உடுமலை, டிச.20- திருமூர்த்தி அணையில் பல வருடங் களாக படகு சவாரி இயக்கப்படாமல் இருப்பதால், அணைக்கு வரும் சுற்று லாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும் பும் நிலை உள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலையிலி ருந்து சுமார் இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமூர்த்தி மலைக்கு மாநிலம் முழுவதும் அதிகள வில் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். செயற்கையாக உருவாக்க பட்ட பஞ்சலிங்க அருவி, அமணலிங் கேஸ்வரர் கோவில், சிறுவர் பூங்கா, நீச் சல் குளம் என அனைவரையும் கவரும் வகையில் சிறந்த சுற்றுலாத் தளமாக உள்ள திருமூர்த்திமலையில் அடிப் படை வசதிகள் இல்லை என்ற குற்றச் சாட்டு உள்ளது. இதனிடையே அணைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை கவ ரும் வகையில், தளி பேரூராட்சி நிர்வா கத்தால் 1980 ஆம் ஆண்டு படகு சவாரி துவங்கப்பட்டது. இதன்பின் 2002 ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் 3 பெரிய படகு, 2 சிறிய படகு வழங்கப்பட்டன. படகு சவாரியின் மூலம் கிடைக்கும் வருவா யில் 25 சதவிகிதம் பேரூராட்சி நிர்வா கத்திற்கும், 75 சதவிகிதம் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு என பகிர்ந்து கொள் ளப்படும் என்ற நிபந்தனையின் படி மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்த படகு சவாரி கடந்த பல ஆண்டுகளுக்கு மேல் நடைபெறாமல் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறு கையில், அதிகமான சுற்றுலாப் பயணி களை கவர்ந்த படகு சவாரி, தற்பொ ழுது பழுதடைத்த படகுகள் மட்டும் காட்சி பொருளாக உள்ளது. படகுகள் அனைத்தும் வீணாக போனது. இதை சரி செய்ய பேரூராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீண் டும் புதிய படகுகள் பெற்று திட்டம் செயல் படுத்த வேண்டும் என்பதே கோரிக்கை யாக உள்ளது. சிலர் தனியார் படகு சவாரி திட்டத்தை தொடங்க உள்ள தாக தெரிகிறது. இதை அனுமதிக்கா மல் அரசு சார்பில் மட்டும் படகு சவாரி திட்டம் தொடங்க வேண்டும், என்ற னர். திருமூர்த்திமலையை மிகவும் சிறந்த சுற்றுலாத் தளமாக மாற்றுவோம் என்று அரசு தரப்பில் பல ஆண்டுகள் தெரிவித்து வருவது மட்டுமே தொடர் கிறது. ஆனால், தற்பொழுது வரை அதற் கான எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள் ளது.