districts

img

தேசிய தடகளத்தில் பதக்கம் வென்ற திருப்பூர் வீராங்கனை

திருப்பூர், நவ.20- திருப்பூரைச் சேர்ந்த வீராங்கனை தேசிய அள விலான தடகளப் போட்டி யில் தங்கம், வெண்கலம் என இரு பதக்கங்களை வென்று சாதனை நிகழ்த்தி உள்ளார். அசாம் மாநிலம், குவா ஹாட்டியில் 37 ஆவது தேசிய ஜூனியர் தடகள போட்டிகள் நவம்பர் 11 ஆம்  தேதி துவங்கி 15 ஆம் தேதி வரையில் நடைபெற்றன. இப்போட்டியில், தமிழக அணி சார்பில் திருப்பூர் மாவட் டத்தைச் சேர்ந்த 5 பேர் பங்கேற்றனர்.   இதில், திருப்பூரைச் சேர்ந்த வைஷாலி 100 மீட்டர் தடை  தாண்டும் ஓட்டத்தில் மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். மேலும் 4 X 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில்  தங்கம் வென்றுள்ளார். தேசிய அளவிலான போட்டியில் இரு பத்தங்களை  வென்ற வீராங்கனை வைஷாலிக்கு திருப்பூர் தடகள  சங்கம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.