districts

img

நமக்கு நாமே திட்டத்தில் திருப்பூர் முதலிடம்

திருப்பூர், மே 7- நமக்கு நாமே திட்டத்தில் மக்கள்  பங்களிப்புடன் வளர்ச்சிப் பணிகள் செய்வதில், தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் திருப்பூர் முதலி டத்தில் உள்ளது என்று மாநகராட்சி  மேயர் என்.தினேஷ்குமார் கூறினார்.     திருப்பூர் மாநகராட்சி வளாகத் தில் சனியன்று “ஓராண்டில் அரசின் அரும்பணிகளின் அணிவகுப்பு” என்ற சாதனை மலர் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநக ராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மேயர் தினேஷ் குமார் இந்த புத்தகத்தை வெளியிட் டுப் பேசினார். துணை மேயர் பால சுப்பிரமணியம், மண்டலத் தலைவர் கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநக ராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் மேயர் தினேஷ்குமார் பேசியதாவது, கடந்த பத்தாண்டுகளில் தாழ்ந்து  கிடந்த தமிழகத்தை தலை நிமிர வைத்திருக்கிறது ஓராண்டு கால  திமுக ஆட்சி. உள்ளாட்சி தேர்தல்  நடத்தப்பட்டு திருப்பூர் மாநகராட்சி யிலும் திமுக நிர்வாகம் பொறுப் பேற்று பல பணிகள் செய்யப்பட்டு உள்ளன. மாநகரில் ஏற்கெனவே 17  ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள் ளன. புதிதாக 35 சுகாதார நிலையங் கள் அமைக்கப்படுகிறது. நான்கா வது குடிநீர் திட்டம் நிறைவேற்றப் பட்டு விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. மாநகரில் விடுபட்ட அனைத்து பகுதிகளிலும் பாதாளச் சாக்கடைகளை அமைக்க ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் முதன்மை மாநகராட்சியாக திருப் பூர் உள்ளது.  திருப்பூர் மாநகராட்சி பழைய பேருந்து நிலையம் மற்றும் தென் னம்பாளையம் சந்தை உள்ளிட்ட  அனைத்து சந்தை வளாகங்கள் கட்டுமானப் பணி முடிவடைந்துள் ளது. விரைவில் முதலமைச்சர் இவற்றைத் திறந்து வைக்க உள் ளார். இவ்வாறு மாநகராட்சி மேயர் என்.தினேஷ்குமார் கூறினார்.