திருப்பூர், அக்.28 - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருப்பூர் வட்டக் கிளை கூட்டம் பி.மகுடேஸ்வரன் தலைமையில் நடைபெற் றது. இக்கூட்டத்தில் மாநில பேரவை அறைகூவல் தீர்மானத் தின்படி மருத்துவக் காப்பீடு, பழைய ஓய்வூதிய திட்டம் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு லட்சம் ஓய்வூதியர்க ளின் கையெழுத்து இயக்கம் தொடக்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலச் செயலா ளர் அ.நிசார் அகமது கையெழுத்துப் போட்டு இந்த இயக் கத்தைத் தொடங்கி வைத்தார்.. இக்கூட்டத்தில் மாவட்டத் தலைவர் க.சண்முகம், வட்டக் கிளை துணைத் தலைவர் என். குருராஜன், வட்டக்கிளை இணை செயலாளர் என்.எம்.தங் கம்,வட்டக் கிளை பொருளாளர் சுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் உறுப்பினர்களின் வீடுக ளுக்குநேரில் சென்று சந்தித்து கையெழுத்து பெற்று அனுப்பி வைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.