கோவை, டிச. 15- தன்னிச்சையான உத்தரவின் மூலம் நிர்வாகப்பிரிவை சீரழிக்கும் மின்வாரியத்தின் நடவடிக்கைகளை கண்டித்து கோவையில் மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டுக் குழுவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் வியாழனன்று நடைபெற்றது. தமிழ்நாடு மின்வாரிய தலைமை யகத்தில் உள்ள நிர்வாகப் பிரிவு மற் றும் தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாகப் பிரிவையும் ஒன்றிணைத்து, அனைத் தையும் தலைமை பொறியாளர் பணி யமைப்பின் கீழ் கொண்டு வந்து அதற் கான உத்தரவை மின்வாரியம் தன் னிச்சையாக பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக மின்வாரியத்தில் உள்ள 39 பணியிடங்களை இல்லாமல் செய் வதற்கான நடவடிக்கை முன்னெடுக் கப்பட்டுள்ளது. மேலும், அலுவலர்க ளின் பதவி உயர்வும் கேள்விக்குறி யாக மாறியுள்ளது. தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசாமல் மின்வாரியம் கலந்து பேசா மல் சமீப காலமாக தன்னிச்சையான நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
இத்தகைய மின்வாரியத் தின் நடவடிக்கையை கண்டித்து, சென்னையில் தலைமை அலுவலகத் தினுள் மின்வாரியத்தின் நிர்வாகப் பிரிவு ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாநிலம் முழுவதும் கண் டன இயக்கங்களை நடத்த அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு அறைகூவல் விடுத்துள்ளது. இதன்ஒருபகுதியாக கோவை பவர்ஹவுஸ் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப் பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில், நிர்வாக பிரிவை சீரழிக் காதே, தன்னிச்சையான வாரிய உத்த ரவுகளை வெளியிடாதே, தொழிற்சங் கங்களை மதித்து நடந்திடு, வாரிய கட்டமைப்பை சீர்குலைக்காதே உள் ளிட்ட முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக போராட்டத்திற்கு சிஐ டியு மின் ஊழியர் மத்திய அமைப் பின் மண்டல செயலாளர் கோபால கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில், ஐக்கிய சங்கத்தின் தலைவர் வீரச்சாமி, ஏடிபி தமிழ்வானன் மற்றும் பெடரேசன் சங்கம் தொழிற்சங்கங்க ளின் நிர்வாகிகள் பங்கேற்று உரை யாற்றினர். கோரிக்கைகள் குறித்து சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப் பின் நிர்வாகி மதுசூதனன் சிறப்புரை யாற்றினார். இப்போராட்டத்தில் ஏரா ளமானோர் பங்கேற்றனர்.