ஆறாண்டு காலத்திற்கு பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள், நகர்ப்புற உள்ளாட்சிகளில் இப்போது பதவி ஏற்று உள்ளனர். திருப்பூர் மாநகராட்சியின் மூன் றாவது மேயராக திமுகவை சேர்ந்த என். தினேஷ்குமார் போட்டியின்றி தேர்வு செய் யப்பட்டுள்ளார். புதிதாக 60 மாமன்ற உறுப் பினர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலை யில் மக்களின் எதிர்பார்ப்பு ஏராளமாக உள் ளது. அதை நிறைவேற்றுவதே புதிய மாமன் றத்தின் முன் உள்ள உடனடி சவாலாகும்.
உச்சம் தொட்ட ஊழல்
கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத் தில் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் ஊழ லில் புதிய உச்சம் தொட்டதுடன், நிர்வாகம் சீர்குலைந்து சின்னாபின்னமாகி உள்ளது என்பதே உண்மை. அதை மீட்டமைக்க வேண்டிய பெரும் பொறுப்பு புதிய நிர்வா கத்துக்கு உள்ளது. கடந்த மே மாதம் திமுக ஆட்சி அமைந்த பிறகு இளம் ஐஏஎஸ் அதிகாரி கிராந்தி குமார் பாடியை மாநகராட்சி ஆணையராக நியமித்த தன் மூலம் ஊழலற்ற திறமையான நிர்வா கம் வழங்க வேண்டும் என்ற முனைப்பு வெளிப்பட்டது. இப்போது மேயராக வந்தி ருப்பவரும் புதிய இளைஞர்தான். மக்களின் வரிப்பணம் வீணாகக் கூடாது, நகர மக்க ளின் தேவையை ஊழலற்ற முறையில் நிறை வேற்றி முன்னோடி மாநகராட்சியாக திருப் பூரை மாற்றிக் காட்டுவோம் என்று மேயர் தினேஷ்குமார் பதவி ஏற்றவுடன் கூறி யிருக்கிறார்.
இரண்டு கண்ணோட்டம்
திருப்பூரைப் பொறுத்தவரை தொழில் நகரம், தொழிலாளர் நகரம். தொழில் நகரம் என்ற முறையில் செய்ய வேண்டிய முன்னுரிமைப் பணிகள் தனியாக உள் ளன. தொழிலாளர் நகரம் என்ற முறையில் செய்ய வேண்டிய பணிகள் தனியாக உள் ளன. ஆனால், எப்போதுமே அதிகார வர்க்க மும் சரி, மேலிருந்து வரக்கூடிய நிபுணர் களும் சரி இந்த மாநகரைப் பற்றிய பார்வை யிலும், அணுகுமுறையிலும், தொழில் துறை யினரின் கருத்துகள் மற்றும் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து பார்த்திருக்கிறார் கள். தொழிலாளர்கள், அதாவது பெரும் பான்மை உழைக்கும் மக்கள் கருத்துகள், தேவைகளுக்கு இரண்டாம் பட்சமான கவ னமே கொடுக்கப்பட்டு வந்துள்ளது என்பது தான் அனுபவ உண்மை. தொழில், மக்கள் நலன் இரண்டுக்குமே முக்கியத்துவம் தர வேண்டும் என்பது தான் சரியானது. தேவை யானது என்றாலும் அது நடைபெற்றதில்லை. டாலர் சிட்டி என்றழைக்கப்படும் பின்ன லாடை நகரில் தொழில் துறையைப் பொறுத்த வரை சரக்கு போக்குவரத்துக்கு உரிய கட்ட மைப்பு வசதி, தொழில் சார்ந்த விடுதிகள், தண்ணீர் வசதி உள்ளிட்ட தேவைகள் முன்னு ரிமை பெறுகின்றன. இந்த கண்ணோட்டத் தில்தான் மூன்றாவது குடிநீர் திட்டம் கூட வணிக நோக்கில் அமல்படுத்தப்பட்டது. ஆனால் உழைக்கும் மக்களின் தேவை என்ற முறையில் குடிநீர், குடியிருப்பு சார்ந்த வசதி கள் முன்னுரிமை பெறுகின்றன.
கொட்டிக்கிடக்கும் பிரச்சனைகள்
ஏற்றுமதி, உள்நாட்டு பின்னலாடை என ஏறத்தாழ ரூ.40 ஆயிரம் கோடிக்கு உற்பத்தி நடைபெறும் இந்த மாநகரில், நூற்றுக்கும் மேற்பட்ட குடிசைப் பகுதிகள் இருக்கின்றன. பெரும்பாலான பகுதிகளில் 14 நாட்களில் இருந்து, ஒரு மாத இடைவெளியில் தான் குடிநீர் கிடைக்கும். நூற்றுக்கணக்கான குடியிருப்பு பகுதிகளில் அடிப்படையான சாலை, கழிவுநீர் வடிகால் வசதி இல்லை. நாளொன்றுக்கு 700க்கும் மேற்பட்ட மெட்ரிக் டன் குப்பை உற்பத்தியாகிறது. இந்த குப் பைகளை அகற்றம் செய்ய, திடக்கழிவு மேலாண்மைக்கு நிரூபிக்கப்பட்ட வழிமுறை என்று எதுவும் இல்லை. பாதாள சாக்கடை திட்டமும், நகரம் முழுவதும் உள்ளடக்கிய தாக வடிவமைக்கப்படாமல் சில பகுதிகள் விடுபட்டதாக உள்ளன. தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட நோய்த் தொற்றுகள் வருடந் தோறும் தாக்கக்கூடிய, உயிரிழப்புகள் ஏற் படுத்தக்கூடிய நகரமாகவும் திருப்பூர் உள் ளது. இப்படியாக கொட்டிக் கிடக்கும் பிரச் சனைகள் ஏராளம். ஆனால் இப்பிரச்சனை களைத் தீர்ப்பதற்கு உள்ளாட்சி அமைப்புக்கு நிதியும், அதிகாரமும் அத்தியாவசியத் தேவை. ஆனால், ஒன்றிய மோடி அரசு மாநி லங்களுக்கு உரிய நிதி பங்களிப்பைக் கூட பறித்துக் கொண்டிருக்கிறது. தர வேண்டிய நிதியையும் தருவதில்லை. அதற்கேற்ப மாநில அரசும் உள்ளாட்சிகளுக்கு நிதி வழங் குவது குறைவாகவே உள்ளது.
கவுன்சிலரா, ஏஜென்ட்டா?
உள்ளாட்சிகளின் அதிகாரம் என்பதும் இந்த கால கட்டத்தில் மாறியுள்ளது. நேரடி யாக மக்கள் தேவையை மாமன்றத்தில் விவா தித்து அதை தீர்மானமாக நிறைவேற்றி செயல் படுவது என்பது படிப்படியாக குறுக்கப் பட்டு வருகிறது. உதாரணத்திற்கு, ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்பது மாநில அரசின் நிதி பங்களிப்புடன், மத்திய அரசு நிறைவேற் றும் திட்டமாகும். இதில் என்னென்ன வேலை கள் செய்ய வேண்டும் என்பதை உள்ளாட்சி அமைப்பு முடிவு செய்ய முடியாது. மாறாக, ஒன்றிய அரசு முடிவு செய்த திட்டங்களைத் தான் இங்கே நிறைவேற்ற முடியும். இந்த சூழலில் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரப் பங்களிப்பு என்பது கேள்விக்குறி யாகிறது. இதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், உள்ளூரில் வாக்குப் பெற்ற மக்களின் கருத்துகளை, தேவை களை கேட்டறிந்து அதை நிறைவேற்ற செயல் படுவது என்பதற்கு மாறாக, மேலிருந்து செயல்படுத்தப்படும், திணிக்கப்படும் திட் டங்களை அமலாக்க வேண்டிய முகவர் களாக மக்கள் பிரதிநிதிகள் மாற்றப்படு கிறார்கள். எனவே, குறுகிய அதிகாரமும், நிதி வள மும் மட்டுமே இருக்கக்கூடிய சூழலில் மக்க ளின் எதிர்பார்ப்புகளை மாமன்றம் முழுமை யாக நிறைவேற்ற முடியுமா என்பது மில்லி யன் டாலர் கேள்விதான். அதேசமயம் மாமன்ற மேயரும், கவுன்சிலர்களும் தங் களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு நேர்மை யாக பாடுபட வேண்டும் என்று உறுதி கொண் டால் மாமன்றத்தை, மாற்றுக் கொள்கைக்கு குரல் கொடுக்கும் ஒரு மேடையாகத்தான் பயன்படுத்த வேண்டிவரும். இதைச் செய்யாத பட்சத்தில் அரசின் நிதியும் போது மான அளவு கிடைக்காமல், மக்களின் தலை யில் சுமையை ஏற்றக்கூடிய நிலைதான் ஏற் படும்.
சிறப்பு நிதி கிடைக்குமா?
திருப்பூர் போன்ற தனிச்சிறப்பான பின்ன லாடை ஏற்றுமதி நகருக்கு சிறப்பு ஒதுக்கீட் டின் மூலம் நிதி பெற்று, தேவையான அனைத் துப் பணிகளையும் நிறைவேற்ற வேண்டும். ஆனால், அதிகாரத்தில் இருக்கும் கொள்கை வகுப்பாளர்கள், இதற்கு எதிரான கண்ணோட் டம் கொண்டவர்களாக உள்ளனர். இந்த நக ரின் தேவைக்கு இங்கிருக்கும் மக்கள் தான் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறு கின்றனர். இத்தகைய இக்கட்டான சூழ்நிலை யில் மாநகரின் தேவைகளை நிறைவேற்ற புதிய மாநகராட்சி மேயரும், கவுன்சிலர் களும் உறுதியுடன் செயல்பட வேண்டும் என் பதே மக்களின் எதிர்பார்ப்பு.
-வே.தூயவன்