அவிநாசி, ஜன.30- அவிநாசி அருகே வஞ்சி பாளை யத்தில் ஞாயிறன்று விசைத்தறி வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கத்தினர் தெரு முனைப் பிரச்சாரத்தை துவக்கினார். கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவுச் செய்யும் விசைத்தறி களுக்கு அறிவித்த கூலி உயர்வை அமுல்படுத்த கோரியும், 2 லட்சம் விசைத்தறியாளர்களின் குடும்ப வாழ் வாதாரத்தை பாதுகாக்க கோரியும், கடந்த 8 ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்க மறுக்கும் ஜவுளி உற்பத்தியா ளர்களை கண்டித்தும், மாவட்ட முழு வதும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடை பெற்று வருகின்றது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக சிஐடியு, ஏஐடியூசி, ஐஎன்டியூசி, ஏடிபி, எம்எல்எப், எல்பிஎப், உள் ளிட்ட தொழிற்சங்கத்தினர் வஞ்சிபா ளையம், கணியாம்பூண்டி, வெங்க மேடு, கவுண்டம்பாளையம், கருணை பாளையம், வேலாயுதம்பாளையம், ஆட்டையாம்பாளையம், தெக்கலூர் உள்ளிட்ட இடங்களில் தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதில் சிஐடியு, விசைத்தறி தொழி லாளர் சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் சந்திரன், மாநி லத் தலைவர் முத்துசாமி, விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வா கிகள் முருகன், குட்டி (எ) மோகனசுந் தரம், ஏஐடியூசி செல்வராஜ், முத்து சாமி, ஏடிபி நடராஜன், எல்பிஎப் ரங்க சாமி உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.