கோவை, மார்ச் 13- ஆட்டோ தொழிலாளர்களை பாஜகவில் சேர வேண்டும் என மிரட்டியும் ஜாதி, மத ரீதியாக தீண் டாமையை பின்பற்றுவதாக குற்றஞ்சாட்டி ஆட்டோ ஓட்டுநர் கள் மூன்று பேர் கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடை பெறும் வாராந்திர மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இம்முகாமில், ஏராள மானோர் தங்களின் கோரிக்கை மனுக்களை வழங்க ஆட்சியர் அலு வலம் வருவது வழக்கம். முன்ன தாக, பொதுமக்கள் மற்றும் அவர் களது உடைமைகளை காவல் துறையினர் சோதனை செய்த பிறகே ஆட்சியர் அலுவலகத்திற் குள் அனுமதித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் வரும்பொழுது அலுவ லகம் முன்பு மூன்று ஆட்டோ ஓட்டு நர்கள் மற்றும் அவர்களது குடும்பத் தினரை சேர்ந்த ஒரு பெண் நியாயம் வேண்டும் நீதி வேண்டும் என முழக் கமிட்டபடி திடீரென மண்ணெண் ணெய் ஊற்றிக்கொண்டு தீக் குளிக்க முயன்றனர். இச்சம்ப வத்தை கண்ட மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதனை யடுத்து உடனடியாக பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் அவர்கள் மேல் தண்ணீர் ஊற்றி, அந்த மண்ணெண்ணெய் கேன் களை பறிமுதல் செய்து உடனடி யாக அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர்கள் துடி யலூர் பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வரும் ஆனந்த்குமார், ரகு, அகமது, என்பதும் அப்பெண் ரகுவின் தாயார் லட்சுமி என்பதும் தெரிய வந்தது. மேலும், மூவரும் பத் தாண்டுகளுக்கு மேலாக, அங் குள்ள ஆட்டோ ஸ்டாண்டில், ஆட்டோ ஓட்டி வரும் நிலையில் கடந்த மூன்று மாதங்களாக இவர் களுக்கு பாஜக-வை சேர்ந்த சில ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் கட்சியில் இணையும் படி மிரட்டி யுள்ளனர். மூவரும் ஏற்கனவே திமுக.,வில் இருப்பதால் பாஜக வில்இணைய முடியாது என தெரி வித்துள்ளனர். இதனால் பாஜக-வை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் அவர்களை ஆட்டோவை இயக்க விடமால் தடுத்ததும், ஜாதி மற்றும் மத ரீதியாக மனஉளைச்சலை ஏற் படுத்தி வந்துள்ளனர். இதனால் வாழ்வாதாரத்தை இழந்த மூன்று ஓட்டுநர்களும் தீக் குளிக்க முயற்சி செய்தது விசா ரணையில் தெரியவந்துள்ளது. கட்சியில் இணையக்கூறி நிர்பந் தித்து, வாழ்வாதாரத்தை முடக்கி யுள்ளதால் வாகன லோன், குழந் தைகளுக்கான பள்ளி கட்டணம் ஆகியவற்றை செலுத்த முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாக ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்தனர். ஆட்சியர் அலுவலகம் முன்பு மூன்று ஆட்டோ ஓட்டுநர்கள் பாஜக வினரின் மிரட்டலுக்கு பயந்து தற் கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.