districts

img

ஒன்றிய அரசிற்கு எதிராக டிராக்டர் பேரணி

ஈரோடு, ஜன. 19- குடியரசு தினத்தன்று ஒன்றிய அரசிற்கு எதிராக ஈரோட்டில் டிராக் டர் பேரணி நடத்துவது என விவ சாயிகள் மற்றும் தொழிற்சங்க கூட் டமைப்பினர் அறிவித்துள்ளனர். அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன் னணியின் ஈரோடு மாவட்ட ஆலோச னைக் கூட்டம் ஈரோடு சிஐடியு அலு வலகத்தில் நடைபெற்றது. ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் ஒருங் கிணைப்பாளரும், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளருமான ஏ.எம்.முனுசாமி தலைமை வகித்தார்.  இக்கூட்டத்தில் வரும் ஜனவரி  26 அன்று விவசாயிகள், தொழி லாளர்கள் இணைந்து விவசாயிக ளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை இயற்றுவதற்கான வாக் குறுதியை மீறியது. அறிவித்ததைப்  போல  மின்சார மசோதாவை வாபஸ் பெறாதது. தொழிலாளர் நலச்சட்டங்களை  4 தொகுப்பாக மாற்றியது உள்ளிட்ட ஒன்றிய அர சின் கொள்கைகளுக்கு எதிராக டிராக்டர் மற்றும் வாகனப் பேரணி  நடத்துவது என முடிவு செய்யப்பட் டது.  இப்பேரணியானது, தமிழ்நாடு  விவசாயிகள் சங்கச் செயலா ளர்கள் ஏ.எம்.முனுசாமி மற்றும்  சி.துளசிமணி ஆகியோர் தலை மையில் நடைபெறும். மேலும், பல  விவசாயிகள் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களை இணைத்து பேரணியை நடத்துவது எனத் தீர் மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சிஐடியு, எல்பிஎப், ஏஐடியுசி, தமிழ் நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஐ)  மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.