று விழுந்தன. சாலை முழுவதும் மண் மற்றும் பாறைகள் நிறைந்து காணப்பட் டதால், கோத்தகிரி - கூக்கல்தொரை சாலை யில் முற்றிலுமாக போக்குவரத்து துண்டிக் கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலைத்துறை யினர், 2 பொக்லைன் எந்திரத்தை பயன் படுத்தி சாலையில் கிடக்கும் மண் மற்றும் பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், சாலையின் குறுக்கே விழுந்து கிடக்கும் ராட்சத பாறையை உடைக்கும் பணியிலும் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மாவட்ட ஆட்சியர் ச.பா.அம்ரித் நேரில் பார்வையிட்டு, சாலை சீரமைக் கும் பணிகளை விரைந்து முடிக்க அதிகா ரிகளுக்கு உத்தரவிட்டார். கோத்தகிரி - கூக்கல்தொரை சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், அவ்வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் நாரகிரி வழியாகவும், வெஸ்ட்புரூக், கக்குச்சி வழியாகவும் மாற்றுப் பாதைகளில் இயக்கப் பட்டு வருகின்றன. நிலச்சரிவு ஏற்பட்ட போது வாகனங்கள் எதுவும் அந்த வழியில் செல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க் கப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு மேற்புறம் உப்பக்கம்பை மற்றும் சீக்கூரி உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள விவசாயிகள் பயன்படுத் துவதற்காக அங்கு தண்ணீர் செல்லும் வகை யில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வந்த தால் அந்த கால்வாயில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. அப்போது, மண்ணில் ஏற்பட்ட ஈரப்பதம் காரணமாக மண் சரிவு ஏற்பட்டு, கால்வாயில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேறியுள்ளது. இதன் காரணமாக தான் மழை பெய்வது நின்று சில நாட்கள் ஆகியும் கூட, அங்கு நிலச்சரிவு ஏற்பட்டு, பாறை களும் சரிந்து விழுந்துள்ளது, என்றனர்.