districts

திருப்பூர்: மறுசுழற்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பூர், ஏப்.23 - திருமுருகன்பூண்டி நகராட்சியில் உள்ள அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கிரீன் சைக் கிள் சொல்யூஷன் நிறுவனம் சார்பில் “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி” திட்டத் தின்கீழ் மறுசுழற்சி மற்றும் நில பாது காப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி துவக்க விழா நடைபெற்றது.  இந்த நடுநிலைப்பள்ளி வளாகத்தில்  நடந்த விழாவிற்கு திருமுருகன் பூண்டி  நகராட்சி தலைவர் குமார் தலைமை வகித்தார். கிரீன் சைக்கிள் சொல்யூ ஷன் நிறுவனர்கள் ஜோதி, ஜெபராஜ் ஆகியோர் வரவேற்றனர். மாவட்ட திட்ட அலுவலர்கள் அண்ணாதுரை, சிவகு மார், அவிநாசி வட்டார கல்வி அலுவலர் கள் மகேஸ்வரி, சுமதி, திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் கரோலின் மறுசுழற்சி மற்றும் நில பாது காப்பு விழிப்புணர்வு திட்டம் குறித்து விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் ஏராள மான மாணவ, மாணவிகள் தங்கள்  வீடுகளில் இருந்து 1380 கிலோ பேப்பர்,  நோட்டு, அட்டைப் பெட்டிகளும், 800 கிலோ பிளாஸ்டிக் பொருட்களும் கொண்டு வந்து இருந்தனர்.  இதில் 30 கிலோ பேப்பர் கொண்டு வந்த 6 ஆம் வகுப்பு மாணவி ஃபஹீமா  பர்வீன்,  24 கிலோ பேப்பர் கொண்டு வந்த  6 ஆவது வகுப்பு மாணவி அக்ஷயா, 22 கிலோ பேப்பர் கொண்டு வந்த 8 ஆம் வகுப்பு மாணவி தேன்மொழி, 21  கிலோ கொண்டு வந்த 8 ஆம் வகுப்பு மாணவி நஸ்ரின், 20 கிலோ பேப்பர் கொண்டு வந்த 8 ஆம் வகுப்பு மாண வர் அபிராஜ் ஆகியோர் முதல் ஐந்து இடத்தை பிடித்தனர்.  இவர்களுக்கு சான்றிதழ், கொண்டு வந்த பொருட்களின் மதிப்பிற்கேற்ப அவர்கள் விரும்பிய பொருட்கள், பதக்கம் வழங்கப்பட்டது. முதலிடம் பெற்ற ஃபஹீமா பர்வீனுக்கும், பள்ளி  தலைமையாசிரியர் ராமகிருஷ்ணனுக் கும் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட் டது.  அதேபோல் பொருட்கள் கொண்டு  வந்த அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் ரூ .30 ஆயிரம் மதிப் பில் அவர்கள் கொண்டு வந்த பொருட் களின் எடைக்கு ஏற்ப மறுசுழற்சி செய் யப்பட்ட பொருட்களான பென்சில், நோட்டு, விதை பேனா ஆகிய பரிசு கள் வழங்கப்பட்டது.  கணித ஆசிரியர் சக்திவேல், ஆங்கில ஆசிரியர் முத்துக்குமார், ஆங்கில ஆசிரியை லலிதா ஆகியோர் விழாவை தொகுத்து வழங்கினர். முடி வில் பள்ளி தலைமை ஆசிரியர் ராம கிருஷ்ணன் நன்றி கூறினார்.