கோவை, செப்.20- மனு தர்ம நூலை தடை செய்யக்கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பிரதமருக்கு கடிதம் அனுப்பிய தோடு, கோவை ஆட்சியரிடமும் மனு அளித்துள்ளனர். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செய லாலர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அதில், பெரும்பான்மை மக்களை இழிவுபடுத்தும் வகையில் மனு தர்ம நூலில் கருத்துக்கள் உள்ளது. இதனை ஒன்றிய அரசு தடை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மனு தர்ம நூலை தடை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கும் தபெதிகவினர் கடிதம் அனுப்பினர். இதேபோன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலு வலகத்திலும் தபெதிகவினர் மனு தர்ம நூலை தடை செய்யக் கோரி மனு அளித்தனர்.