திருப்பூர், மார்ச் 17- திருப்பூர் மக்களின் எதிர்பார்ப்பை நிறை வேற்றுவோம் என்று மாநகராட்சி மேயர் ந. தினேஷ்குமார் உறுதியளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், இடுவாய் ஊராட்சி, சின்னக்காளிபாளையம் மாநகராட்சி மூங் கில் பூங்காவில் வியாழனன்று மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி நிகழ்வுக்குத் தலைமை ஏற்றார். துணை மேயர் ரா.பாலசுப்ரமணியம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிர் வாகிகள் பங்கேற்றனர். இந்நிகழ்வில், மேயர் ந.தினேஷ்குமார் பேசுகையில், வெற்றி அமைப்பு இதுவரை ஏறத்தாழ 13 லட் சம் மரங்களை நடவு செய்து உள்ளது. திருப் பூர் மாநகராட்சியை பசுமை மாநகராட்சி யாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்து கொண்டு வருகிறது.மேலும், திருப்பூர் பகுதியில் இருக்கக்கூடிய குப்பை பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் ஊழலற்ற, வெளிப்படைத் தன்மையுள்ள நிர்வாகமாக, அனைவரும் போற்றக்கூடிய வகையிலே பணிகளை முன்னெடுத்து மக்களின் எதிர் பார்ப்புகளை நிறைவேற்றும். திருப்பூர் மக்க ளுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற, திருப்பூரை முன்னேற்ற பாதையிலே கொண்டு செல்ல தன்னார்வ அமைப்புக ளோடு நிச்சயமாக கரம்கோர்த்து மாமன்ற உறுப்பினர்கள் துணையோடு புதிய திருப் பூரை படைப்போம் என்றார். இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதி கள், அரசு உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.