தேசிய கபடி போட்டிக்கு திருப்பூர் மாவட்ட வீராங்கனைகள் தேர்வு
திருப்பூர், நவ.24- தேசிய 70ஆவது சீனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக பெண்கள் அணிக்கு திருப்பூரில் இருந்து 2 வீராங்கனை கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேசிய 70ஆவது சீனியா் கபடி சாம்பியன்ஷிப் போட்டி பஞ்சாப் மாநிலத்தில் டிச.10 ஆம் தேதி தொடங்கி டிச.13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் தமிழக பெண்கள் அணிக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த கதீஜா பீவி, புவனேஸ்வரி ஆகிய இரு வீராங்கனை கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டவர் களுக்கான பயிற்சி முகாம் திருவண்ணாமலையில் நவம்பர் 24ஆம் தேதி முதல் டிசம்பா் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் பயிற்சியில் பங்கேற்கும் மாணவிகளை திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் தலைமைப் புரவலர்கள் எம்.சுப்பிரமணியம், துணைமேயர் ஆா்.பாலசுப்பிரமணியம், சேர்மன் கொங்கு வி.கே.முருகேசன், தலைவர் ரோலக்ஸ் பி. மனோகரன், செயலாளரும், மாநில கபடி கழகப் பொருளாள ருமான ஜெயசித்ரா ஏ.சண்முகம் ஆகியோர் வாழ்த்தி வழிய னுப்பி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் செய்தித் தொடா்பாளர் சு.சிவபாலன், மாவட்ட நடுவர் குழு தலைவர் ஆா்.முத்துசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
விவசாய நிலங்களில் திருட்டுப் போகும் மின் ஒயர்கள்: விவசாயிகள் புகார்
திருப்பூர், நவ.24- அவிநாசி அருகே ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மின்சார ஒயர் திருட்டுப் போனது. இந்த ஒயரை மீட்டுத்தரும்படி விவசாயி கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சேவூர் காவல் நிலையம் உதவி ஆய்வாளரிடம் விவசாயி சிவசாமி என்பவர் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது, அவிநாசி வட்டம், சேவூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குமாரபாளையம், குட்டைய தோட்டம் என்ற இடத்தில் குடியி ருந்து விவசாயம் செய்து வருகிறேன். விவசாய பயன்பாட் டுக்கு இருந்த எனது 150 அடி நீளமுள்ள 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள விவசாய பம்பு செட்டிற்கு செல்லும் மின்சார ஒயரை செவ்வாய்க்கிழமை இரவு திருடி உள்ளனர். சேவூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயத் தோட் டங்களில் மின் கேபிள்கள், இதர விவசாய பொருட்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருகிறது. உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பற்ற வேண்டும். திரு டப்பட்ட மின்சார ஒயரை மீட்டு, குற்றவாளியை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என சிவசாமி கேட்டுக் கொண்டி ருக்கிறார். சேவூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் விவசாய தோட்டங் களில் இதுபோல் திருட்டுச் சம்பவங்கள் தொடர் கதையாக இருக்கின்றன. எனவே இதில் காவல் துறை சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிகளைக் கைது செய்வதுடன், விவசாயி களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் விவசா யிகள் கூறுகின்றனர்.
டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு ரூ.554 தினசரி ஊதியம் வழங்க சிஐடியு கடிதம்
திருப்பூர், நவ. 24 - திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் வட்டார ஊரகப்பகுதிகளில் வேலை செய்யும் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ள தினசரி ஊதியம் ரூ.554/- வழங்க சிஐடியு கோரி யுள்ளது. இது தொடர்பாக சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் வெள்ளியன்று மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் பொங்க லூர் வட்டார ஊரகப்பகுதிகளில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களாக 20 பேர் பணி செய்து வருகிறார்கள். இவர்களுக்கு ரூ.439/- தினசரி ஊதியம் வழங்கப்பட்டு வருகி றது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு எண்: 805/2002 அ.1 இன்படி, மேற்கண்ட கொசுப் புழு ஒழிப்புப் பணியாளர்களுக்கு ரூ.554/- தினசரி ஊதியமாக நிர்ணயம் செய்து அறி விக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட உத்தரவின்படி குண்டடம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் குண்டடம் வட்டார ஊரகப்பகுதிகளில் பணி செய்யும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு ரூ. 554/- தினசரி ஊதியம் வழங்க உத்தரவிட்டுள் ளார். எனவே, பொங்கலூர் வட்டாரப் பகுதிக ளில் பணி செய்யும் 20 ஊழியர்களுக்கும் அதே போல் ரூ.554/- தினசரி ஊதியம் வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு கேட்டுக் கொள்கிறது. மேலும், திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுத்திட, முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை பணி செய்யும் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் அனைவ ருக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி, தினசரி ஊதியம் ரூ.554/- வழங்க ஆவன செய் யுமாறு சிஐடியு சார்பில் கே.ரங்கராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருப்பூரில் புதிய நட்சத்திர ஹோட்டல் திறப்பு
திருப்பூர், நவ.24- திருப்பூர் வேலம்பாளை யம் பகுதியில், ஐடிசி துணை நிறுவனமான பார்ச்சூன் பார்க் ஹோட்டல் வெள்ளி யன்று திறக்கப்பட்டது. பார்ச்சூன் பார்க் ஹோட்ட லின் நிர்வாக இயக்குநர் சமீர் பேசுகையில் பார்ச்சூன் பார்க் ஹோட்டல்கள் நாட்டின் 54 நகரங்களில் உள்ளன. இது ஐடிசி-இன் துணை நிறு வனம். திருப்பூர் பார்ச்சூன் பார்க் நிர்வாக இயக்குநர் கே.பி.கே.செல்வராஜ் பேசு கையில், தொழில் நகரமான திருப்பூருக்கு வெளிநாடு மற் றும் வெளி மாநிலங்களில் இருந்து பின்னலாடை ஏற்று மதி செய்ய வருபர்கள் 55 கி.மீ சென்று கோவையில் தங்க வேண்டி இருந்தது. இனி திருப்பூரிலேயே தங்க லாம். அவர்களுக்கு தேவை யான அனைத்து வசதிகளு டன் கூடிய நட்சத்திர ஹோட் டல் திருப்பூரில் தொடங்கு வது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.
4 ஆடுகளை கடித்துக் கொன்ற நாய்கள்
நாமக்கல், நவ.24- நல்லாகவுண்டம்பாளையம் அருகே நாய்கள் கடித்துக் குதறியதில், மூன்று குட்டி ஆடு உட்பட நான்கு ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்துள்ள நல்லாகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவர் கால்நடைகள் வைத்து, வளர்த்து வருகிறார். இந்நி லையில், சுமார் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை மேய்ச்ச லுக்கு விட்டிருந்த நிலையில், ஆடுகளின் கதறல் சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே பார்த்துள்ளார். அப்போது, அப்பகுதியில் சுற்றி திரிந்த நாய்கள் மூன்று குட்டி ஆடு மற்றும் ஒரு தாய் ஆட்டை கடித்து குதறியுள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்து கோபி, நாய்களை விரட்டி யுள்ளார். அதற்குள்ளாகவே, நாய்கள் ஆடுகளை கடித்து குத றியதில் நான்கு ஆடுகளும் பலியானது. இதுபோன்ற சம்பவங்கள் நல்லாகவுண்டம்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் அவ்வப்போது நடைபெறுவதா கவும், இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மலைவாழ் மக்களின் நிலம் அபகரிப்பு
தருமபுரி, நவ.24- மோசடியாக கிரையம் பெற்று, அபகரிக்கப்பட்டுள்ள மலைவாழ் மக்களின் நிலங்களை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தருமபுரி மாவட்ட பேரவை கூட்டம் முத்து நினைவு அறக்கட்டளை அலுவ லகத்தில், மாவட்டத் தலைவர் ஏ.அம்புரோஸ் தலைமை யில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் இரா.சரவ ணன் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் அரூர் வட்டத்திற்குட்பட்ட கோட்டப்பட்டி, சிட்லிங் பகுதிகளில் காலங்காலமாக சாகுபடி செய்துவரும், மலைவாழ் மக்க ளின் விளைநிலங்களை வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் மோசடியாக கிரையம் பெற்று அபகரித்துள்ளனர். அந்த நிலங்களை மீட்டு மலைவாழ் மக்களுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலமரத்தூர் மற்றும் நொனங்கனூர் ஆகிய கிராமங்களில் மயானத்திற்கு செல்லும் வழி அமைத்து தரவேண்டும். எரிமலை பகுதியில் பாரம்பரியமாக விவசாயம் செய்து வரும் மலைவாழ் மக்க ளின் நிலத்தில் யானைகுழி எடுப்பதை உடனடியாக கைவிட வேண்டும். மூலபெல்லூர் கிராம இருளர் இன மக்க ளுக்கு அரசு மனைபட்டா வழங்கியுள்ளது. எனவே, மனை பட்டாவுக்கான இடத்தில் அரசு வீடுகட்டிதர நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. முன்னதாக, இக்கூட்டத்தில் மலைவாழ் மக்கள் சங்க மாநில துணைச்செயலாளர் ஏ.கண்ணகி, மாவட்டச் செயலா ளர் கே.என்.மல்லையன், விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் சோ.அருச்சுணன், குருமனஸ் பழங்குடி மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் சி.சொக்கலிங்கம், மாவட்டத் தலைவர் டி.மாதையன், மலைகமிட்டி செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பச்சிளம் குழந்தைக்கு தலைக்காய அறுவை சிகிச்சை
சேலம், நவ.24- சேலம் நியூரோ பவுண்டேசன் மருத்துவமனையில், பிறந்து 5 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு மேற்கொள் ளப்பட்ட தலைக்காய அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக்கியுள்ளனர். சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சேர்ந்த தம்பதிக்கு, கடந்த அக்டோபர் மாதம் பிறந்த ஐந்து நாட்களே ஆன இரட்டைக் குழந்தைகளில், ஒரு குழந்தை கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு மயக்கமடைந்தது. உடனடியாக அப்பச்சிளம் குழந்தை மேல் சிகிச்சைக்காக சேலம் நியூரோ பவுண்டேசன் மருத்து வமனைக்கு கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டது. அந்தக்குழந்தைக்கு செயற்கை சுவாச குழாய் பொருத் தப்பட்டு உடனடியாகப் பரிசோதிக்கப்பட்டு ஸ்கேன் செய்து பாா்த்ததில், இடது பக்க மண்டை ஓடு உடைந்து மூளையில் பெரிய ரத்தக்கட்டு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ரத்தக்கட்டு பெரிதாகி மூளையை அழுத்த, குழந்தை கோமா நிலைக்கு சென்றது. உடனடியாக குழந்தையின் பெற்றோா் ஒப்புதலோடு தலைமை மருத்துவர் ஆர்.நடரா ஜன் வழிகாட்டுதலின்படி, மருத்துவமனையின் மயக்கவி யல் துறை தலைவர் ஜி.சேகர் தலைமையிலான மருத்துவர்கள் குழு, குழந்தை மருத்துவர் அடங்கிய குழு உதவியுடன், மூளை நரம்பியல், தலைக்காய அறுவை சிகிச்சை துறை நிபுணர் ஜெ.பெரோஸ் அஹமத் குழுவி னரால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, ரத்தக்கட்டு அகற்றப் பட்டது. இதையடுத்து, பச்சிளம் குழந்தை கோமா நிலையிலிருந்து மீண்டு சுய நினைவு திரும்பி கண் விழித்தது. தொடர்ந்து மூளை நரம்பியல் தலைக்காய அறுவை சிகிச்சை நிபுணா் ராமலிங்கம், மருத்துவமனையின் குழந்தை மருத்துவா்கள் ஆகியோரின் மேற்பாா்வையில் சிகிச்சை பெற்ற அக்குழந்தை பெற்றோருடன் வீடு திரும்பியது. இதை யடுத்து நியூரோ பவுண்டேசன் மருத்துவமனையின் மருத்து வர்கள் குழுவிற்கு பச்சிளம் குழந்தையின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.
கொடநாடு வழக்கு ஜன. 5ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு
நீலகிரி, நவ.24- கொடநாடு கொலை, கொள்ளை வழக் கின் விசாரணை ஜன., 5ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கியி ருந்த கொடநாடு பங்களாவில், அவர் மறை விற்கு பிறகு, அங்கு நடந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதிமுக ஆட்சி யில் மந்த கதியில் நடைபெற்று வந்த இவ்வ ழக்கு, அதிமுக ஆட்சியை இழந்த நிலை யில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தற்போது, இவ்வழக்கின் விசாரணை வேகமெடுத் துள்ளது. இந்நிலையில், கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்டம் அமர்வு நீதிமன்றத்தில் வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. அப் போது, வழக்கினை விசாரணை செய்து வரும் ஏடிஎஸ்பி முருகவேல் தலைமை யிலான போலீசார், அரசு தரப்பு வழக்க றிஞர் ஷாஜகான் மற்றும் எதிர் தரப்பு வழக் கறிஞர்கள் ஆகியோர் ஆஜராகினர். வழக்கு குறித்து பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர், இதுவரை 189 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குற்றவாளி களாக சேர்க்கப்பட்டுள்ள பிஜின்குட்டி, தீபு, ஜம்சீர் அலி உள்ளிட்டோரிடம் கைப்பற் றப்பட்ட 8 செல்போன்கள் மற்றும் ஐந்து சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டு ஆய்வ கத்திற்கு அனுப்பி உள்ளோம். அதன் மூலம் பெறப்படும் விவரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக கூறினார். மேலும், கூடுதல் சாட்சிகளிடையே விசாரணை நடத்த கால அகவாசம் வேண் டும் எனவும் கோரிக்கை வைத்தார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கின் விசாரணை எதிர்வரும் ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
ராகிங் புகார் - மூன்று மாணவர்கள் மீது வழக்கு
கோவை, நவ.24- தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவரை ராக்கிங் செய்து தாக்குதல் நடத்திய சீனியர் மாண வர்கள் இருவர் உட்பட மூவர் மீது போலீ சார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், சூலூர் குமரன் கோட்டம் அருகே ஆர்.வி.எஸ் பொறியி யல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில், வெளி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் பலர் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். அந்த வகையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அகிலேஷ் என்ற மாணவன், கல்லூரி விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு பொறியியல் படித்து வருகி றார். இந்நிலையில், அகிலேஷ் தங்கி இருந்த அறைக்கு புதன்கிழமையன்று மாலை அதே கல்லூரியில் படிக்கும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் குரல் இனியன், அரவிந்த் மற்றும் நான்காம் ஆண்டு படிக்கும் கும்பகோணத்தைச் சேர்ந்த முத்து குமார் மற்றும் கரூ ரைச் சேர்ந்த கோகுல் ஆகியோர் வந் துள்ளனர். அப்போது நால்வரும் இணைந்து அந்த அறையில் தங்கியி ருந்த 12 ஜூனியர் மாணவர்களிடமும், கல்லூரிக்குள் காப்பு கயிறு கட்டக் கூடாது, சீனியர் வந்தால் மரியாதை செலுத்த வேண்டும் எனக் கூறி எச்சரித் துள்ளனர். இந்த சம்பவம் பிடிக்காத காரணத் தால் இரண்டாம் மாணவனான அகி லேஷ் விடுதியில் இருந்து வெளியே சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்நி லையில், வியாழனன்று அகிலேஷை, முத்துக்குமார் மற்றும் கோகுல் ஆகிய இருவரும் தனபால் என்பவரின் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு முத்துக்குமார், கோகுல் மற்றும் தனபால் ஆகிய மூவரும் இணைந்து அகிலேஷை தகாத வார்த்தையால் திட்டியதோடு தாக்கியுள்ளனர். மேலும் அகிலேஷின் கைக்கடிகாரம் மற்றும் செல்போனை பிடுங்கி உடைத்த மூவ ரும் சீனியர் மாணவர்கள் சொல்வ தைக் கேட்க வேண்டும் இல்லையென் றால் கொலை செய்து விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்ப டுகிறது. இதில் நெற்றி பகுதியில் காயம டைந்த அகிலேஷ், சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மூவர் மீதும் நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின் றனர். மேலும் தலைமறைவாக உள்ள முத்துக்குமார் கோகுல் மற்றும் டீக் கடை ஊழியர் தனபால் ஆகிய மூவரை யும் போலீசார் தேடி வருகின்றனர். ஏற்கனவே, கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரியில் ராகிங் விவ காரம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலை யில், தற்போது மீண்டும் சூலூர் ஆர் விஎஸ் கல்லூரியில் ராகிங் குறித்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
ஊட்டி, நவ.24- சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஊட்டி மகிளா நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நீலகிரி மாவட்டம், ஊட்டியை அடுத்த உல்லத்தி பகு தியை சேர்ந்தவர் கார்த்திக் (19). இவர் மாவனல்லா பகுதி யில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி பணியாற்றி வந்தார். இவர், அவ்வப்போது தாயாரை பார்ப்பதற்காக சொந்த ஊர் வந்து சென்றார். அவ்வாறு வந்து சென்றபோது, அப்பகு தியில் உள்ள சிறுமியை, கார்த்தி ஏமாற்றி பாலியல் பலாத் காரம் செய்ததாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஊட்டி ஊரக மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் கார்த்திக்கை கைது செய்த னர். இந்த வழக்கின் விசாரணை ஊட்டி மகிளா நீதிமன் றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், கார்த்திக்குக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 6,500 அபராதம் விதித்து நீதிபதி ஸ்ரீதரன் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார்.
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போதிய போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை
நாமக்கல், நவ.24- நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறக்கப்பட்ட நிலை யில், போதிய போக்குவரத்து வசதி ஏற்ப டுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நாமக்கல் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில், அரசு மருத்துவக்கல்லூரி யுடன் இணைந்த மருத்துவமனை செவ் வாயன்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. 6 தளங்களுடன் செயல்படும் இந்த மருத்துவமனையில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள், 700 படுக்கை வசதிகள் உள்ளன. தற்போது, நாமக் கல் - மோகனூர் சாலையில் அரசு மருத்து வமனை செயல்பட்டு வருகிறது. படிப் படியாக நோயாளிகளை புதிய மருத்து வமனைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. திருச்செங்கோடு சாலையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஆட் சியர் அலுவலகத்தில் இருந்து 2.5 கி.மீ. தொலைவு நடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இரவு நேரங்களில் தனி யாக செல்ல முடியாத நிலை உள்ளது. இதனை தவிர்க்க, நாமக்கல்லில் இருந்து ஈரோடு, கோவை, திருச்செங் கோடு நோக்கி செல்லும் அனைத்துப் பேருந்துகளையும், அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனை வரை சென்று, அதன்பிறகு சம்பந்தப்பட்ட மார்க்கங் கள் நோக்கி செல்ல அனுமதிக்க வேண் டும் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் போக்குவரத்துத் துறைக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் கடிதம் வழங் கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வா கத்தினர் கூறுகையில், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் முதல், இரண்டு, மூன்றாம் ஆண்டுகளில் தற்போது 300 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அவர்கள் பயிற்சி பெறுவதற்கு ஏற்ப அருகிலேயே மருத்துவமனை அமைக் கப்பட்டுள்ளது. தற்போது மருத்துவம னையில் 192 மருத்துவர்கள், 248 செவிலி யர்கள், 207 இதர மருத்துவப் பணி யாளர்கள், 50 ஆய்வகப் பணியாளர் கள், 222 தூய்மைப் பணியாளர்கள் உள் ளனர். புதிய அரசு மருத்துவமனை கட்டடத்தில் தற்போது புறநோயாளி களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு வரும் மக்கள் யாரையும் திருப்பி அனுப்புவதில்லை. படிப்படியாக, மோகனூர் சாலையில் உள்ள மருத்து வமனையில் இருந்து புதிய கட்டடத் துக்கு செயல்பாட்டுக்கு கொண்டு வரு வோம். முக்கியத் தேவைக்குரிய மருத் துவ உபகரணங்கள் எடுத்து வரப்படும். மருத்துவமனைக்கு மக்கள் வந்து செல்ல போக்குவரத்து வசதி செய்து தரக்கோரியும், இதர வசதிகள் கேட்டும் ஆட்சியர், போக்குவரத்து அதிகாரிக ளுக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் - மோகனூர் சாலையி லுள்ள அரசு மருத்துவமனை கட்டடம், அரசு சித்த மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையாக மாற வாய்ப்புள் ளது. மருத்துவ நலப்பணிகள், காச நோய் இணை இயக்குநர் அலுவலகம் அங்கு செயல்படும். ஒன்றன்பின் ஒன் றாக பணிகள் நடைபெற உள்ளன. புதிய அரசு மருத்துவமனை முழுமையாக செயல்பாட்டுக்கு வருவதற்கு இன்னும் இரண்டு மாதங்களாகிவிடும், என்ற னர்.
மலை ரயில் சேவை டிச.7 வரை ரத்து
கோவை, நவ.24- குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதி யில் தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக, மலை ரயில் பாதையில் 10க்கும் அதிகமான இடங்களில் மண் சரிவும், பாறைகளும் உருண்டு விழுந்தன. இத னால் மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை டிச.7 ஆம் தேதி வரையும், குன்னூர் - மேட்டுப்பாளை யம் ரயில் நவ.31 ஆம் தேதி வரையும் ரத்து செய்யப்படு வதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்ற மடைந்துள்ளனர்.