திருப்பூர்: 172 பள்ளி வாகனங்கள் இயங்க அனுமதி மறுப்பு
திருப்பூர், மே 12 - திருப்பூர் அருகே மாதப்பூரில் பள்ளி வாக னங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் தரம் இல்லாத 172 வாகனங்களை இயக்க அனுமதி நிராகரிக்கப்பட்டது. தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்து தேர்வு முடிவுகளும் வந்துள்ளன. இது போல் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில் வருகிற 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதன் பின்னர் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி கள் வழக்கம் போல் செயல்பட உள்ளன. தற்போது தேர்தல் காரணத்தால் பள்ளிக ளுக்கு கூடுதலாக விடுமுறை கிடைத்துள் ளது. இந்நிலையில் ஆண்டுதோறும் பள்ளி கள் தொடங்குவதற்கு முன்பு தனியார் பள்ளி வாகனங்கள் மற்றும் வேன்கள் ஆய்வு செய் யப்படுவது வழக்கம். அதன்படி திருப்பூர் அருகே உள்ள மாதப்பூரில் திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு, அவிநாசி, காங்கேயம் ஆகிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்க ளுக்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்வது குறித்த கூட்டம் நடைபெற்றது. இதில் தனியார் பள்ளிகளை சேர்ந்த ஓட்டுநர்கள் வாகனங்களுடன் பங்கேற்றனர். பள்ளி வாகன ஓட்டுநர்கள் பின்பற்றும் முறை, குழந்தைகளை வேனில் பாதுகாப்பாக அழைத்துச் செல்வது, வேகக் கட்டுப்பாடு போன்றவை குறித்து அறிவுரை வழங்கப் பட்டது. மேலும் தீ விபத்து ஏற்பட்டால் அதனை கையாளும் முறை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனியார் வாகனங் கள் ஆய்வு செய்யப்பட்டன. திருப்பூர் சார் ஆட்சியர் சௌமியா ஆனந்த், வட்டார கல்வி அதிகாரி ஆனந்தி, வட்டாரப் போக்கு வரத்து அதிகாரி ஆனந்த், இன்ஸ்பெக் டர்கள் நிர்மலா, ஈஸ்வரன், பாஸ்கர், வேலுச் சாமி ஆகியோர் கொண்ட குழுவினர் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர். இதில் 686 வாகனங்கள் பங்கேற்றன. இந்த ஆய்வில் உரிய தகுதியுடன் இருந்த 514 வாக னங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. முதலுதவி பெட்டி இல்லாமல் இருப்பது, சீட் கவர்கள் கிழிந்த நிலையில் இருந்தது. ஸ்டிக் கர் இல்லாமல் இருந்தது. பள்ளி தொடர்பு எண் விபரம் இல்லாமல் இருந்தது என்பது உள்ளிட்ட பல்வேறு குறைகள் இருந்ததால் 172 வாகனங்களுக்கு அனுமதி நிராகரிக் கப்பட்டது.
ஹஜ் யாத்திரை செல்வோருக்கு இன்று முதல் தடுப்பூசி முகாம்
ஹஜ் யாத்திரை செல்வோருக்கு இன்று முதல் தடுப்பூசி முகாம் கோவை, மே 12- கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்பவர்க ளுக்கு தமிழக அரசின் சார்பில் கோவை மாவட்டத்தில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தில் தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்து, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை மேற் கொள்ளப்படவுள்ளது. இந்த சிறப்பு முகாம் இன்று (13ம் தேதி) முதல் வரும் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமின் முதல் நாள் (13ம் தேதி) 120 பேருக்கும், 14ம் தேதி 119 பேருக்கும், 15ம் தேதி 115 பேருக்கும் என மொத்தம் 354 பயணிகளுக்கு தடுப்பூசி வழங்கப்படும். இதில், 65 வயதுக்கு மேற்பட்ட 49 நபர்களுக்கு மட்டும் சீஸ்னல் இன்ப்ளூன்சா வேக் சின் செலுத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கோவை: தென்னை மகசூலை அதிகரிக்க விவசாயிகளுக்கு களப்பயிற்சி
கோவை, மே 12- கோவை அருகே தென்னை விவசாயி கள் உற்பத்தியை அதிகரிக்கவும், மரங்களை நோய் தாக்கத்தில் இருந்து காத்துக்கொள் ளவும், வேளாண் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு களப்பயிற்சி அளித்தனர். கோவை மாவட்டம், அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் அதிக அளவில் தென்னை மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு விவசாயத்தோட்டத் திலும் குறைந்தது 10 முதல் 20 தென்னை மரங்கள் வரை வளர்க்கப்பட்டு வரக்கூடிய நிலையில், சமீப காலமாக ஏற்பட்ட வறட்சி காரணமாக தென்னை மரங்கள் போதிய அளவில் காய்ப்பதில்லை. மேலும் நோய் தொற்றும் ஏற்பட்டு மரங்கள் பட்டுப்போகக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாய பெருமக்களுக்கு தென்னை மகசூலை அதி கரிக்கவும், அதன் நோய் தாக்கத்தை கட்டுப்ப டுத்தவும், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த தனி யார் வேளாண் கல்லூரி மாணவர்கள் விவசா யிகளை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் களப்பயிற்சி அளித்தனர். அன்னூர் குருக்கிலியாம்பாளையத்தில் நடந்த இந்த களப்பயிற்சியில் வேளாண் இளங்கலை படிக்கக்கூடிய மாணவிகள் தென்னை விவசாயிகளின் தோட்டங்களுக்கு நேரடியாக சென்று தென்னை மரங்களில் உள்ள நோய் தாக்கம் குறித்து ஆய்வு செய்து அந்த மரங்களுக்கு தேவையான சத்துகள் மற்றும் நோய் தாக்கத்திலிருந்து தென்னை மரங்களை காத்துக் கொள்வது குறித்தும் அதற்கு தேவையான மருந்துகள் குறித்தும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர். மேலும், இனிவரும் காலங்களில் தொடர்ந்து என்ன மாதிரியான உரங்கள் மற்றும் ஊட்டச்சத்து மருந்துகளை தென்னை மரங்களுக்கு வழங்க வேண்டும், குருத்து கள் அதிக அளவில் பிடித்து தென்னை மக சூலை அதிகரிக்க தேவையான சத்துகள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத் தனர். இந்த நிகழ்வில் விவசாயிகள் திர ளானோர் பங்கேற்று பயனடைந்தனர்.
மொபைல் கடை நடத்தி வருபவர் மீது இந்து முன்னணியினர் சரமாரி தாக்குதல்
மொபைல் கடை நடத்தி வருபவர் மீது இந்து முன்னணியினர் சரமாரி தாக்குதல் திருப்பூர், மே 12 - திருப்பூரில் மொபைல் கடை நடத்தி வருபவரை இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் தாக்கிய சம்பவம் சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது. தாக்குதல் நடத்தியவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் கல்லூரி சாலை சாரதா நகர் பகுதியை சேர்ந்த வர் காசன் கான், அதே பகுதியில் மொபைல் கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் எதிரே ஆட்டோ ஸ்டாண்ட் உள் ளது. இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் சிலர் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். வெள்ளியன்று மாலை காசன் கானின் மொபைல் கடைக்கு சென்ற இந்து முன்னணி நிர்வாகிகள் சிலர் 500 ரூபாய் கொடுத்து., ஜி.பே மூலம் பணம் அனுப்பச் சொல்லி உள்ளனர். இதையடுத்து காசன் கான் 500 ரூபாய் அனுப்பு வதற்கு பத்து ரூபாய் சேவைக் கட்டணம் ஆகும் என தெரி வித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இந்து முன்னணி நிர்வாகிகள் தங்களது பகுதியில் கடை வைத்துக்கொண்டு., தங்களிடமே கமிஷன் தொகை கேட்கிறாயா என்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த இந்து முன்னணியினர், காசன் காணை சரமாரியாகத் தாக்கினர் இச்சம்பவம் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சி யில் பதிவாகியுள்ளது .இதனிடையே மொபைல் கடை உரி மையாளர் காசன் கான் திருப்பூர் வடக்கு காவல் நிலையத் தில் இந்து முன்னணி குண்டர்கள் தாக்கியது குறித்து புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் வடக்கு போலீசார் தாக்கு தல் நடத்திய இந்து முன்னணியினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பருவமழை துவங்கும் முன்பு சாலைப்பணிகளை முடிக்க வலியுறுத்தல்
உதகை, மே 12- தென்மேற்கு பருவமழை துவங்கும் முன்பு, காட்டேரி பகுதியில் இருந்து உத கைக்கு அமைக்கப்பட்டு வரும் புறநகர் சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண் டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் வாரம் முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த மழை இரண்டு மாதங்கள் முதல் நான்கு மாதங்கள் வரை நீடிக்கும். இச்சமயங்களில் மழை பெய்துக் கொண்டிருக்கும் நிலையில் கட்டுமானப் பணி கள், சாலை அமைக்கும் பணிகள், பாலம் கட் டும் பணிகள் போன்றவைகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும். மேலும், ஆங் காங்கே மழைநீர் பல்வேறு பகுதிகளிலும் ஓடிக்கொண்டே இருக்கும் நிலையில், மழை நீர் கால்வாய்கள் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படுவது வாடிக்கை. மழை காலத்தின் போது ஆங் காங்கங்கே மரங்கள் விழுவது, மண் சரிவி பாறைகள் விழுவது போன்றவைகளும் ஏற்ப டும். இதனால், எந்த ஒரு வளர்ச்சி பணிக ளையும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்ப டும். இந்நிலையில், குன்னூர் – மேட்டுப்பாளை யம் சாலையில், காட்டேரி சந்திப்பு பகுதி யில் இருந்து உதகைக்கு ரூ.45 கோடி மதிப் பில் தற்போது புறநகர் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற் கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பல இடங் களில் மழைநீர் கால்வாய்கள் அமைக்கும் பணிகள், சாலை சீரமைப்பு மற்றும் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற் போது உதகையில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் கொல்லிமலை சாலை சந்திப்பு பகுதி முதல் கொல்லிமலை வரையில் சாலை அகலப்படுத்தும் பணிகள், கொண்டை ஊசி வளைவு அமைக்கும் பணிகள் மற்றும் புதி தாக சாலை அமைக்கும் பணிகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர, கொண்டை ஊசி வளைவு அமைக்கும் பகுதி யில் பெரிய அளவிலான தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், இச்சாலை முழுவதும் தற்போது மண் குவியல்களாக காட்சியளிக்கிறது. தென்மேற்கு பருவமழை துவங்க இன் னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், இப்பணிகள் முடிக்கவில்லை எனில், ஜூன் மாதத்தில் பெய்யும் மழையில் இச்சாலை சீர மைக்கும் பணியில் தொய்வு ஏற்படும். மேலும், சாலை முழுவதும் சேறும் சகதியு மாக மாறிவிடும். எனவே, நெடுஞ்சாலைத் துறையினர் தென்மேற்கு பருவமழை துவங் கும் முன் உதகை – மஞ்சூர் சாலையில் கொல் லிமலை சாலை சந்திப்பு முதல் கொல்லி மலை வரை சாலை சீரமைப்பு பணிகளை வேகப்ப டுத்த வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு
சேலம், மே 12- அம்மாபேட்டை பகுதியில் உணவு பாது காப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற் கொண்டனர். சேலம் மாவட்டம், அம்மாபேட்டை மண்ட லம், டிவிகே சாலை பகுதியில் உள்ள தட்டு வடை கடையில், 24 கேரட் தங்கத்தில் தட்டு வடை வழங்கப்படும் என்று விளம்பரம் செய் யப்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் அளித்த புகா ரின் அடிப்படையில், உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ரா.கதிரவன் உத்தர வின்படி உணவு பாதுகாப்பு அலுவலர் புஷ்ப ராஜ் அந்த கடையில் ஆய்வு மேற்கொண் டார். அப்போது, அந்த கடையில் தங்க நிறத்தி லான பாயில் பேப்பர் கொண்டு தட்டுவடை விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவ்வாறு பயன்படுத்தப்படும் கோல்டு பாயில் மீது உணவு தரம் குறியீ டுகள் ஏதும் இல்லாததால் அவை மனித உண விற்கு ஏற்றதா? என்ற சந்தேகத்தின் அடிப்ப டையில், மேற்படி கோல்ட் பாயில் பேப்பர், சட்ட ரீதியான உணவு மாதிரி எடுத்து பகுப் பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வு முடிவின் அடிப்படையில் மேற்கண்ட துரு வன் தட்டு வடை செட் கடை உரிமையாள ரின் மீது உணவு பாதுகாப்பு சட்டம் 2006-ன் படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உணவு பாதுகாப்பு மற்றும் தரம் சம்பந்த மான புகார்களுக்கு உரிய தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தருமபுரி தருமபுரி நகராட்சிக்குட்பட்ட மாம்ப ழம் மொத்த வியாபாரம் செய்யும் குடோன் களில், மாம்பழங்களை பழுக்க வைக்க ரசாய னங்கள் உபயோகப்படுத்துவதை தடுக்க உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவ லர் பானுசுஜாதா தலைமையில், நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்ட னர். டேக்கிஸ்பேட்டை, சந்தைப்பேட்டை, புரோக்கர் ஆபீஸ் ஆகிய பகுதிகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட மாம்பழ குடோன்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய் வில், மருந்து தெளிக்கப்பட்ட மாம்பழங்கள் 10 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும், சம்மந்தப்பட்ட 2 குடோன்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. நகரில் உள்ள அனைத்து பழ குடோன்கள் மாம்பழ விற் பனை கடைகள் கட்டாயம் உணவு பாது காப்பு உரிமம் பெற வேண்டும். உரிமம் இல்லாமல் பழங்கள் விற்பனை செய்யக்கூ டாது என கடை உரிமையாளர்களுக்கு அறி வுறுத்தப்பட்டது.
ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
சேலம், மே 12- வார விடுமுறையை முன்னிட்டு ஏற் காடு, பூலாம்பட்டியில் குவிந்த சுற்று லாப் பயணிகள், படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காடு, ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகி றது. இங்கு தினமும் பல்வேறு மாவட் டங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். வாரவிடுமுறை தினமான ஞாயிறன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்று லாப் பயணிகள் குவிந்தனர். இதனால் ரவுண்டானா உள்பட பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக ஏற்காட்டில் மழை பெய்து, குளுமையான காலநிலை நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏரி யில் குடும்பத்துடன் படகு சவாரி செய் தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி மற்றும் மான் பூங் கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ரசித்தனர். சுற்றுலாப் பயணிகள் வரு கையால் சாலையோர கடைகளில் விற் பனை அதிகரித்ததால், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். லேடீஸ் மற்றும் ஜென்ட்ஸ் சீட் பகுதியில் பய ணிகளின் கூட்டம் அதிகளவில் காணப் பட்டது. ஏற்காட்டில் விரைவில் துவங்க வுள்ள கோடை விழாவை முன்னிட்டு, அண்ணா பூங்காவில் மலர்க்கண் காட்சி, காய்கறி கண்காட்சி, பழக்கண் காட்சி, ஓவியங்கள், அரிய புகைப்பட கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், இன் னிசை நிகழ்ச்சிகள், செல்லப்பிராணி கள் கண்காட்சி, படகு போட்டிகள் நடத் துவதற்கான பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது. இதேபோல், மேட்டூர் அணைப் பூங்கா விற்கு விடுமுறை தினமான ஞாயி றன்று சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணி கள் குவிந்தனர். அங்குள்ள மீன்காட்சி சாலை, பாம்புப் பண்ணை, முயல் பண்ணை, மான் பண்ணை ஆகிய வற்றை கண்டு மகிழ்ந்தனர். இதேபோல் எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டி யில் ஞாயிறன்று சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்தினருடன் வந்த மக்கள், விசை படகில் சவாரி செய்து இயற்கை காட்சிகளை கண்டு களித்தனர்.
பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் முகாம்
தருமபுரி, மே 12- பென்னாகரம் வட்டாரத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் சனியன்று நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வருவாய் கிராமத்திற் குட்பட்ட பகுதிகளில் ஒரு வருடத்திற்கு மேலாக பிறப்பு, இறப்பு குறித்து பதிவு செய்யாதவர்கள் கோட்டாட்சி யர், வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பித்தவர்க ளுக்கான சிறப்பு முகாம் பென்னாகரம் வட்டாட்சியர் அலுவ லகத்தில் சனியன்று நடைபெற்றது. இம்முகாமில் 54 பயனாளி களுக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை கோட்டாட்சியர் காயத்ரி வழங்கினார். இதில் பென்னாகரம் வட்டாட்சியர் சுகு மார், கோட்டாட்சியர் உதவியாளர் சேதுலிங்கம், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிா்வாக அலுவலர்கள் கலந்து கொண் டனர்.
சேலத்தில் போக்குவரத்து மாற்றம்
சேலம், மே 12- சேலம் மாநகராட்சி சார்பில், பாதாளச் சாக்கடை திட் டத்தின் கீழ் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெறுவதை யொட்டி, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாநகர காவல் துறை வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், சேலம் - திருச்சி பிரதான சாலை, ஜவுளிக்கடை பேருந்து நிறுத்தம் முதல் மூங்கப்பாடி சந்திப்பு வரை பாதாளச் சாக்கடை திட்டக் குழாய் பதிக்கும் பணிகள் வரும் மே 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே, சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ராசிபுரம், மல் லசமுத்திரம், ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை, மகுடஞ் சாவடி, பனமரத்துப்பட்டி மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் வள்ளுவர் சிலை சந்திப்பு, மாவட்ட ஆட்சி யர் அலுவலக சந்திப்பு, நான்கு சாலை, சத்திரம், லீ பஜார், சண்முகா பாலம், சந்தைப்பேட்டை வழியாக நெத்திமேடு அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். புலி குத்தி சந்திப்பில் இருந்து பிரபாத் சந்திப்பு செல்ல வேண்டிய இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் புலிகுத்தி பிரதான சாலை சிவனார் தெரு, கருங்கல்பட்டி சாலை வழியாக திருச்சி சாலையை அடைந்து செல்லலாம். ராசிபுரம், மல்லசமுத்தி ரம், ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை, மகுடஞ்சாவடி, பனம ரத்துப்பட்டியில் இருந்து சேலம் பழைய பேருந்து நிலை யத்துக்கு வரும் பேருந்துகளும், அனைத்து வாகனங்களும் பெரியார் வளைவு சந்திப்பு, குகை, புலிகுத்தி சந்திப்பு வழி யாக சேலம் பழைய பேருந்து நிலையத்துக்கு செல் லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.