திருப்பூர், செப். 1 - கோவாவில் ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்று நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பம் மற்றும் கராத்தே போட்டியில் தமிழ்நாடு திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த குளோபல் ஆத்ம சக்தி சிலம்பம் அகாடமி வீரர், வீராங்கனைகள் 41 பேர் பங்கேற் றனர். நேஷனல் யூத் ஸ்போர்ட்ஸ் அண்ட் எஜுகேஷன் ஃபெடரே ஷன் ஆப் இந்தியா சர்வதேச தலைவர் ஹேமந்த் பவர், தேசிய செயலாளர் டாக்டர் சரவண பாண்டியன் தலைமையில் நடை பெற்றது. இதில் மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து 622 மாணவர் களுடன் திருப்பூர் மாவட்ட குளோபல் ஆத்ம சக்தி சிலம்பம் அகாடமியில் பயிற்சி பெற்ற வீரர் வீராங்கனைகள் பல பிரிவுப் போட்டிகளில் கலந்துகொண்டனர். 36 தங்கப் பதக்கங்களை யும், ஐந்து வெள்ளிப் பதக்கங்களையும் மற்றும் கராத்தேவில் மூன்று தங்கப் பதக்கங்களும், இரண்டு வெள்ளி பதக்கங்க ளும் பெற்று அனைவரின் பாராட்டையும் பெற்றனர். பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.