ஒன்றிய அரசின் பணமதிப்பி ழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி, மூலப் பொருட்களின் விலையேற்றம் உள் ளிட்ட காரணங்களால் கோவை உள் ளிட்ட இந்தியாவில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் கூடங் கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. மோடி அரசின் கார்ப்ரேட் கொள்கையின் விளைவாக திணறும் தொழில் களை மீட்டிட வேண்டும் என தொடர்ந்து தொழிற்கூட்டமைப்பி னர் போராடி வருகின்றனர். நடை பெற உள்ள நாடாளுமன்ற தேர்த லில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெரும் என்கிற கருத்துக் கணிப்புகள் வெளிவந்து கொண்டி ருக்கிற நிலையில், தமிழகத்தில் இந் தியா கூட்டணிக்கு தலைமை தாங் கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து சிறுகுறு தொழில்களை பாதுகாக்க பல் வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் மனு அளித்தனர். அம்மனுவில் தெரிவித்திருப்ப தாவது,
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து மக்களின் நல் வாழ்வுக்கு அயராது உழைத்து வரு கின்றீர்கள். இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநில மாக்க தங்கள் கடும் முயற்சிக்கு எங்களின் நன்றிகளை உறுத்தாக் கிக்கொள்கிறோம். தமிழ்நாட்டில் குறு சிறு தொழில் களின் வளர்ச்சி காண்பதற்காக இயந்திர கொள்முதல் மானிய மாக 25 சதவீதம் தந்து தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் தங்களுக்கு ஓராயிரம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். அதேநேரத்தில், நமது மாநிலத் தில் குறு சிறு தொழில்கள் நிறைந்து உள்ள நிலையில் மின்கட்டண உயர்வால் உண்மையாக தொழில்கள் பாதித்து வருகிறது. தங்கள் கருணை உள்ளத்தோடு மின்கட்டணத்தில் நிலைக்கட்ட ணத்தை கிலோ வாட்டுக்கு 430 சத வீதம் உயர்த்திய கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து நிலைக்கட் டண உயர்வை திரும்ப பெற பணி வுடன் தங்களை கேட்டுக்கொள் கிறோம். பீக் ஹவர்க்கான கட்ட ணத்தை கைவிடுமாறு கேட்டுக் கொள்வதுடன் தனி மீட்டர் பொருத் துவதையும் தங்கள் ஆணை பிறப்பித்து நிறுத்த வேண்டுகி றோம். ஒன்றிய அரசின் மூலமாக நமது மாநிலத்தில் தொழில் வளர்ச்சி காண்பதற்காக நமது நாட்டில் ஜிஎஸ்டி அமுலாக்கத் திற்கு பிறகு ஜாப்ஆர்டர்கள் செய் கின்ற குறு சிறு தொழில்கள் உதி ரிபாகங்கள் செய்கின்ற தொழில் முனைவோர்கள் தொடர்ந்து கடு மையான நெருக்கடிகளை சந் தித்து வருகிறோம். எங்கள் தொழில் களை பாதுகாப்பதற்கு குறு, சிறு தொழில்களுக்கு மூலப் பொருள் கொள்முதலுக்கும், உற் பத்தி பொருள் விற்பனைக்கும், 18 சதவீதமாக உள்ள ஜிஎஸ்டி யை 5 சதவீதமாக மாற்றி தர தங்களி டத்தில் கோரிக்கையாக முன் வைக்கிறோம். தங்களின் முயற்சி யால் ஜாப்ஆர்டர்கள் செய்கின்ற தொழில் முனைவோர்களுக்கு ஜிஎஸ்டி -யில் இருந்து விலக்கு அளித்து பழையபடி 2 சதம் டிடி எஸ் பிடித்தம் செய்வதற்கு ஆவண செய்ய வேண்டும். சர்ப்பாஸ் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு 6 மாத காலமாக இருந்ததை 3 மாதமாக மாற்றியதால் நெருக்கடிகளுக்கு தொழில் முனைவோர்கள் தள்ளப் ்பட்டு உள்ளனர். மீண்டும் 3 மாதங்க ளுக்கு பதிலாக 6 மாதங்களாக சர்ப் பாஸ் சட்டத்தை மாற்றிட வேண் டும். ஒன்றிய அரசு குறு சிறு தொழில்க ளின் வளர்ச்சிக்காக உதவுகின்ற வகையில் இயந்திரம் கொள்முதல் செய்கின்றவர்களுக்கு 15 சதவீதம் மானியம் வழங்கி வந்தன, குறு, சிறு தொழில் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருந்து வந்த நிலை யில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கி வந்த மானியத்தை நிறுத்தி விட்டார்கள். குறு, சிறு தொழில்களுக்கு உதவிடும் வகை யில் நிறுத்தப்பட்ட 15 சதவீதம் மானி யத்தை பெற்றுத்தர வேண்டும். மாநிலங்களிலும், மாவட்டங்க ளிலும், உள்ளுர்களிலும் வேலை வாய்ப்புகளை வழங்கி வருவது குறு சிறு தொழில்களே, குறு சிறு வளர்ச்சிக்கு உதவுகின்ற வகையில் தொழில்களில் முதலீடு செய்ய வங் கியில் பெறுகின்ற கடனுக்கான வட்டி விகிதம் 5 சதவீதத்தில் வழங் கிட ஆவண செய்ய வேண்டுகி றோம்.
அரசு பொதுத்துறை நிறு வனங்களிடமும், கார்ப்ரேட் உள் ளிட்ட பெரும் நிறுவனங்களிடமும் குறுந்தொழில் வளர்ச்சிக்கு உதவு கின்ற வகையில் ஜாப்ஆர்டர் உள் ளிட்ட உதிரிபாகங்கள் 25 சதவீ தம் கொள்முதல் செய்வதை உறுதி படுத்திட தங்கள் ஆவண செய்ய வேண்டுகிறோம். கோவை மாவட்டத்தில் 30 ஆயி ரத்துக்கும் மேல்பட்ட வாடகை கட் டிடங்களில் இயங்கி வரும் குறுந் தொழில்கள் நடத்தி வருகின்ற வர்களுக்கு உதவிடும் வகையில் ஒன்றிய அரசின் நிதியில் அடுக்கு மாடி குறுந்தொழில் பேட்டைகளை அமைத்து தருவதற்கு தங்கள் ஆவண செய்ய வேண்டுமாய் கேட் டுக்கொள்கிறோம். குறு சிறு தொழில்களின் வளர்ச்சிக்கு என தனி அமைச்சரை நியமிக்க வேண்டும். தனிவாரியம் உருவாக்க வேண்டும். குறு சிறு தொழில்களுக்கு தனி நிதி ஒதுக்கீ டும் செய்ய வேண்டும். கோவை வளர்ச்சி கண்ட மாவட்டமாகவும் அனுதினம் வளர்ச்சி கண்டுவரு கின்ற தொழில் நகரமாகும். பல் வேறு மாவட்டங்களில் இருந்தும் தொழில் நிமிரத்தமாக ஆயிரக்க ணக்காண மக்கள் குடியேறும் நகர மாகும். நாளுக்கு நாள் போக்கு வரத்து நெரிசல் கடுமையாக அதிக ரித்து வருகிறது. பல்லாயிரக் கணக்கான வாகனங்கள் கோவை நகரப் பகுதிக்குள் வந்து செல்ல சாலை வசதிகள் இல்லாததால் அனுதினமும் போக்குவரத்து நெரி சல் அதிகரித்து வருகிறது. கோவை யின் வளர்ச்சிக்கு தக்க வகை யில் உள்கட்டமைப்புகளை மேம் படுத்த நகரத்துக்கு உள்ளும் நக ரத்துக்கு வெளியேயும் மேம்பா லங்களை அமைப்பதற்கான கட்ட மைப்புக்கும், வட்ட சாலைகள் அமைத்திடும் பணிக்கும் தனிநிதி ஒதுக்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.