கல்குவாரி குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளருக்கு மிரட்டல்
திருப்பூர், ஆக.30 – திருப்பூர் அருகே வெண்கலபாளையம் பகுதியில் கல்கு வாரி குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பாலிமர் தொலை காட்சி செய்தியாளரின் வாகனத்தை வழிமறித்து கல் குவாரி உரிமையாளர் மிரட்டல் விடுத்தார். இச்சம்பவம் குறித்து ஊத் துக்குளி காவல் நிலையத்தில் செய்தியாளர் புகார் தெரிவித்தி ருக்கிறார். திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், சர்கார் கத்தாங் கண்ணி கிராமம், வெண்கலபாளையம் பகுதியில் கே.பழனி சாமி புல எண்:263/2 கல்குவாரியில் முறைகேடுகள் நடப்பதாக புகார் கூறப்பட்டு வருகிறது. இந்த குவாரிக்கு அருகில் வசித்து வரும் விவசாயி நடராஜன் இந்த குவாரி முறைகேடுகள் குறித்து தொடர்ந்து புகார் கூறி வருகிறார். எனினும் அரசு நிர் வாகம் இந்த குவாரி மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று தெரிகிறது. எனவே இந்த கல்குவாரியின் செயல்பாடுகள் குறித்து செய்தி சேகரிப்பதற்கு புதன்கிழமை திருப்பூர் பாலிமர் தொலைகாட்சி செய்தியாளர் செந்தில்குமார் அங்கு சென் றார். அப்போது அங்கு வந்த கல்குவாரி உரிமையாளர் செந்தில்குமார் வாகனத்தை வழிமறித்து சாவியை எடுத்துக் கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டியுள்ளார். இதையடுத்து செந்தில்குமார் ஒருவழியாக அங்கிருந்து கிளம்பி ஊத்துக்குளி காவல் நிலையத்திற்குச் சென்று இந்த சம்பவம் குறித்து புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரிப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிறையில் சகோதரிகள் உண்ணாவிரதம்
கோவை, ஆக.30- கோவை சிறையில் சகோதரிகள் உண்ணாவிரத போராட் டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் கடந்த மாதம் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு மதுரையை சேர்ந்த நந்தினி, நிரஞ்சனா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், உதகை சென்று போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித் தனர். இதற்காக கடந்த மாதம் ஜூலை 2ஆம் தேதியன்று இரு வரும் மதுரையில் இருந்து கோவைக்கு பேருந்தில் வந்தனர். இதையறிந்த கோவை மாவட்ட போலீசார், சூலூர் அருகில் பேருந்தில் இருந்து நந்தினி, நிரஞ்சனா சகோரிகளை தடுத்து நிறுத்தினர். அப்போது 2 பேரும் பெண் போலீசாரை தாக்கிய தாக கூறி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், தங்கள் மீது பொய் வழக்கு பதியப்பட்ட தாக கூறி, தங்களை விடுவிக்க வேண்டும் என கோரி கடந்த ஆக.26ஆம் தேதி முதல் தொடர் உண்ணாநிலை போராட் டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், சிறை கண்காணிப் பாளர் ஊர்மிளா இருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட் டத்தை கைவிடச் செய்தார்.
நெரிசல் மிகுந்த பகுதியில் திருட்டு
நாமக்கல், ஆக.30- போக்குவரத்து மிகுந்த பகுதி சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு. இவர் பள்ளி பாளையம் சாலையில் கோழிக்கறிக்கடை வைத்துள்ளார். இவர், தனது, மனைவியுடன் வங்கிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது குமாரபாளையம் - சேலம் பிரதான சாலை யில் அமைந்துள்ள கடையில் மோர் குடிப்பதற்காக வாக னத்தை கடையின் முன்பு நிறுத்திவிட்டு உள்ளே சென் றுள்ளனர். இந்நிலையில், அவர்களது இரு சக்கர வாகனத்தில் இருந்த ரூ.62,500 ரொக்கம் மற்றும் 1 பவுன் நகை கொள்ளை யடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து, அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், இரு சக்கர வாக னத்தில் இருந்த பணம் மற்றும் நகையினை கொள்ளை யடிப்பது பதிவாகி இருந்தது. இதனையடுத்து, குமாரபாளையம் காவல் நிலையத் தில் சேட்டு, புகார் அளித்தார். காவல்துறையினர் கண் காணிப்பு காட்சிகளை கைப்பற்றி குற்ற சம்பவத்தில் ஈடு பட்ட நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
பிரக்ஞானந்தாவை கொண்டாடும் இந்தியா
கோவை, ஆக.30- உலக கோப்பை செஸ் போட்டியில் பங்கேற்ற இரண் டாவது இடத்தை பிடித்த பிரக்ஞானந்தாவை பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். உலக கோப்பை செஸ் போட்டியில் இந்தியா சார்பில் இளம் வீரர் பிரக்ஞானந்தா பங்கேற்றார். உலகின் முன்னணி செஸ் வீரரான நார்வே நாட்டை சேர்ந்த மேக்னஸ் கார்ல் சனுடன், இளம் வீரரான பிரக்ஞானந்தாவுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்நிலையில், உலகக்கோப்பை செஸ்போட்டியில் இரண்டாம் இடத்தை பிரக்ஞானந்தா பிடித்து இந்தியா விற்கு பெருமை சேர்த்தார். இதனிடையே, பிரக்ஞானந்தாவின் வெற்றியை கொண் டாடும் வகையில், கோவை- குனியமுத்தூர் உன்னால் முடியும் தம்பி ராஜா என்ற தன்னார்வலர், இரண்டு கிராம் வெள்ளி யில் இந்திய வரைபடத்துடன் செஸ் காயினை செதுக்கி வடி வமைத்துள்ளார். இதில் இந்தியாவே, தனது கைகளால் வெற்றி சின் னத்தை காட்டுவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இவர் வித்தியாசமான பொருட்களை தயாரிப்பதோடு, இந்தி யர்கள் வெவ்வேறு போட்டிகளில் வெற்றி பெறும்போதும், இந்தியர்களின் பண்டிகையின் போதும் அது சார்ந்த பொருட் களை வித்தியாசமான முறையில் தயாரிப்பவர். இதனை ஒரு மணி நேரத்தில் தயாரித்துள்ளதாகவும், இதனை பிரக்ஞானந்தாவுக்கு சமர்பிப்பதாக யு.எம்.டி.ராஜா தெரிவித்தார்.
கிக் பாக்சிங்: மாணவர்கள் அசத்தல்
கோவை, ஆக.30- தேசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டியில் கோவையை சேர்ந்த மாணவர்கள் 2 தங்கம் உட்பட 12 பதக்கங்கள் வென்று சாதித் துள்ளனர். வாக்கோ இந்தியா எனும் தேசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதும் இருந்து 3 ஆயிரத் துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழக அணி சார்பாக பயிற்சியாளர்கள் பிரேம் குமார் மற்றும் ஆனந்த் ஆகியோர் தலைமையில் கோவையை சேர்ந்த 17 பேர் போட்டிகளில் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற போட்டி களில் கோவையை சேர்ந்த மாணவர்கள் 2 தங்கம் 6 வெள்ளி, 4 வெண்கலம் என 12 பதக்கங்கள் வென்றுள்ளனர். இதில் இரண்டு தங்க பதக்கங்களை அபிஷேக், மன்சர் ஆகிய இருவரும் வென்றுள்ளனர். முகமது கவுஸ் பாஷா, நித்திஷ், சஞ்சய், பவன், தாரகேஸ்வரன், சூர்யா ஆகி யோர் வெள்ளி பதக்கங்களையும், மாணவி அஸ்மிதா, வினோ வர்ஷன், ராகேஷ், ஹரிஷ் ஆகியோர் வெண்கல பதக்கங்களையும் வென்றுள்ளனர். பதக்கங்களுடன், கோவை ரயில் நிலையம் வந்த சாதனை வீரர்களுக்கு திரளானோர் பங்கேற்று, மாலை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர்.
தேசிய குத்துச்சண்டை போட்டி வெற்றியாளர்களுக்கு வரவேற்பு
திருப்பூர், ஆக. 30 - தேசிய அளவில் நடைபெற்ற குத்து சண்டை போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் பெற்று வந்த வீரர்களுக்கு திருப்பூர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் கடந்த 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை 5 நாட்கள் தேசிய அளவிலான குத்துச் சண்டை போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், பிகார், ஜார்கண்ட் உள்ளிட்ட 30 மாநிலங்களைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தில் இருந்து 180க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஐந்து நாட்கள் நடை பெற்ற போட்டியில் ஜூனியர், சப் ஜூனியர், சீனியர் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் போட்டிகள் நடைபெற்றன. திருப்பூர் மாவட் டத்தில் இருந்து மட்டும் 17 பேர் கலந்து கொண்டனர். இதில் உதை குத்துச்சண்டை போட்டியில் தேசிய அளவில் சுதர்சன் என்ற மாணவர் முதல் இடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார். மேலும் திருப்பூரில் இருந்து தேசிய அளவில் குத் துச்சண்டை போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் மூன்று தங்க பதக்கமும், ஒரு வெள்ளிப் பதக்கமும், ஒன்பது வெண் கல பதக்கமும் பெற்றனர். தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டு திருப்பூருக்கு வருகைதந்த வீரர்கள், வீராங்கனை களை அவர்களது பெற்றோர் உற்சாகத்துடன் மாலை அணி வித்தும், மலர் கொத்துக் கொடுத்தும் வரவேற்றனர்.
ஆற்றுக்குடிநீர் வழங்கக் கோரிக்கை
அவிநாசி, ஆக.30- அவிநாசி அருகே கல்லாங்காடு பகுதியில் ஆற்றுக்குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஒன்றிய நிர்வாகத்தினரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஒன்றிய நிர்வாகத்தின ரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, அவிநாசி ஒன்றி யம், தெக்கலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கால்லாங்காடு பகுதி யில் 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இப்பகுதியில் நீண்ட ஆண்டுகளாக ஆற்றுக்குடிநீர் வருவ தில்லை. இதனால் தொலைவில் சென்று ஆற்றுக்குடிநீர் பிடித்து வர வேண்டியுள்ளது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத் தினரிடம் தெரியப்படுத்தியும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே உடனடியாக ஆற்றுக்குடிநீர் வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட ஒன்றிய நிர்வாகத்தினர் விரைவில் நடவ டிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
அவிநாசியில் ஸ்கேட்டிங் போட்டி
அவிநாசி,ஆக.30- அவிநாசி அருகே தனியார்ப்பள்ளியில் ஸ்கேட்டிங் போட்டி மற்றும் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற் றது. திருப்பூர் மாவட்ட ரோலர் ஸ்போர்ட்ஸ் அசோசியேசன், தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் அசோசியேசன் மற்றும் திருப் பூர் ரோல்ஸ்ப்ரோ அகடமி சார்பில் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி மற்றும் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி அவிநாசியில் உள்ள தனியார் பள்ளியில் 200 மீட்டர், 400 மீட்டர், 1000 மீட்டர் ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற் றது. இதில், 4 வயது முதல் 19 வயது வரை உள்ள 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த போட்டிக ளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாநகர காவல் ஆணை யாளர் பிரவீன்குமார் அபினவ் பங்கேற்று பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினர். தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் அசோசியே சன் மாவட்டச் செயலாளர் பிரகாஷ், தலைவர் ஜெய்வராஜ், துணைத்தலைவர் ஜெயக்குமார், அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் இந்திராசுந்தர்ராஜம் ஆகியோர் போட்டியை ஒருங் கிணைத்து நடத்தினர். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகள், விரைவில் சென்னை யில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங் கேற்க உள்ளனர்.
சாலை விபத்தில் வாலிபர் பலி
அவிநாசி, ஆக.30- அவிநாசி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காய மடைந்த வாலிபர் செவ்வாயன்று உயிரிழந்தார். கோவை, புலியகுளம் கொண்டசாமி லே அவுட் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் மகன் மோகன்குமார்(29). இவர் தனது இருசக்கர வாகனத்தில் அவிநாசி நோக்கி சென்று கொண்டி ருந்தார். அவிநாசி - மங்கலம் சாலை பிரிவு அருகே சென்ற போது, நிலை தடுமாறிய இருசக்கர வாகனம் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த மோகன்குமார் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரனை மேற்கொண்டு வருகின்றனர்.
15.55 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
அவிநாசி, ஆக.30- அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத் தில் ரூ.15.55 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்திற்கு, மொத்தம் 739 பருத்தி மூட்டைகள் வந்திருந்தன. இதில், ஆர்.சி.எச். பி.டி. ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 6,000 முதல் ரூ.7,419 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ஒன் றுக்கு ரூ. 2,000 முதல் ரூ.3,500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.15 லட்சத்து 55 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வர்த்த கம் நடைபெற்றது.
நாளை குளத்துப்பாளையத்தில் கால்நடை மருத்துவ முகாம்
திருப்பூர், ஆக. 30 - தாராபுரம் அருகே குளத்துப்பாளையம் பேரூராட்சியில் செப்டம்பர் 1ஆம் தேதி மாபெரும் கால்நடை இலவச மருத்து முகாம் நடத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மூன்று மாபெரும் மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி இரண்டாவது முகாம் செப் டம்பர் 1ஆம் தேதி காலை 8 மணிக்கு தாராபுரம் அருகே குளத் துப்பாளையம் பேரூராட்சியில் நடத்தப்படுகிறது. இம்முகாமில் குடற்புழு நீக்கம், நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி மற்றும் கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப் பூசி, சினை பிடிக்காமல் இருக்கும் கன்றுகளுக்கு தாது உப்புக்கலவை வழங்குதல் ஆகியவை மேற்கொள்ளப் படும். அத்துடன், நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல் சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகள் அளித்தல், செயற்கை முறை கருவூட்டல் பணி, நுண் கதிர் மூலம் சினை பரிசோதனை செய்தல், நோய் வாய்ப்பட்ட கால் நடைகளுக்கு ரத்தம் மற்றும் இதர மாதிரிகள் சேகரித்து பரி சோதனைக்கு அனுப்புதல் மற்றும் கால்நடைகளுக்கான இல வச ஆம்புலன்ஸ் சேவை வழங்குதல்(1962) விவசாயிகளு டன் கருத்தரங்கு மற்றும் கலந்துரையாடல், கால்நடை பல் கலைக் கழக கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய பேராசிரியர்கள் பங் கேற்கின்றனர். சிறந்த கன்றுகளுக்கு பரிசு வழங்கப் படும். சிறந்த கால்நடை தொழில் நுட்ப விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படும். இம்முகாமில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பங்கு பெற்று பயன்பெறும்படி ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருநங்கையர் சிறுகதைகள் நூல் அறிமுகம்
திருப்பூர், ஆக. 30 - திருப்பூரில் வாழும் திருநங்கையினரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு புனைவுடன் எழுதப்பட்ட 19 சிறுகதைகள் கொண்ட”திருநங்கையர் சிறுகதைகள்” நூல் அறிமுகம் மக்கள் மாமன்றத்தில் செவ்வாய் மாலை நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு மக்கள் மாமன்ற செயலா ளர் ராஜா தலைமை வகித்தார். கவிஞர்கள் மாரிமுத்து, மாயாவி மனோகரன் மற்றும் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், வின் செண்ட் ராஜ் ஆகியோர் கலந்து கொண்ட னர். இந்த நூலில் திருப்பூரில் வாழும் திருநங் கையினரின் வாழ்க்கையை அடைப்படை யாகக் கொண்டு புனைவுடன் எழுதப்பட்ட இரண்டு சிறுகதைகளை சுப்ரபாரதிமணி யன், முத்துபாரதி எழுதியுள்ளனர். மொத்தம் 19 கதைகள் இடம் பெற்றுள்ளன. இதை சேலம் பொன் குமார் தொகுத்துள்ளார். சென்னை நிவேதிதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
கல்குவாரி குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளருக்கு மிரட்டல்
திருப்பூர், ஆக. 30 – திருப்பூர் அருகே வெண்கலபாளையம் பகுதியில் கல்கு வாரி குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பாலிமர் தொலை காட்சி செய்தியாளரின் வாகனத்தை வழிமறித்து கல் குவாரி உரிமையாளர் மிரட்டல் விடுத்தார். இச்சம்பவம் குறித்து ஊத் துக்குளி காவல் நிலையத்தில் செய்தியாளர் புகார் தெரிவித்தி ருக்கிறார். திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், சர்கார் கத்தாங் கண்ணி கிராமம், வெண்கலபாளையம் பகுதியில் கே.பழனி சாமி புல எண்:263/2 கல்குவாரியில் முறைகேடுகள் நடப்பதாக புகார் கூறப்பட்டு வருகிறது. இந்த குவாரிக்கு அருகில் வசித்து வரும் விவசாயி நடராஜன் இந்த குவாரி முறைகேடுகள் குறித்து தொடர்ந்து புகார் கூறி வருகிறார். எனினும் அரசு நிர் வாகம் இந்த குவாரி மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று தெரிகிறது. எனவே இந்த கல்குவாரியின் செயல்பாடுகள் குறித்து செய்தி சேகரிப்பதற்கு புதன்கிழமை திருப்பூர் பாலிமர் தொலைகாட்சி செய்தியாளர் செந்தில்குமார் அங்கு சென் றார். அப்போது அங்கு வந்த கல்குவாரி உரிமையாளர் ஒருவர் செந்தில்குமார் வாகனத்தை வழிமறித்து சாவியை எடுத்துக் கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டியுள்ளார். இதையடுத்து செந்தில்குமார் ஒருவழியாக அங்கிருந்து கிளம்பி ஊத்துக்குளி காவல் நிலையத்திற்குச் சென்று இந்த சம்பவம் குறித்து புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரிப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
குப்பைகளை பிரித்துக் கொடுங்கள்
கோவை, ஆக.30- மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து கொடுக்குமாறு பொது மக்களை மாநகராட்சி ஆணையர் மு. பிரதாப் அறிவுறுத்தி உள்ளார். கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண் 42க்குட்பட்ட தவசி நகரில் மாநகராட்சி தூய்மைப்பணியா ளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை மாநக ராட்சி ஆணையர் மு.பிரதாப் புதனன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குப் பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப் படுத்தி தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், அப்பகுதியில் பழுதடைந்த மழைநீர் வடிகாலை புனரமைக்க உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்க சம்பந்தப்பட்ட பொறியளாருக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மாமன்ற உறுப்பினர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
சேலம்: ரூ.60 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்
சேலம், ஆக.30- சேலத்திற்கு கடத்தி வரப்பட்ட சுமார் ரூ.60 லட்சம் மதிப் பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பான்பராக் உள் ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. ஆனால், பெயருக்காக இது தடைச் சட்டம் இருந்தாலும், புகையிலை பொருட்கள் கடத்தல் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகாரிகள் துணை யோடு தினந்தோறும் பெங்களூரிலிருந்து 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், அதிகாரிகள் பெயருக் காக சோதனை நடத்தி, அவ்வப்போது புகையிலை பொருட் களை பிடித்தாலும், தொடர்ந்து புகையிலை பொருட்கள் கடத் தப்படுவது அதிகரித்து வருகிறது. இதனிடையே பெங்களூரி லிருந்து மேச்சேரிக்கு கடந்த வாரம் கடத்திவரடப்பட்ட சுமார் 3 டன் மதிப்பிலான புகையிலை பொருட்களை உணவு பாது காப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில், செவ்வாயன்று இரவு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், மேச்சேரி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வேகமாக வந்த லாரி ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது லாரி யில் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இத னையடுத்து அதிகாரிகள், லாரி ஓட்டுநரை பிடித்து விசா ரணை மேற்கொண்டனர். இதில் பெங்களூரிலிருந்து மேச்சே ரிக்கு புகையிலை பொருட்களை எடுத்து வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து கடத்தி வரப்பட்ட சுமார் ரூ.60 லட்சம் மதிப்பிலான மூன்றரை டன் புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ரூ.86 லட்சம் மோசடி: 8 பேர் கைது
கோவை, ஆக.30- கோவை அருகேயுள்ள வெள்ளலுார் கனகலட்சுமி நக ரைச் சேர்ந்தவர் புருசோத்தமன் (58). இவர், மொத்த வியாபாரி களிடம், உளுந்து, துவரம் பருப்பு மற்றும் பனியன் நுால் உள்ளிட்ட நுகர்வு பொருட்களை விலைக்கு வாங்கி விற்பனை செய்து வந்தார். திருப்பூரில் மொத்த நுால் வியாபாரம் செய்து வரும், பீளமேட்டை சேர்ந்த கண்ணன் என்பவரிடம், நுால் வாங்கி வெளியே விற்பனை செய்தார். ஆனால், அதற்கான தொகை 48 லட்சம் ரூபாயை, கண்ணனிடம் திருப்பி தராமல் மோசடி செய்தார்.இதே போல, ராமநாதபுரத்தை சேர்ந்த நேச மணி என்ற வியாபாரியிடம், நுால் வாங்கி விட்டு, 38 லட்சம் ரூபாய் திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தார். இது தொடர் பாக, பீளமேடு மற்றும் ராமநாதபுரம் போலீசில் புகார் அளிக் கப்பட்டதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. கண் ணனிடம் மோசடி செய்த வழக்கில், பீளமேடு போலீசார் விசா ரித்து, புருசோத்தமன், உடந்தையாக இருந்த இவரது மகள் கீதாஞ்சலி (24), உக்கடம், ரோஸ்கார்டனை சேர்ந்த காஜா உசேன் (42), மற்றும் வீரமுத்து ஆகியோரை செவ்வாயன்று கைது செய்தனர். இதே போல, நேசமணியிடம் மோசடி செய்த வழக்கில், புருசோத்தமன், மோசடிக்கு உடந்தையாக இருந்த சௌரிபாளையத்தை சேர்ந்த மோசஸ் மேத்யூ (31), திருப்பூர், பூலுவபட்டியைச் சேர்ந்த பாரத் (39), அவிநாசி, சேவூரைச் சேர்ந்த மருதாசலம் (49), திருப்பூர், பெருமாநல் லுாரைச் சேர்ந்த ஆனந்த் (43, ஆகியோரை ராமநாதபுரம் போலீசார் கைது செய்தனர். புருசோத்தமன் மீது, கோவை மாநகர குற்றப்பிரிவு மற்றும் திருப்பூர் குற்றப்பிரிவில், 6க்கும் மேற்பட்டமோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப் பிடத்தக்கது.
பெண் காவலரிடம் நகை பறிப்பு
தருமபுரி, ஆக.30- தருமபுரி மாவட்டம், எர்ரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சரவ ணன் என்பவரது மனைவி சுமதி (34). இவர் கிருஷ்ணகிரி நகர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வரு கிறார். இந்நிலையில், புதனன்று காலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், வழிகேட்பது போல நடித்து, சுமதியின் கழுத்திலி ருந்த சுமார் 5 பவுன் தங்க செயினை பறித்துகெண்டு தப்பி னர். இச்சம்பவம் தொடர்பாக அதியமான்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல, தரும புரியில் பெண் ஒருவரிடம் தங்க செயினை பறிக்க முயன்று முடியாமல் இருவர், இருசக்கர வாகனத்தில் தப்பியோடி னர். இச்சம்பவம் தொடர்பாக தருமபுரி நகர் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
கனமழை
கோவை, ஆக.30- கோவை மாவட்டம், வால் பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 15 நாட்களாக வெயிலில் தாக் கம் அதிகமாக இருந்தது. இந் நிலையில், புதனன்று சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் சாலை கள் மட்டுமின்றி, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டது. இந்த மழையானது வால் பாறை பகுதியில் உள்ள தேயிலை பயிர்களுக்கு ஏற்ற மழை என்பது குறிப்பிடத் தக்கது. இதனால் வால்பா றைக்கு வருகை தந்த சுற் றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.