இளம்பிள்ளை, மார்ச் 6- இளம்பிள்ளை - சின்னப்பம்பட்டி பிரதான சாலை யில் அடுத்தடுத்து அமைந்துள்ள மூன்று அரசு டாஸ்மாக் கடைகளால், அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதியடைந் துள்ளனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளையில் இருந்து சின்னப் பம்பட்டிக்கு செல்ல மாவட்ட நெடுஞ்சாலைக்கு சொந்த மான பிரதான சாலை ஒன்று உள்ளது. இச்சாலையில், அடுத் தடுத்த அரை கிலோ மீட்டர் தூரத்தில் 3 அரசு டாஸ்மாக் கடை கள் உள்ளது. இப்பகுதியில் நகராட்சி பேருந்து நிலையம், வணிக வளாகம், அங்கன்வாடி மையம், கோவில், இரண்டு தனியார் மருத்துவமனைகள், தனியார் வங்கி, ஏடிஎம் மையம், உள்ளிட்டவை அமைந்துள்ளது. மேலும், அடுத் தடுத்து அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளால், அப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், விசைத்தறியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், இரவு நேரங்களில் பெண்கள் உட்பட பொதுமக்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இப்பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகளும், மதுஅருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகி வருகின்றன. எனவே, இந்த மூன்று கடைகளையும் உடனடியாக இட மாற்றம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத் துள்ளனர்.