districts

img

ஆழியார் அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கோவை, ஜன.1- பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணை மற்றும் கவிய ருவியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலா பயணி களின் வருகை அதிகரித்து காணப்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்து அமைத்துள் ளது ஆழியாறு அணை மற்றும் கவியருவி. தமிழகத்தின்  முக்கிய சுற்றுலா தளமாக விளங்கி வரும் இப்பகுதிக ளுக்கு, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், வார விடுமுறை மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஆழியார் அணை  மற்றும் கவியருவிக்கு, வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலா பயணிகள்  காலை முதலே வரத் தொடங்கினர்.  சுற்றுலா பயணிகளின் வருகையால் ஆழியார் கவிய ருவி அருகே பார்க்கிங் செய்ய முடியாமல் சிலர் தவிப்புக்கு  உள்ளாகினர். மேலும், அருவியில் கடந்த சில வருடங்க ளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தடுப்பு கம்பிகள் தற்போது இல்லாததால், சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் குளித்து வரு கின்றனர். எனவே, சுற்றுலா பயணிகளின் நலன் கருதி  தடுப்பு கம்பிகளை அமைத்து தர வேண்டும் என வனத்து றைக்கும், தமிழக அரசுக்கும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். இதேபோன்று, புத்தாண்டை யொட்டி கோவை குற்றாலத்திற்கு ஏரளமான சுற்றுலாப் பய ணிகள் குவிந்தனர்.