திருப்பூர், ஜன.23- 2022 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்புக் கொண்ட கூலி உயர்வை பெற்றுதர கோரி, திங்களன்று கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட் டத்தில் மனு அளித்தனர். இதுகுறித்து கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமை யாளர்கள் சங்கத்தினர் அளித்த மனு வில் கூறியுள்ளதாவது, கோவை, திருப் பூர் மாவட்டத்தில் 2 லட்சத்துக்கும் மேற் பட்ட சாதா விசைத்தறிகள் உள்ளன. இதில், 90 சதவீத விசைத்தறிகள் கூலி யின் அடிப்படையில் தொழில் செய்யப் படுகின்றது. கடந்த ஆண்டுகளில் மின் கட்டணம், அத்தியாவசியப் பொருள்க ளின் விலை, தொழிலாளர்களின் கூலி, அச்சு பிணைத்தல், இழை வாங்குதல், வேன் வாடகை உள்ளிட்ட அனைத்து செலவினங்களும் பலமடங்கு உயர்ந் துள்ளது. மேலும், தற்போது நிலவும் தொழிலாளர்கள் பற்றாக்குறையாலும் இத்தொழில் சிரமத்துக்கு உள்ளாகி யுள்ளது. எனவே, தொழிலாளர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கூலி உயர்வு வழங்கினால் மட்டுமே இந்த தொழிலைத் தொடர்ந்து நடத்த முடி யும் என்கிற சூழல் உள்ளது. சரியான கூலி உயர்வு பெற்று 11 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டுக்கான கூலி உயர்வு ஒப்பந் தத்தை ஜவுளி உற்பத்தியாளர்கள் விசைத்தறியாளர்களுக்கு கொடுக்கா மல் காலம் தாழ்த்தி வந்தனர். இதை யடுத்து பல கட்ட போராட்டங்களுக்குப் பின்னர் கடந்த 2022 ஆம் ஆண்டில் சோமனூர் ரகத்துக்கு 23 சதவீதம், பிற ரகத்துக்கு 20 சதவீதம் என்பதைக் குறைத்து கோவை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் முன்னிலையில் மறு ஒப் பந்தமாக சோமனூர் ரகத்துக்கு 19 சத வீதம், பிற ரகத்துக்கு 15 சதவீதம் கூலி உயர்வு கொடுப்பதாக ஜவுளி உற்பத் தியாளர்கள் ஒப்புக்கொண்டனர். ஆனால், தற்போது வரை நடைமுறைப் படுத்தப்படவில்லை. எனவே, 2022 ஆம் ஆண்டு ஒப்பந்தத்திலிருந்து சோமனூர் ரகத்துக்கு 60 சதவீதமும், இதர ரகங் களுக்கு 50 சதவீதமும் கூலி உயர்வு பெற்றுக்கொடுத்து லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.