திருப்பூர் மாவட்ட சிஐடியு சுமைப்பணித் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், பல்லடம் வடுகபாளை யத்தில் ஞாயிறன்று கொடியேற்று விழா, சங்கப் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. இதில் விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் வை.பழனிச்சாமி, சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.பாலன், பொருளாளர் த.ஜெயபால், கிளை தலைவர் எம்.குமரன், செட்டி பாளையம் பிரிவு தலைவர் வீரமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.