districts

img

திருப்பூர் வடக்கு ஒன்றியம் சிபிஎம் பயிற்சி முகாம்

திருப்பூர், ஜூலை 29- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன் றிய குழு சார்பில் கிளைச் செயலாளர்கள், ஒன்றிய குழு  உறுப்பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற் றது. புது திருப்பூர் அருகே குப்பாண்டம் பாளையத்தில் தனி யார் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த  முகாமுக்கு வடக்கு ஒன்றிய குழு உறுப்பினர் எம்.தமிழ்ச்செல் வன் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினர் எஸ். சுப்பிரமணியன் இம்முகாமை தொடக்கி வைத்து  கிளை செயல்பாடுகளை மேம்படுத்துவது பற்றி பேசினார். கட்சியின் ஆறு மாத செயல் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்த அறிக்கையை முன்வைத்து வடக்கு ஒன்றிய செயலா ளர் ஆர். காளியப்பன் பேசினார். இம்முகாமில் இடைக்குழு  உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் விவாதத்தில் பங்கேற் றனர். பிற்பகல் அமர்வில், நமக்கான ஆயுதம் தகவல் பெறும்  உரிமைச் சட்டம், என்ற தலைப்பில் கட்சியின் மாவட்டக்குழு  உறுப்பினர் ஆ.சிகாமணி உரையாற்றினார்.நிறைவாக கட்சி யின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ் பயிற்சி முகாமை  நிறைவு செய்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.ஒன்றிய குழு உறுப்பினர் மகாலிங்கம் நன்றி கூறினார்.