உடுமலை, ஜூன் 19- பஞ்சலிங்கம் அருவியில் கனமழை காரணமாக வெள் ளப் பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள திரு மூரத்தி மலைக்கு தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். திருமூர்த்தி அணை, பஞ்சலிங்க அருவி, அமணலிங்கேஸ்வர் கோவில், வண்ண மீன் காட்சி யகம் ஆகியவற்றை பார்வையிட்டு செல்கின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் விசேச தினங்களில் அமண லிங்கேஸ்வரர் கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வரு வார்கள். சாமி தரிசனம் செய்துவிட்டு பக்தர்கள் மற்றும் சுற்று லாப் பயணிகள் பஞ்சலிங்க அருவியில் குளிக்கச் செல்வது வழக்கம். இந்நிலையில், சனியன்று இரவு திடீரென திருமூர்த் திமலை பகுதியில் கனமழை கொட்டியதால் பஞ்சலிங்க அரு வியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் யாரும் பஞ்ச லிங்க அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள் ளனர். ஞாயிறன்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிக்க வந்தனர். ஆனால் தடை கார ணமாக ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.