கோபி, ஜன.17- விடுமுறை நாட்கள் என்ப தால், கொடிவேரி அணையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். ஆனால், பாசன வாய்க்காலில் அணையில் இருந்து குறைந்த அளவே தண் ணீர் திறக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கொடி வேரி அணையில் தண்ணீர் அருவி போல் கொட்டுவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வருகை தரு கின்றனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை என்பதால், கொடிவேரி அணையில் குடும்பத்துடன் கொண்டாட காலை முதல் சுற் றுலாப் பயணிகள் கூட்டம் கூட்ட மாக வந்து குவிந்தனர். இந்நிலையில், கொடிவேரி அணையில் வழக்கமாக அதிக ளவில் தண்ணீர் வெளியேறும் நிலையில் தற்போது பாசனத்திற்கு தடப்பள்ளி மற்றும் அரக்கன் கோட்டை வாய்க்க்கால்களில் பாச னத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 50கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேறியது. இத னால் கொடிவேரியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் என நினைத்து எதிர்பர்த்து வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத் துடன் பாறைகளுக்கு நடுவே குறைந்தளவு தண்ணீரிலும் ஆற்றில் தேங்கி செல்லும் நீரில் குளித்து சென்றனர். ஏராளமான சுற்றுலாப் பயணிகளின் கொடிவே ரியில் குவிந்ததால், பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஐம்பதுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவை குற்றாலம் இதேபோன்று, தொடர் விடு முறை என்பதால் கோவை குற்றா லத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். கோவையில் இயற்கை எழில் கொஞ்சும் சிறுவாணி மலைத் தொடர்களின் அடிவாரத்தில், கோவை குற்றாலம் அருவி உள்ளது. கோவை மாநகரத்தில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த அருவி உள்ள தால், சமீப காலமாக வெளி மாநிலத் தில் உள்ளவர்கள் கூட வந்து கண்டு களித்து செல்லும் இடமாக கோவை குற்றாலம் உள்ளது. இந்நிலையில், தொடர் விடுமுறை என்பதால், கோவை குற்றாலத்தில் குளித்து மகிழ்ந்திட ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்தனர். இதற்கான பாதுகாப்பு பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டனர். நீலகிரி பொங்கல் பண்டிகையை யொட்டி விடப்பட்ட, தொடர் விடு முறை காரணமாக உதகை படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிக ளின் வருகை அதிகரித்து காணப் பட்டது.