districts

img

திருப்பூர்: ரூ.87 லட்ச உபரி பட்ஜெட் தாக்கல்

திருப்பூர், பிப்.27 - திருப்பூர் மாநகராட்சியில் 2024 -  25 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு அறிக்கையை மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் வெளியிட் டார். திருப்பூர் மாநகராட்சியின் மொத்த வருவாய் ரூ.1576 கோடியே  40 லட்சத்து 43 ஆயிரம் இருக்கும். மொத்த செலவு ரூ. 1575 கோடியே 53 லட்சத்து 7 ஆயிரம் ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்  மூலம் ரூபாய் 87 லட்சத்து 36 ஆயி ரம் உபரி இருப்பாக கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. திமுக நிர்வாகம் மாநகராட் சியில் பொறுப்பேற்ற பின் தாக்கல்  செய்யப்பட்ட முதல் இரண்டு வரவு  செலவு அறிக்கைகள் பற்றாக்குறை யாக இருந்தன. முதல் முறையாக இந்த நிதியாண்டுக்கான வரவு செலவு அறிக்கை உபரியாக வெளி யிடப்பட்டுள்ளது. மொத்த வருவா யில், வருவாய் வர வினம் ரூபாய்  508 கோடியே 7 லட்சமாகவும், மூல தன வரவினம் ரூ.1068 கோடியே  33 லட்சம் ஆகவும் இருக்கும். அதே  போல் மொத்த செலவில் வருவாய் செலவினம் ரூபாய் 480 கோடியே 65 லட்சமாகவும், மூலதன செல வினம் ரூ.1094 கோடியே 87 லட்சமா கவும் இருக்கும் என்றும் மதிப்பிடப் பட்டுள்ளது. மாநகராட்சி வரவு செலவு அறிக்கை வெளியிட்டு உரையாற் றிய மேயர் தினேஷ்குமார், பல் வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துக் கூறி னார்.இதையடுத்து திமுக சார்பில் பேசிய நான்காவது மண்டல தலை வர் இல. பத்மநாபன், மூன்றாவது  மண்டலத் தலைவர் சி.கோவிந்த சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குழு தலைவர் எஸ். ரவிச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆர். மணிமேகலை, காங்கிரஸ் சார்பில் கே.பி.ஜி.செந் தில்குமார், மதிமுக சார்பில் சாந்தா மணி மற்றும் முஸ்லிம் லீக், மனி தநேய மக்கள் கட்சி உறுப்பினர் கள் இந்த வரவு செலவு அறிக் கையை வரவேற்று பேசினர். அதிமுக வெளிநடப்பு அப்போது குறுக்கிட்ட அதிமு கவினர் முதலில் பேச வாய்ப்பளிக் காதது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பதில் அளித்த மேயர் தினேஷ்குமார், அதிமுக உறுப்பினர்களுக்கு துணி விருந்தால் என்னென்ன பணிகள் செய்யப்பட்டுள்ளது என்பதை பட்டி யலிட தயார், துணிவு இல்லை  என்றால் வெளிநடப்பு செய்யுங்கள்.  முன்பாகவே அதிமுகவில் வெளி நடப்பு செய்யப்போவது தெரியும் என்றார்.  இதனையடுத்து, அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் கருத்து தெரி வித்த நிலையில், நன்றி தெரி வித்த மேயர் தினேஷ்குமார், அதே சமயம் தற்போது நிலவும் குடிநீர் பிரச்சனை தற்காலிகமானது. கோடை காலம் வருவதற்கு முன் பாக இப் பிரச்சனை சரி செய்யப் படும். மண்டல வாரியாக குடிநீர்  பிரச்சனைக்கு இளநிலை பொறியா ளர்கள் பொறுப்பாக்கப்பட்டுள் ளனர். உறுப்பினர்கள் அவர்களை தொடர்பு கொள்ளலாம் என்று கூறி னார். வரவு செலவு அறிக்கை வெளி யிட்ட பின்னர், மாமன்றத்தின் சாதா ரண கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், துணை மேயர் ஆர். பாலசுப்ரமணியம், நிதிக் குழு  தலைவர் கு.கோமதி, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரி கள் கலந்து கொண்டனர்.