விழிப்புணர்வு பேரணி
விழிப்புணர்வு பேரணி நாமக்கல், மார்ச் 13- குமாரபாளைத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாமக்கல் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில், வருவாய்த்துறை ஏற்பாட்டில் மதுபானங்கள், கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களுக்கான விழிப்புணர்வு பேரணி, குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ் விற்கு கல்லூரி முதல்வர் தலைமை வகித்தார். குமார பாளையம் வட்டாட்சியர் சண்முக வேல், கிராம நிர்வாக அலுவலர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் போதை பொருட் கள் உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த பதாகைகளை ஏந்தியபடி போதை பொருட்களை ஒழிப் போம்! உயிர்களை காப்போம்! என முழக்கமிட்டபடி முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர். மேலும் பொது மக்களுக்கு போதை பொருட்கள் ஒழிப்பு மற்றும் போதை பொருட்களை உட் கொள்வ தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணி கல்லூரியில் இருந்து துவங்கிய முக்கிய வீதிகள் வழி யாக சென்று, மீண்டும் கல்லூரியில் நிறைவு பெற்றது. இதில் ஏராளமான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
சாலையோர கடையை அகற்றும் முயற்சி மாவட்ட ஆட்சியரிடம் வியாபாரிகள் மனு
சாலையோர கடையை அகற்றும் முயற்சி மாவட்ட ஆட்சியரிடம் வியாபாரிகள் மனு தருமபுரி, மார்ச் 13- தருமபுரி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியா ளர் அலுவலகம் முன்பு, சேலம் நெடுஞ்சாலையோரம் சுமார் 25க்கும் மேற்பட்டோர் காய்கறி, கீரை வகைகள், வெங்காயம், பூண்டு உள்ளிட்ட சாலையோர கடைகள் நடத்தி வருகின்றனர். இதில் கிடைக்கும் சிறு வருவாயை நம்பியே வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்நிலை யில், சாலையோரம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மரம் நடுகிறோம் என்றுக்கூறி ஜேசிபி இயந்திரத்தின் மூலம் குழிதோண்டி வருகின்றனர். நெடுஞ்சாலைத் துறையின் இந்த நடவடிக்கையால் 25க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, ஏற்கனவே நாங் கள் கடை நடத்தி வந்த இடத்தில் எங்களை கடை வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி சாலை யோர வியபாரிகள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மனு அளித்தனர்.
நெமிலி ஊராட்சி துணைத்தலைவரை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
சேலம், மார்ச் 13- நெமிலி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவரின் அராஜகப் போக்கினைக் கண் டித்து தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், அரைநாள் வெளிநடப்பு போராட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவ ராக இருப்பவர் தீனதயாளன். இவர், தன்னு டைய அதிகாரத்தை தவறான முறையில் பயன் படுத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அனைத்து நிலை ஊழியர்களையும் கடுமை யாக மிரட்டுவது, கடும் சொற்களால் அவம திப்பது, தனது சுயலாபத்திற்காக விதிமுறை களுக்கு புறம்பாக வட்டார நிர்வாகத்தை செயல்பட வைப்பது, அந்த ஒன்றிய அலுவ லர்களின் குடும்பத்திற்கே மிரட்டல் விடுப்பது என, சமூக விரோதிகளை மிஞ்சும் வகையில் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், தீனதயாளனின் இத்தகைய காட்டுமிராண்டித் தனமான நடவடிக்கைகளைக் கண்டித்தும், அவர் மீது உரிய குற்றவியல் நடவடிக்கைக கள் மேற்கொண்டு அவரை பதவிநீக்கம் செய்ய தமிழக அரசை வலியுறுத்தியும், தமிழ் நாடு அரசு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதில் சங்கத்தின் மாநில துணைத்தலை வர் ந.திருவேரங்கன், தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ், மாவட்டப் பொருளாளர் வடிவேல் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவ லகங்கள் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜான் ஆண்ஸ்டீன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பரிசல் ஓட்டிகள் ஆர்ப்பாட்டம்
பரிசல் ஓட்டிகள் ஆர்ப்பாட்டம் தருமபுரி, மார்ச் 13- தருமபுரி மாவட்டம், ஒகே னக்கல் சுற்றுலாத் தலத்தில் தினம்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலை யில், பரிசல் இயக்கத் தெரி யாத நபர்களுக்கு பரிசல் உரி மம் வழங்குவதற்கு பணம் வசூலிக்கப்படுவதாக கூறப் படுகிறது. இதனையறிந்த பரி சல் ஓட்டிகள், பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தை முற்றுகையிட்டு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஊராட்சி ஒன் றிய அலுவலர் கிருஷ்ணன் மாவட்ட ஆட்சியரின் உத்த ரவு இல்லாமல் யாருக்கும் பரிசல் ஓட்டும் உரிமம் வழங்கப்படாது என்று வாக் குறுதி அளித்தார்.
பஞ்சு, நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை
பஞ்சு, நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை திருப்பூர், மார்ச் 13- பஞ்சு, நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு மனு அனுப்பியுள் ளார். இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் பின்னலாடைத் தொழிலானது ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி வரி மற்றும் தவறான பஞ்சுக் கொள்கை காரணமாக கடும் நெருக்கடியை சந்தித்து வருகி றது. கடந்த 6 மாதங்களாக பஞ்சு, நூல் விலை மாற்றமின்றி பின்னலாடத் தொழில் சீராக நடைபெற்று வந்தது. இந்நிலை யில், தற்போது பஞ்சு விலை ஒரு கேண்டி ரூ.55 ஆயிரமாக இருந்து வந்த நிலையில் தற்போது ரூ.65 ஆயிரமாக உயர்ந் துள்ளது. அதேபோல, நூலின் விலையும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.25 வரையில் உயர்ந்துள்ளது. இதனால், புதிய ஆர்டர் களை எடுப்பதில் பின்னலாடைத் துறையினர் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த நெருக்கடி காரணமாக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி 50 சதவீதம் குறைய வாய்ப்பு உள் ளதாக பின்னலாடைத் துறையினர் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக திருப்பூர் பின்னலாடைத் தொழிலை நம்பியுள்ள 5 லட்சம் தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே, பஞ்சு, நூல் விலையைக் கட்டுப்படுத்த வும், இடைத்தரகர்களின் பஞ்சு பதுக்கலைக் கட்டுப்படுத்த வும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.
மார்ச் 15 தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்:
மார்ச் 15 தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்: திருப்பூர், மார்ச் 13- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை நடை பெறுகிறது. இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ் துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில் நடைபெறுகிறது. இந்த முகாமில், தனியார் துறை வேலையளிப்பவர்கள் பங்கேற்று வேலைநாடுவர்களைத் தேர்வு செய்யவுள்ளனர். ஆகவே, இந்த முகாமில் வேலை நாடுவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டை மற்றும் சுயதகவல் படிவத்துடன் பங்கேற்கலாம். வேலையளிப்போரும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண் டும். இதில், எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முது நிலை பட்டதாரிகள் வரை ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்களும் பங்கேற்கலாம். இந்த முகாமில் பங்கேற்க இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த முகாமில் பங்கேற்கும்போது வேலை வாய்ப்பு அலுவலக அட்டையை புதுப்பித்துக் கொள்வ துடன், தகுதியிருப்பின் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெறவும் விண்ணப்பிக்கலாம். தனியார் துறைகளில் வேலையில் சேருவதால் தங்களின் வேலைவாய்ப்பு அலுவ லகப் பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2999152,94990-55944 ஆகிய எண் களில் தொரட்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழக்கடைகளில் ஆதிகாரிகள் ஆய்வு
பழக்கடைகளில் ஆதிகாரிகள் ஆய்வு உதகை, மார்ச் 13- ரசாயனம் பயன்படுத்தி வாழைப்பழம் பழுக்க வைக் கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பழக்கடைகளில் ஆய்வு செய்தனர். நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள கடைகளில் ரசாய னம் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட வாழைப்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவியது. இதனை தொடர்ந்து உதகை நக ராட்சி மார்க்கெட் வளாகத்தில் உள்ள பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராஜ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு வாழைப்பழங்கள் விற்பனை செய்யப்படும் பழக்கடைகள் மட்டுமின்றி பழங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள குடோன்களிலும் ஆய்வு செய்த னர். மேலும் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட வாழைப் பழங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங் களை உண்ணும் போது வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற உடல் உபாதைகளால் மக்கள் பெருமளவு பாதிக் கப்பட வாய்ப்புள்ளது. எனவே பழ வியாபாரிகள் செயற்கை யாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை விற்பதை தவிர்க்க வேண்டும். மீறி விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு தரங்கள் நிர்ணய சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப் படும், என்றனர்.
வேலை நேரங்களில் மது அருந்தினால் சஸ்பெண்ட்
உதகை, மார்ச் 12- வேலை நேரங்களில் மது அருந்தும் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை ஒரு வாரம் சஸ்பென்ட் செய்து உதகை அரசு போக்குவரத்து கழகம் நடவ டிக்கை எடுத்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பணிக்கு வரும் பேருந்து ஊழியர்களை மது அளவை கண்காணிக்கும் கருவியை வாயில் வைத்து ஊதச் சொல்லும் போது, பரிசோதனையில் நிர்ணயிக் கப்பட்ட மது அருந்தியது தென்பட்டால் பணி வழங்காமல் ஒரு வாரம் சஸ் பெண்ட் செய்யப்படுவர்கள் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்திருந் தது. இந்நிலையில், இப்பணிக்காக நியமிக்கப்பட்ட அலுவலர்கள் திடீர் ஆய்வு முலம் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, டெப்போவிலிருந்து வெளியே வரும் பேருந்துகள், பணிக்கு வரும் ஊழியர் களை திடீர் சோதனை செய்து கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது குறித்து பொது மேலாளர் நடராஜ் கூறுகையில், ‘‘ மது அருந் துபவரை பரிசோதனை மூலம் கண்கா ணிக்கப்படுகிறது. இதில், உதகை மண்டலத்தில் நான்கு ஓட்டுநர், 2 நடத் துநர், ஒரு மெக்கானிக் என, 7 பேர் பரிசோதனையில் சிக்கியதால் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள் ளனர். மேலும் ஊழியர்கள் விதிகளை கடைப்பிடிக்க போதிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கடைப்பிடிக்காத பட்சத்தில் அவர்களை உரிய நடவ டிக்கை எடுக்கப்படும், என்றார்.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் கைது
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் கைது சேலம், மார்ச் 13- சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், கொங்கணாபுரம் ஒன் ன்றியம், புதுப்பாளையம் ஊராட்சி பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை சுமார் 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கொங்கணாபுரத்தை அடுத்த வெள்ளா ளபுரம் கிராமம், பாச்சாலியூர் பகுதியைச் சேர்ந்த பழனியப் பன் என்பவர் இப்பள்ளியில் ஆசிரியராக கடந்த 10 ஆண்டுக ளாக பணிபுரிந்து வருகிறார். இவர் தொடர்ந்து இப்பள்ளி யில் பயின்று வரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல், செவ்வா யன்று இப்பள்ளியில் பயின்று வரும் சில மாணவிகளிடம் பழ னியப்பன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கொங்கணாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண் டனர். இதில் ஆசிரியர் பழனியப்பன் மாணவிகளுக்கு தொடர்ந்து இதேபோன்று பாலியல் தொல்லை கொடுத்து வந் தது உறுதியானது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கட்சியை விட்டு ஓடிய சமக மாவட்டச் செயலாளர்கள்
கட்சியை விட்டு ஓடிய சமக மாவட்டச் செயலாளர்கள் புதுக்கோட்டை, மார்ச் 13 - அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைப்பதாக செவ்வாய்க்கிழ மை அறிவித்தார். இந்நிலையில், அக்கட்சி யின் புதுக்கோட்டை மத்திய மாவட்டச் செய லாளர் எம்.ஏ.கனி, கிழக்கு மாவட்டச் செயலாளர் முகமது சுல்தான் ஆகியோர் வாழ்வுரிமைக் கட்சியில் இணைவதாக செவ்வாய்க்கிழமை மாலை அறிவித்தனர். இந்நிலையில், வாழ்வு ரிமைக் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலர் புலேந்திரன் க.முருகானந்தம் முன்னிலையில், புதுக்கோட்டையில் இணைப்பு நிகழ்ச்சி நடை பெற்றது. அப்போது, வாழ்வுரிமைக் கட்சி யின் மாவட்டச் செயலர் எஸ்.நியாஸ் உடனி ருந்தார்.