districts

img

திருமணம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டல் - உதவி ஆய்வாளர் மீது இளம் பெண் புகார்

கோவை, மே 23 – தோஷம் கழிப்பதற்காக தன்னை திருமணம் செய்து கொண்டு ஆபாச படம் எடுத்து மிரட் டும் உதவி ஆய்வாளர் மீது நடவ டிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப் பட்ட பெண் கோவை மாவட்ட ஆட்சி யரிடம் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது. திருநெல்வேலி மாவட்டம், ராதா புரம் அருகேயுள்ள உறுமங்களம் பகுதியை சேர்ந்தவர் இளவரசி.  இவர் கோவை மாவட்ட ஆட்சிய ரிடம் அளித்த புகார் மனுவில் கூறியி ருப்பதாவது,  எனக்கும், முதுமொத் தன்மொழி கிராமத்தை சேர்ந்த காவல் துறையில்  உதவி ஆய்வா ளராக பணிபுரியும்  ஆறுமுக நயினா ருக்கும்  கடந்தாண்டு ஜீன் 13 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. வரதட்சணையாக ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமும்,  25 பவுன் நகை யும் அளித்தோம். திருமணம் முடிந்து  14 நாட்கள் மட்டுமே தன்னு டன் இருந்துவிட்டு வேலை நிமித்த மாக கோவைக்கு வந்துவிட்டார். தற்போது அவர் கோவை தடாகம் காவல் நிலையத்தில் உதவி ஆய் வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், லதா என்ற பெண் செல்போனில் இளவரசியை தொடர்பு கொண்டு  உனது கணவரின் பெண்  தோழி எனக்கூறி ஆபாசமாக பேசி னார். இதன்பின் அதே எண்ணில் இருந்து பேசிய ஆறுமுக நயினார், சந்தர்ப்ப சூழலால் உன்னை திரு மணம் செய்ய வேண்டியதாகிவிட் டது. நீ ரொம்ப ஆசைப்படாதே, முடிந்தால் எங்கள் வீட்டில் இரு  இல்லையென்றால் உன் வீட்டிற்கு போய்விடு என மிரடினார். இதனை யடுத்து எனது பெற்றோர் ஆறுமுக நயினாரின் பெற்றோர்களிடம் பேசி னர். அவர்களும் முறையாக பதில ளிக்காமல் ஆறுமுக நயினாரின் செயலுக்கு ஆதரவாக பேசி எங்களை அவமானப்படுத்தினர்.   மேலும், ஜாதகம் சரியில்லை என்பதால் தோஷம் கழிப்பதற்காக தான் என்னை திருமணம் செய்த்த தாகவும் முதலிரவில் நடந்ததை வீடி யோ எடுத்து வைத்துக் கொண்டு தன்னை மிரட்டும் கணவர் ஆறுமுக நயினார் மற்றும் அவருக்கு உடந் தையாக இருப்பவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என  அம்மனுவில் இளவரசி தெரிவித்தி ருந்தார்.  இப்புகார் சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.