districts

img

தபெதிக சார்பில் நூல் வெளியீட்டு விழா

உடுமலை, டிச.26- உடுமலையில் தந்தை பெரியார் திராவி டர் கழகம் சார்பில் சனியன்று ‘தமிழர் வர லாற்றை அழிக்கும் பா.ஜ.கவின் கல்வித் திட்டம்’ என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார் பில் சனியன்று உடுமலை - பழனி சாலையில் உள்ள சன் ஹோட்டலில் ‘தமிழர் வர லாற்றை அழிக்கும் பா.ஜ.கவின் கல்வித்  திட்டம் நூல் வெளியீட்டு விழா’ நடை பெற்றது. தபெதிக திருப்பூர் மாவட்ட செய லாளர் சு.சிவசங்கர் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியில் மடத்துக்குளம் ஒன்றியத் தலைவர் நா.ப.கதிரவன்,  உடுமலை நகரத் தலைவர் யாழ் நடரா சன், கழக வெளியீட்டுச் செயலாளர் இரா. மனோகரன் ஆகியோர் துவக்கவு ரையாற்றினர். புலவர் செந்தலை ந.கவுத மன் நூலை அறிமுகம் செய்து தமிழக வர லாற்றின் முக்கியத்துவத்தை விளக்கி சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, கல்லூரி பாடத்திட்டத்தில் தமிழ்நாட்டின் வரலாறு உட்பட மாநிலங் களின் வரலாறுகளை மறைத்தும், அழித்தும் இந்திய வரலாற்றை உருவாக்கி அதன்  மூலம் மாணவர்களை மூளைச் சலவை  செய்ய முயலும் பாஜகவின் அபாயகர மான கல்வித் திட்டம் குறித்து நூலாசிரியர் பேராசிரியர் அ.கருணானந்தன் சிறப்பு ரையாற்றினார். நிறைவாக, உடுமலை நகரச் செய லாளர் க.ரமேஷ் நன்றி கூறினார். இந்நிகழ்ச் சியில் மடத்துக்குளம் ஒன்றியச் செயலா ளர் கு.மயில்சாமி, உடுமலை ஒன்றிய அமைப்பாளர் கோ.விசுவநாதன், கா.கரு மலையப்பன், உட்பட பலர் கலந்து கொண் டனர்.