திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற தாராபுரம் வட்டார விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறை பற்றிப் பேசினர். குறிப்பாக நெற்பயிர் நடவு செய்து ஒரு பகுதி அறுவடை நடைபெற்று வருகிறது. 60 சதவிகித பரப்பள வில் நெற்பயிருக்கு இன்னும் கூடுதல் தண்ணீர் தேவைப்படு கிறது. எனவே அமராவதி பாச னத்தில் கூடுதல் தண்ணீர் விட வேண்டும். அப்போதுதான் நெற்ப யிர் முழுமையாக வளர்ச்சி அடைந்து அறுவடை செய்ய முடியும் என்று தெரிவித்தனர். அதேசமயம் உப்பாறு பகுதி விவ சாயிகள் கூறுகையில், உப்பாறு அணைக்குத் தண்ணீர் விட வேண் டும். ஏற்கெனவே பிஏபி திட்டத்தில் இருந்து கால்வாய் வெட்டி இந்த அணைக்குத் தண்ணீர் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் சோதனை ஓட்டமாகக்கூட உப்பாறு அணைக்குத் தண்ணீர் விடவில்லை. இதனால் அந்த பகு தியில் கால்நடைகளுக்குக் குடிக் கத் தண்ணீர் இல்லை. பயிர்க ளுக்கும் உயிர்த் தண்ணீர் தேவை ப்படுகிறது. என்று கோரினர். இதற்கு பதிலளித்த பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறு கையில், அணையில் நீர் மட்டம் குறைந்தளவே உள்ளது. எனவே ஏற்கெனவே திட்டமிட்ட பாசனத் திற்கான தண்ணீர் மட்டும் விடப் பட்டு வருகிறது என்றனர். பல் வேறு பகுதிகளிலும் தண்ணீர் தேவைப்படுகிறது. தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் வாடக் கூடிய அச்சுறுத்தல் உள்ளது. தண் ணீர் கிடைக்காவிட்டால் விவசாயி கள் சாலைக்கு வந்து போராடத் தயாராக உள்ளனர் என்றும் விவ சாயிகள் தரப்பில் கூறினர்.
வறச்சியின் உச்சத்தில் கிராமங்கள்
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமப்புறப் பகுதிகளி லும் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தண்ணீர் பற் றாக்குறை இருப்பதையும், கூடுதல் தண்ணீர் விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகளவில் உள்ளது. குறிப்பாக, பிஏபி, அமராவதி பாசனப் பகுதிகள் மட்டுமின்றி ஏற்கெனவே பாசன வசதி கிடைக்காத கடைமடைப் பகுதிகளாக இருக்கும் காங் கேயம், வெள்ளகோவில் மற்றும் ஊத்துக்குளி வட்டாரத்தி லும் தண்ணீர் பற்றாக்குறை அதிகளவில் உள்ளது. வறண்ட பகுதிகளில் குளம், குட்டைகளில் நீர் நிரப்பும் அத்திக்கடவு அவிநாசி திட்டம் தற்போது கட்டமைப்புப் பணி நிறைவடைந்துவிட்டது. எனவே அதிகாரப்பூர்வமாக திட்டத் தைத் தொடங்கி வைத்து குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்ப வேண்டும் என்று விவசாயிகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பி னரும் கோரி வருகின்றனர். அதிமுக ஆட்சிக் காலத்தில் அடிக்கல் நாட்டிய திட்டம் என்பதால், அரசியல் நோக்கத்தோடு திமுக அரசு இத்திட்டத் தைத் தொடங்காமல் தாமதிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால், இத்திடத்திற்கு நீரேற்றம் செய்யும் நீராதாரப்பகுதியில் போதிய தண்ணீர் இல்லாததால் இப் போது திட்டத்தைத் தொடங்கினாலும், அனைத்து குளம், குட் டைகளுக்கும் நீர் நிரப்ப முடியாத நிலை உள்ளது. தண்ணீர் பற்றாக்குறை இருக்கிறது என்பதே உண்மை. உரியளவு தண் ணீர் இருப்பு வந்தவுடன் திட்டம் தொடங்கப்படும் என்று அமைச்சர் முத்துச்சாமியும் உறுதியளித்து இருக்கிறார். ஆகவே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோடை காலம் தொடங்கினால் நிலைமை கட்டுக்குள் இருக்குமா? வறட்சி நிலையைச் சமாளிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந் துள்ளது.
நகரங்களில் குடிநீர் பற்றாக்குறை
இது ஒருபுறம் இருக்க இம்மாவட்டத்தில் உள்ள நகரப்ப குதிகளிலும் தற்போது குடிநீர் பற்றாக்குறை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக திருப்பூர் மாநகராட்சியில் கடந்த சில மாதங்களாக 3, 4 நாட்களுக்கு ஒரு முறை குடி நீர் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது மீண்டும் பழைய படி 10, 12 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப் படுகிறது. இங்கு கடந்த மாதம்தான் நான்காம் குடிநீர் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால் இத்திட்டத்திற்கு நீரேற் றம் செய்யும் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்பகுதியில், பில்லூர் நீர் வரத்துக் குறைந்திருப்பதால், இங்கும் நீர் மட்டம் குறைந்துள்ளது. எனவே இத்திட்டத்துக்கு உரிய நீரேற்றம் செய்ய முடியாதநிலை உள்ளது. எனினும் நீரேற்றம் செய்யும் இடத்துக்கு அருகே தடுப்பணை கட்டுமானப் பணி நிறைவ டைந்தவுடன், கோடை காலத்துக்கு முன்னதாகவே நிலைமை சீரடையும் என்று மேயர் தினேஷ்குமார் கூறியிருக்கிறார். இது போக பல்லடம் நகராட்சி மற்றும் ஒன்றிய கிராமப்பகு திகள், நீண்ட காலமாகவே குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதி யாகும். அதிலும் தற்போது வரக்கூடிய குடிநீர் அளவு குறைந்துள்ளது. உடுமலை நகர, கிராமப் பகுதிகளிலும் குடிநீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இது போல மாவட்டம் முழுவதும் பரவலாக குடிநீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இங்கொன்றும், அங்கொன்றுமாக குடிநீர் பிரச்சனையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே இந்த நிலை இருப்பதால், வரக்கூ டிய வாரங்களிலும் நிலைமை தீவிரமடையும் என்று கூறப்படு கிறது. இதனால் திருப்பூர் மாவட்டம் வறட்சியின் பிடியில் சிக்கும் அச்சுறுத்தல் உள்ளது. சில விவசாயிகள் இப்போதே காயும் பயிர்களைக் காப்பாற்றவும், விளைச்சல் இல்லாமல் நஷ்டம் அடைவதை ஈடுகட்டவும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்ய வேண்டியவை
கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கும் நிலையில் திருப்பூர் மாவட்டம் உள்ளதாக விவசாயிகள், பொது மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த சூழ்நிலையில் மாவட்ட நிர்வாகம் குடிநீர் மற்றும் பாசனத்துக்கு சீராக நீர் கிடைப்பதற்கும், அதை முறையாக அனைத்துப் பகுதிகளுக்கும் பாரபட்சம் இல்லாமல் பகிர்ந்த ளிக்க வேண்டும். அணைகளை ஒட்டியுள்ள தலைமடைப் பகுதியில் தண்ணீர் திருட்டு நடப்பதை உறுதியான நட வடிக்கை எடுத்துத் தடுத்து நிறுத்த வேண்டும். பாசனப் பகுதி களில் சிக்கனமாக நீரை பயன்படுத்துவதற்குரிய சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனங்களை ஊக்கப்படுத்த வேண்டும். தேவைப்படும் இடங்களிலும் புதிதாக ஆழ்குழாய்களை அமைக்கவும், ஏற்கெனவே இருக்கும் ஆழ்குழாய்களில் பழுதுகளை முன்கூட்டியே சீரமைத்து நீர் விநியோகம் செய் யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசர அவ சியாமாகும். எதிர்பாராத மழைப் பொழிவு கிடைத்தால் ஓரளவு நிலத் தடி நீர் ஊறவும், வறட்சியை சமாளிக்கவும் வழி கிடைக்கும். அப்படி மழைப் பொழிவு கிடைக்காவிட்டால் இந்த வறட்சி காலம் என்பது மிகக்கடுமையானதாக இருக்கும். நாடாளு மன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் விவசாயப் பாசனத்துக்கும் நீர் கிடைக்காமல், குடிநீருக்கும் கடும் பற் றாக்குறை ஏற்பட்டால் அது தேர்தல் அரசியல் களத்தில் பேசு பொருளாகக் கூடும். எனவே மாவட்ட நிர்வாகம் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி, கிராமப்புற ஊராட்சி ஒன் றிய நிர்வாகங்கள் தண்ணீர் பிரச்சனையில் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு உரிய தீர்வு காண வேண் டும். கவனம் செலுத்துவாரா, மாவட்ட ஆட்சியர்?