மார்க்சிஸ்ட் கட்சியின் திருச்செங்கோடு ஒன்றிய, இடைக்குழு, கிளைச் செயலாளர் கூட்டம், ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. அப்போது ஒன்றியக்குழு சார்பில் தீக்கதிர் சந்தா தொகை ரூ.14 ஆயிரம், தீக்கதிர் கோவை பதிப்பின் விநியோக மேலாளர் நெல்சன்பாபுவிடம் வழங்கப்பட்டது. இதில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.