உதகை, ஏப்.11- உதகை அருகே பைக்காரா அணை யில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சமவெளி பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் மலைப்பிரதேச மான உதகைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்த வண் ணம் உள்ளது. இந்நிலையில், வார விடு முறை நாளான ஞாயிறன்று பைக்காரா படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பய ணிகள், மோட்டார் படகுகள், அதிவேக படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர். சவாரியின் போது ரம்மியமான பைக்காரா அணை, அடர்ந்த வனப்பகுதிகளை பார் வையிட்டனர். தற்போது 100 அடி கொள்ள ளவு கொண்ட அணை நீர்மட்டம் 30 அடியாக குறைந்துவிட்டது. இதனால் தற்காலிகமாக தடுப்புடன் கூடிய நடைபாதை அமைக் கப்பட்டு உள்ளது. இதனால் அடிப்பகுதி வரை நடந்து சென்று சவாரி செய்ய வேண்டிய நிலை காணப்படுகிறது. இருப்பி னும் தண்ணீரை கிழித்துக்கொண்டு அதிவேகமாக செல்லும் அதிவேக படகுக ளில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சூட்டிங்மட்டம் சுற்றுலா தலத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. மலைமுகட்டில் நின்றபடி இயற்கை காட்சிகளை கண்டு ரசித்ததுடன், புகைப்படம் எடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகை யில் காட்சிக்கு வைக்கப்பட்ட பூந்தொட்டிக ளில் பூத்துக்குலுங்கிய பல வண்ண மலர் களை கண்டு ரசித்தனர். மேலும் ஜப்பான் பூங்கா, இத்தாலியன் பூங்கா, பெரணி இல் லம், கள்ளி செடிகள் கண்ணாடி மாளிகை, இலை பூங்கா, அலங்கார செடிகளை பார் வையிட்டனர். இது தவிர உதகை படகு இல்லம், ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற் றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இதுமட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து உதகை மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் பய ணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்ற னர். அதன்ஒருபகுதியாக ஞாயிறன்று மேட் டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு வந்த மலை ரயிலில் 230 இருக்கைகளும் நிரம்பி வழிந்தது. மலைரயிலில் பயணி க்கும் போது குகைகள், பசுமையான தேயிலை தோட்டங்கள், மலைகளை மோதிச் செல்லும் மேகக் கூட்டங்களை கண்டு ரசித்தனர். கோடை சீசன் தொடங்கி உள்ளதால், உதகை சுற்றுலா பயணிக ளால் களைகட்டி வருகிறது.