districts

img

திருப்பூர் புத்தகத் திருவிழா இன்று தொடக்கம்

திருப்பூர், ஜன.24 – தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பூர்  பின்னல் புக் டிரஸ்ட் நடத்தும் 20 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா வியாழக்கிழமை தொடங்குகிறது. மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல் வராஜ் ஆகியோர் இக்கண்காட் சியை தொடங்கி வைக்கின்றனர். ஆண்டுதோறும் திருப்பூர் மக்கள்  திருவிழாவாக நடைபெறும் புத்தகத்  திருவிழா இம்முறை காங்கேயம் சாலை வேலன் ஓட்டல் வளாகத்தில்  ஜனவரி 25ஆம் தேதி முதல் பிப்ரவரி  4ஆம் தேதி வரை 11 நாட்கள் நடை பெறுகிறது. இம்முறை மொத்தம்  152 அரங்குகள் அமைக்கப்பட் டுள்ளன. தமிழகத்தின் முன்னணி  புத்தக வெளியீட்டாளர்கள், புத்தக  விற்பனையாளர்கள் பங்கு பெறுகின்றனர். அரசுத்துறை சார்ந்த அரங்கங்களும் காட்சிப் படுத்தப்படுகின்றன. அத்துடன் காலை, மாலை நேரங்களில் சிந்த னைக்கு விருந்து படைக்கும் இலக் கிய நிகழ்ச்சிகளும் நடைபெறுகின் றன. இந்த ஆண்டு புத்தகத் திருவி ழாவை முன்னிட்டு மாணவ, மாணவி களுக்கு நடத்தப்பட்ட கலை, இலக் கிய திறனாய்வு போட்டிகளில் முன் னெப்போதையும் விட அதிகளவாக  12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங் கேற்றனர். இது புத்தகத் திருவிழா வில் மக்கள் அதிகளவில் பங்கேற் பார்கள் என்று முன்னறிவிப்பதாக உள்ளது. சமூக ஊடகங்களின் ஆதிக் கத்தில் சிக்கியிருக்கும் இளைய தலைமுறையினரிடம் புத்தக வாசிப்பைத் தூண்டி விடும் ஆரோக் கியமான பண்பாட்டு நிகழ்வாக புத்த கத் திருவிழா நடைபெறுகிறது.  ஆண்டுதோறும், மாணவ, மாண விகள், இளைஞர்கள், பெண்கள் உள் ளிட்டோர் வருகை அதிகரிப்பதுடன், வாசிப்பு ஆர்வமும் அதிகரித்து வருகிறது. புத்தகத் திருவிழா வளா கத்தில் கார், இருசக்கர வாகன நிறுத் தம், சிற்றுண்டி அரங்குகள் உள்ளிட் டவையும் இடம் பெறுகின்றன. பார் வையாளர்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம். முதல்நாள் தொடக்க நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமை ஏற்க, நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், எம் எல்ஏ க.செல்வராஜ், மேயர் ந. தினேஷ்குமார் உள்ளிட்டோர் பங் கேற்கின்றனர்.