சிபிஎம் கிளைச் செயலாளர்கள் தேர்வு
சேலம், நவ.5- சிபிஎம் கிளை மாநாடுகள் நடைபெற்று, செயலாளர் கள் தேர்வு செய்யப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் தாலுகா விற்குட்பட்ட கிளைகளில் மாநாடுகள் நடைபெற்று, செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, சேலம் உருக்காலை ஏ கிளைச் செயலாளராக மணி, பி கிளைச் செயலாளராக சண்முகம், சி கிளைச் செய லாளராக சின்னுசாமி, பெண்கள் கிளைச் செயலாள ராக செல்வி, மாரமங்கலத்துப்பட்டி கிளைச் செயலாள ராக எஸ்.பூங்கோதை, கன்னங்குறிச்சி ஏ கிளைச் செய லாளராக கவுன்சிலர் தேவி, பி கிளைச் செயலாளராக ரமணி, அய்யம்பாளையம் ஏ கிளைச் செயலாளராக சண்முகம், பி கிளைச் செயலாளராக மோகன்ராஜ், வேம்படிதாளம் கிளைச் செயலாளராக வீரிசெட்டி, திருவல்லிபட்டி கிளைச் செயலாளராக தங்கராஜ், கொண்டப்ப நாயக்கன்பட்டி கிளைச் செயலாளராக எஸ்.ரகுபதி, சித்தனூர் கிளைச் செயலாளராக அண் ணாமலை, வேடுகத்தாம்பட்டி கிளைச் செயலாளராக எஸ்.பழனிசாமி, தளவாய்பட்டி பி கிளைச் செயலா ளராக வி.ராமசாமி, வட்ட முத்தம்பட்டி கிளைச் செயலா ளராக இ.அழகேசன், சேலத்தாம்பட்டி கிளைச் செயலா ளராக ஜே.பி.விஸ்வநாதன், தளவாய்பட்டி பெண்கள் கிளைச் செயலாளராக தாமரைச்செல்வி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இம்மாநாடுகளில் கட்சியின் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா, தாலு காச் செயலாளர் கே.எஸ்.பழனிசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் டி.பரமேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொழில்நுட்ப கல்லூரியில் தீ விபத்து
கோவை, நவ.5- கோயம்புத்தூர் தொழில் நுட்பக்கல்லூரியின் முதல்வர் அறையில் தீ விபத்து ஏறபட்டதால், பர பரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், அவிநாசி சாலையில், ஹோப்ஸ் அருகே அமைந்துள்ள கோயம்புத்தூர் தொழில் நுட்பக் கல்லூரியின் முதல்வர் அறையில் இருந்து புகை வெளி யேறியுள்ளது. சற்று நேரத்தில் திடீரென தீ மள மள வென பரவியது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினர் பீளமேடு காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இதன்பின் உள்ளே சென்று பார்த்த போது, கல்லூரி முதல்வர் அறையிலிருந்த குளிர் சாதனப் பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இவ்விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பனிக்காலத்தில் பூக்கும் அஜிலியா மலர்களை கண்டு ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்!
உதகை, நவ.5- உதகை அரசு தாவரவியல் பூங்காவில், பனிக்காலத் தில் பூத்துள்ள அஜிலியா மலர்களை, சுற்றுலாப் பயணி கள் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியடைந்து வருகின்ற னர். மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்திற்கு அண்டை மாநிலங்களான கேரளம், கர் நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதி களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோ றும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலானோர் உலகப் புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவை கண்டு ரசித்து செல்கின்றனர். பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் மற்றும் அரிய வகை மரங்கள் ஆகியவை உள்ளன. அதேபோல் பல வெளிநாடுகளில் காணப்படும் புகழ் வாய்ந்த மரங்கள் மலர் செடிகள் இங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவை கள் அந்தந்த பருவங்களில் மட்டும் பூக்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளன. இந்நிலையில், பூங்காவின் மேல்பகுதியில் அமைந்துள்ள இத்தாலியன் பூங்காவில் பனிக்காலத்தில் குறிப்பாக அக்டோபர் மாதம் முதல் டிசம்பருக்குள் பூக்கும் அஜிலியா மலர்கள் அதிகளவு தற்போது பூத்துள்ளன. இந்த மலர்கள் எப்போதும் பனிக் காலத்தில் மட்டுமே பூக்கக்கூடியது. சில மாதங்கள் இந்த செடிகளில் மலர்களின்றி புதர் போன்று காட்சிய ளிக்கும். தற்போது வெள்ளை மற்றும் ஊதா, இளஞ் சிவப்பு நிறத்தில் பூத்துள்ள அஜிலியா மலர்கள் சுற்று லாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதன் அருகே நின்று சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து உற்சாகமடைந்து வருகின்றனர்.
பெரியார் பல்கலை., நிர்வாகத்தின் தொடர் அத்துமீறல் உயர்கல்வித்துறை செயலாளருக்கு ஆசிரியர் சங்கம் புகார்
சேலம், நவ.5- பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் தொடர் அத்துமீறலை தடுத்து நிறுத்த வேண் டும் என வலியுறுத்தி, உயர்கல்வித்துறை செயலாளருக்கு புகார் மனு அனுப்பப்பட் டுள்ளது. இதுகுறித்து சேலம் பெரியார் பல்கலைக் கழக ஆசிரியர் சங்க தலைவர் வைத்தியநா தன், தமிழக உயர்கல்வித்துறை செயலாள ருக்கு அனுப்பியுள்ள மனுவில், பெரியார் பல் கலைக்கழக ஆசிரியர் சங்க பொதுச்செயலா ளர் பிரேம்குமார், பல்கலைக்கழகத்தில் நடக் கும் விதிமீறல்களை அரசுக்கு தெரிவித்ததன் காரணமாக 2 ஆண்டுகளுக்கும் மேலாக பணியிடை நீக்கத்தில் உள்ளார். பல்வேறு விதிகள், நீதிமன்ற உத்தரவுகள் இதை தவறு என தெரிவித்தும், துணைவேந்தர் கண்டு கொள்ளாமல் உள்ளார். எனவே, அவர் மீண் டும் பணிக்கு திரும்ப, தமிழக அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். பட்டியலின ஆசிரி யர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வுக்கான கோப்புகளை அனுப்பா மல் காலம் கடத்தி வருகின்றனர். மேலும், அவர்களை மரியாதை குறைவாக நடத்துப வர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நட வடிக்கை எடுக்க வேண்டும். கல்வியியல் துறைக்கு நிரந்தர பட்டியலின பெண் பேராசி ரியை இருக்கும்போது, தற்காலிக ஆசிரி யரை துறைத்தலைவராக நியமித்தது கண்டிக் கத்தக்கது. முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர் கள் தங்களது ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பிக்க, மற்ற எந்த பல்கலைக்கழகத்தி லும் இல்லாத விதிமுறையை பின்பற்ற சொல் வதால், பல மாணவர்கள் தங்களது ஆய் வினை முடிக்காமல் படிப்பை நிறுத்தி வருகின் றனர். இட ஒதுக்கீட்டிற்கு எதிராகவும், சமூக நீதிக்கு புறம்பாகவும் நிரப்பப்பட்ட அனைத்து பணியிடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும், என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் 11,677 பேர் பயன்பெற்றுள்ளதாக தகவல்
திருப்பூர், நவ.5- திருப்பூர் மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரி மைத் துறையின் சார்பில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கல் லூரியில் பயிலும் 7ஆயிரத்து 69 மாணவிகள் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 4 ஆயிரத்து 608 மாணவர்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வீதம் வங்கி கணக்கில் செலுத்தப் பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரி வித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் ஆண்டில் 1,249 மாணவிகளுக்கும், 2023-2024 ஆம் ஆண்டில் 2,989 மாணவிகளுக்கும், 2024-2025 ஆம் ஆண் டில் இதுவரை 2,831 மாணவிகளுக்கும் என 65 கல்லூரிகளில் பயிலும் 7,069 மாணவியர்களுக்கும், தமிழ்ப் புதல்வன் திட்டத் தின் கீழ் 2024-2025 ஆம் ஆண்டில் இதுவரை 58 கல்லூரிக ளில் பயிலும் 4,608 மாணவர்கள் கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூபாய் ஆயிரம் வீதம் வங்கி கணக்கிற்கு நேரடி யாக செலுத்தப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
பயிற்சி முகாமிற்கு சிக்கண்ணா கல்லூரி மாணவர் தேர்வு
திருப்பூர், நவ.5 - டெல்லியில் ஜனவரி 26ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின அணி வகுப்பில் கலந்து கொள்ள மாநிலங்களுக்கான நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் தேர்வு நடைபெற்று வரு கிறது. பாரதியார் பல்கலை கழகத்திற்குட்பட்ட கல்லூரிக ளின் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது. இதில் எட்டு மாணாக்கர்கள் (நான்கு மாணவர் கள், நான்கு மாணவிகள்) தேர்வு செய்யப்பட்டு, கர்நாடக மாநிலத்தில் உள்ள தாவன்கிரி பல்கலை கழகத்தில் நவம்பர் 5 முதல் 14ஆம் தேதி வரை நடைபெறும் தென்னிந்தியா அள விலான பயிற்சி முகாமில் கலந்து கொள்கிறார்கள். இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, அந்தமான் மற்றும் லட்சத்தீவுகளில் உள்ள நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் 200 பேர் கலந்து கொள்கிறார்கள். இதிலிருந்து சிறப்பாக செயல்படும் 40 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, டெல்லி யில் ஜனவரி மாதம் நடைபெறும் அணிவகுப்பு பயிற்சியில் கலந்து கொள்வார்கள். இந்நிலையில், பாரதியார் பல்கலைக் கழகத்தில் தேர்வு செய்யப்பட்ட எட்டு மாணவர்களில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் அலகு 2 மாண வன் கோகுல் (வணிகவியல் துறை) கலந்து கொள்கிறார். அரசு கல்லூரிகளில் இருந்து தேர்வான ஒரே மாணவர் என்பது குறிப் பிடத்தக்கது. கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளச் சென்ற கோகுலை கல்லூரி முதல் வர் கிருஷ்ணன் உள்ளிட்ட ஆசிரியர்கள் வழியனுப்பினர்.
நவ. 25 முதல் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர்! அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல்
புதுதில்லி, நவ. 5 - நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25 அன்று துவங்கி டிசம்பர் 20-ஆம் தேதி வரை நடை பெறும் என ஒன்றிய நாடா ளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். “இந்திய அரசின் பரிந்துரையின் பேரில், 2024ஆம் ஆண்டின் குளிர் காலக் கூட்டத் தொடருக் காக நவம்பர் 25 முதல் டிசம் பர் 20 வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டுவதற்கான முன்மொ ழிவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் ஒருபகுதியாக இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட 75-ஆவது ஆண்டு விழா, சம்விதன் சதன் மைய மண்டபத்தில் ‘நவம்பர் 26’ (அரசியலமைப்பு தினம்) அன்று கொண்டாடப்படும்” என்று கிரண் ரிஜிஜூ தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் குறிப் பிட்டுள்ளார். ஜார்க்கண்ட் மற்றும் மகா ராஷ்டிர மாநில சட்டப்பேர வைத் தேர்தல் முடிவுகள் நவம்பர் 23 அன்று வெளியாக வுள்ள நிலையில், அதன் பின்னர், நவம்பர் 25 முதல் குளிர்காலக் கூட்டத் தொடருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரின் போது, தற்போது நாடாளு மன்ற கூட்டுக்குழு விசார ணையில் உள்ள ‘வக்பு சட்டத் திருத்த மசோதா’வை நிறைவேற்ற ஒன்றிய அரசு முயற்சி மேற்கொள்ளும்; அத்துடன், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவையும் அது அறிமுகப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. “நாங்கள் இப்போது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நோக்கிச் செயல்படுகி றோம். மேலும், இந்தியா ஒரு நாடு, ஒரே சிவில்சட்டத்தை நோக்கி நகர்கிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நவ. 7 முதல் தமிழகத்தில் 4 நாள் மஞ்சள் எச்சரிக்கை
சென்னை, நவ. 5 - தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதி களின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நில வுகிறது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங் களுக்கு நவம்பர் 7 முதல் 10-ஆம் தேதி வரை 4 நாட் களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, செங்கல் பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டி னம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாத புரம் ஆகிய 9 மாவட்டங் களில் 6.5 செ.மீ. முதல் 12 செ.மீ. வரை மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப் பட்டுள்ளது. மேலும், தெற்கு வங்கக் கடலின் வடக்கு பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நவம்பர் 6,7,8 ஆகிய தேதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடை யிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என வானி லை மையம் எச்சரித்துள்ளது.
கதவணை ஷட்டர் திறக்க முடியாததால் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து மக்கள் அவதி
மேட்டுப்பாளையம், நவ.5- வெள்ளிப்பாளையம் மின் கதவணை ஷட்டர் திறக்க முடி யாமல் போனதால், தேங்கிய தண்ணீர் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள் ளாகினர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், சிறுமுகை மற் றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திங்களன்று இரவு முதல் செவ்வாயன்று அதிகாலை வரை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இந் நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரண மாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க துவங்கியதை யடுத்து, நீர் மின் உற்பத்தி பணிக்காக பவானியாற்றில் நீர் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் சமயபுரம், வெள்ளிப் பாளையம் மின் கதவணை வழியாக பவானிசாகர் அணைக்கு அனுப்பப்பட்டு, மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந் நிலையில், செவ்வாயன்று அதிகாலை வெள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள மின் கதவணையின் ஷட்டரை இயக்கும் ரோப்புகளில் திடீர் பழுது ஏற்பட்டது. இதனால், தடுப் பணையில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற முடியாமல் போனது. தடுப்பணையில் இருந்து அருகிலிருந்த சுமார் 50க் கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால், அப்ப குதி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் நகர் மன்றத் தலைவர் மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி, நகராட்சி ஆணையாளர் அமுதா சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீர் புகுந்த வீடுகளுக்குள் இருந்தவர்களை துரித கதியில் மீட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனர். அவர்களுக்கு மண்டபங்களிலேயே உணவுகள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. வீடுகளை விட்டு வெளியேறாமல் இருந்தவர்களுக்கு வீடுகளுக்கு நேரில் சென்று உணவுகளை வழங்கினர். பொறியா ளர்கள் மற்றும் ஊழியர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தற்போது மின் மோட்டார் இயக்கப்பட்டு மதகு கள் (ஷட்டர்கள்) திறக்கப்பட்டுள்ளன. இதனால் தற்போது வெள்ளம் பாதித்த பகுதிகளில் தண்ணீர் வடிய துவங்கி யது.