districts

கோவைக்குப் பேருந்து பற்றாக்குறை

திருப்பூர், ஜூன் 2- திருப்பூரில் இருந்து கோவைக்குச் செல் வதற்குக் காலை நேரங்களில் போதிய பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் பய ணிகள் திண்டாடும் நிலை ஏற்படுகிறது. பின்னலாடை தொழில் நகரமான திருப் பூரில் இருந்து கோவைக்குச் செல்வதற்கு அவிநாசி வழித்தடம், பல்லடம் வழித்தடம் என இரண்டு பாதைகளில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  இந்த இரண்டு வழித்தடங்களிலும் எப் போதுமே பயணிகள் கூட்டம் நிரம்பி வழி யும். குறிப்பாகக் கல்லூரிகள், கல்வி நிலை யங்கள் மற்றும்  ஆகியவற்றுக்கு இந்த வட்டாரத்தில் கோவை முக்கிய மையமாக உள்ளது. எனவே ஒவ்வொரு நாளும் பலநூறு, பேர் திருப்பூரில் இருந்து சென்று வருகின்றனர். இத்துடன் தொழில், வர்த்தக தேவைகளுக்கும் தினமும் ஏராளமானோர் இந்த இரு நகரங்களுக்கும் சென்று வரு கின்றனர். இது போக இந்த இரண்டு வழித்தடங்க ளிலும் அவிநாசி, பல்லடம், தெக்கலூர், கார ணம்பேட்டை, கருமத்தம்பட்டி, சூலூர் உள் ளிட்ட பல ஊர்களும் உள்ளன. இந்த ஊர்க ளுக்கும் பலர் தினமும் சென்று வரும் நிலை யும் உள்ளது. எனவே எப்போதும் திருப்பூர் - கோவை வழித்தடத்தில் கூட்டம் நிரம்பி வழியும் நிலை தான் உள்ளது. ஆகையால் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு பேருந்து இயக்கப் படுகிறது.

ஆனால் சமீப காலங்களில் இந்த வழித்த டத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துக ளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. தனியார் பேருந்துகள் “பீக் ஹவர்” எனப்ப டும் காலை, மாலை நெருக்கடி நேரங்களில் வழக்கமான படி இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில் எந்த விதிமுறை, கட்டுப்பாடும் இல்லாமல் பயணிகளைப் பொதி மூட்டை போல திணித்துக் கொண்டு செல்கின்றனர்.  எனினும் இந்த நேரத்தில் பயணம் செய்ய காத்திருக்கும் பயணிகள் எண் ணிக்கை அதிகமாக இருப்பதால் பேருந் துகள் கிடைக்காமல் அவர்கள் அவதிப் படும் நிலை உள்ளது.  அதுவும் குறிப்பாக வாரத்தின் முதல் நாள் திங்கள்கிழமை வழக்கமாக இயக்கப் படும் பேருந்துகள் கூட இந்த வழித்தடத் தில் இயக்கப்படுவதில்லை. இதனால் தின சரி சென்று வரக்கூடிய கல்லூரி மாணவர் கள் உள்ளிட்ட பயணிகள் படும் சிரமம் சொல்லி மாளாது.

இதுபற்றி போக்குவரத்துத் துறை யினரிடம் விசாரித்தபோது, வழக்கமான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்ப டுவதாக கூறினர். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக போதுமான எண்ணிக்கை யில் பணியாளர்கள் நியமிக்கப்படாத நிலை யில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் இல்லாத தால் பேருந்துகளை இயக்குவது குறைந்தி ருப்பதாக போக்குவரத்து தொழிற்சங்கத் தினர் கூறுகின்றனர். பேருந்துகள் எண்ணிக் கையும் குறைந்துள்ளது. புதிய பேருந்து கள் வாங்க வேண்டிய தேவை உள்ளது.  இத னால்தான் பேருந்துகள் பற்றாக்குறை இருப்பதாக தொழிற்சங்கத்தினர் கூறுகின்ற னர். இத்துடன் வார விடுமுறை நாட்களில் கோவை, திருப்பூரில் இருந்து சொந்த ஊர்க ளுக்கு பல்லாயிரக்கணக்கான தொழிலா ளர்கள் குடும்பத்தினர் சென்று வருகின்ற னர். எனவே சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் திங்கட்கிழமை காலை வேளைகளிலும் கோவை, திருப்பூர் உள்ளிட்ட பக்கத்து ஊர் களுக்கான பேருந்துகள், வெளி மாவட்டங்க ளுக்கு சிறப்பு பேருந்துகளாக மாற்றி விடப் படுகின்றன. இதற்காக கோவை, திருப்பூர் வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் நடைகளை குறைத்து விடுகின்றனர். இதன் காரணமாகவும் திருப்பூர் பேருந்துகள் குறைந்து போகின்றன என்று போக்கு வரத்துத் துறை அலுவலர்கள் தெரிவிக்கின் றனர். போக்குவரத்து துறை பயணிகள் தேவைக்கு உரிய பேருந்துகளை இயக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்ற னர்.