திருப்பூர், ஜன.10 - நொய்யல் நதிக்கரையில், திருப்பூர் மாந கராட்சி, நொய்யல் பண்பாட்டு அமைப்பு, ஜீவ நதி நொய்யல் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் திருப்பூர் பொங்கல் திருவிழாவிற் கான ஏற்பாடுகள் மற்றும் பணிகள் ஆகிய வற்றை மாநகர மேயர் தினேஷ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பொங்கல் திருவிழாவை சிறப்பாக நடத்து வது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்வில் மேயர் ந.தினேஷ் குமாரு டன், மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி, மாநகர காவல் ஆணையர் பிர வீன் குமார் அபினபு, வருவாய் சார் ஆட்சி யர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், துணை மேயர் ஆர்.பாலசுப்ரமணியம், நொய்யல் பண்பாட்டு அமைப்பு சார்பில் கிட்ஸ் கிளப் பள்ளி தாளாளர் மோகன் கார்த்திக், ஜீவ நதி நொய்யல் சங்கம் சார்பில் அகில் ரத்தினசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்ட னர். முன்னதாக திங்களன்று திருப்பூர் மாநக ராட்சி அலுவலகத்தில் மேயர் தினேஷ்குமார் தலைமையில் திருப்பூர் பொங்கல் திருவிழா 2023 குறித்து ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. தை முதல் நாளான ஜனவரி 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி முடிய மூன்று நாட்க ளுக்கு திருப்பூர் பொங்கல் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. சமய நல்லி ணக்க, சமத்துவப் பொங்கல் விழாவாக பல் லாயிரம் குடும்பத்தினர் பங்கேற்கும் வகை யில் ஏற்பாடுகள் செய்வது குறித்து இக்கூட் டத்தில் ஆலோசிக்கப்பட்டது. நொய்யல் பண் பாட்டு அமைப்பு, நொய்யல் ஜீவநதி சங்கத் தின் நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.