உதகை, அக்.1- உதகை இரண்டாம் பருவ மலர்க்கண்காட்சி துவங்கிய நிலையில், ஞாயி றன்று அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை புரிந் தனர். உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடப்பாண்டுக்கான இரண்டாம் பருவ மலர்க்கண்காட்சி செப்.29 தேதியன்று சுற்று லாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் மு.அருணா ஆகி யோரால் துவக்கி வைக்கப்பட்டது. பூங்கா வில் பல்வேறு வகையான 4 லட்சம் மலர் செடிகளுக்கான பாத்திகள் அமைக்கப் பட்டிருந்தன. தற்போது பூத்து சுற்றுலாப் பயணிகளின் கண்ணிற்கு விருந்தாக காட்சி யளித்து வருகிறது. மேலும், 700 வகையான மலர்ச்செடி களான டேலியா, சால்வியா, இன்காமேரி கோல்டு, பிரஞ்ச்மேறிகோல்டு, டெய்சி, காலண்டுலா, டயான்தஸ், பிரிமுலா, பால்சம், அஜிரேட்டம், சைக்ளமன், ஜெரே னியம், டெல்பினியம், கொச்சியா, ஆந்தூரியம் போன்ற 21,500 மலர்த் தொட்டி கள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றில், பசுமை தமிழகத்தை வலியுறுத்தி 600 மலர்த் தொட்டிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மேலும், 7500 மலர்த் தொட்டிகளால் சந்திராயன் விண்கலம், நெகிழிப்பைளை தவிர்த்து 1000 மலர்த் தொட்டிகளில் மீண்டும் மஞ்சப்பை திட்டம் ஆகியவை அலங்கரிக் கப்பட்டிருந்தன. இம்மலர்க் கண்காட்சி ஒரு மாதம் நடைபெறுகிறது. இந்நிலையில் சனி, ஞாயிறு மற்றும் அக். 1ஆம் தேதி காந்தி ஜெயந்தி தொடர் விடு முறையாகும். இதனால், உதகையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குறிப்பாக, உதகை தாவரவியல் மலர்க் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர். இம்மலர்க்கண்காட்சியை காண 2 லட்சத்திற்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என தோட் டக்கலை இணை இயக்குநர் மற்றும் இதர அலுவலர்கள் தெரிவித்தனர்.