districts

img

ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

உதகை,  டிச.25- தொடர் விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில்  இரு நாட்களில் 40 ஆயிரம்  சுற்றுலா  பயணிகள் குவிந்தனர். நீலகிரி மாவட்டத்தில் மிகவும்  இதமான காலநிலை நிலவுகிறது. மாலை நேரத்தில், பனி மழை பெய்வ தால், சுற்றுலா பயணிகள் பெரிதும் ரசித்து வருகின்றனர். இதனை ரசிக்க  பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பய ணிகள் நீலகிரி மாவட்டத்தில் குவிந்து  வருகின்றனர். இந்நிலையில், தொடர் விடு முறை மற்றும் கிறிஸ்துமஸ் விழா  ஆகியவற்றையொட்டி ஊட்டியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.  ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் மலர்களை ரசிக்கும்  சுற்றுலா பயணிகள் நின்று புகைப்ப டம் எடுத்தனர். இதேபோன்று, படகு  சவாரி,தொட்டபெட்டா காட்சி முனை ,சூட்டிங் மட்டம்,பைன்சோலை ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் குடும்பத்துடன் சுற்றுலா  பயணிகள் வந்து இயற்கை காட்சி களை ரசித்தனர். சுற்றுலா பயணி கள் வருகையால் தங்கும் விடுதிகள் நிரம்பின. வாகனங்களால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டது.  இரண்டு நாட்களில் மட்டும் சுமார்  40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா  பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.