districts

img

முதல்வரின் நேரடி துறைக்கே இதுதான் நிலைமை?

ஈரோடு, அக்.19- அந்தியூர் அருகே அரசு அதி காரியின் மக்கள் விரோதபோக்கை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். மாற்றுத்திறனாளிகள் நலனை மேம்படுத்த வேண்டும் என்கிற உந் துதலோடு, தமிழக முதல்வர் தனது நேரடி துறையாக மாற்றுத்திறனாளி கள் துறையை தேர்ந்தெடுத்துள் ளார். மாற்றுத்திறனாளிகள் சங்கத் தினர் முன்வைக்கும் பல கோரிக் கைகளை செவிமடுத்து பல்வேறு  திட்டங்களையும் செயல்படுத்தி வரு கிறார். அதேநேரத்தில், மாவட்டத் திலுள்ள பல அதிகாரிகள் மாற்றுத் திறனாளிகளை அனுகும் விதம் கடும் அதிருப்தியையும், எரிச்சலை யுமே உருவாக்குகிறது. இதன்தொடர்ச்சியாக, ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், சித் தாரில் மாற்றுத்திறனாளிகளுக் கான முகாம் வியாழனன்று நடை பெற்றது. இம்முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவ லர் கோதை செல்வி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள், மருத் துவர்கள் மற்றும் குருவரெட்டியூர், பட்லூர் உள்ளிட்ட பல கிராமங்க ளைச் சேர்ந்த பலர் கலந்து கொண் டனர். மேலும், இதில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் மாவட்டத் தலைவர் சாவித்திரி உள்ளிட்ட சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்ட னர். அப்போது, அவரை பார்த்தவு டன் பிரபு என்ற அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவ லர் மற்றும் மருத்துவர்களிடம், அவர் வெளியேறினால் தான் முகாமை தொடர்ந்து நடத்துவோம், என்றார். மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிய வேண்டிய அதிகாரிகளின் முறையற்ற செயலைக் கண்டித்து,  சாவித்திரி தர்ணாவில் ஈடுபட்டார்.  அதிகாரிகள் மற்றும் மருத்துவர்க ளின் நேர்மைமையற்ற நடத்தையி னால் மாற்றுத்திறனாளிகள் அதி ருப்தி அடைந்தனர். மேலும், பலர் இதுபோன்ற அதிகாரிகளிடம் உதவியை எதிர்பார்க்க முடியாது என திரும்பி சென்றனர். எஞ்சியிருந் தவர்கள் சாவித்திரியுடன் போராட்டத் தில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட ஆட்சியர் தலையிட்டு மூன்று ஆண்டு களுக்கு மேலாக பணியிட மாறுத லின்றி, மக்களுக்கு விரோதமாக செயல்படும் இத்தகைய அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும், என வலியுறுத்தினர். முதல்வரின் நேரடியாக உள்ள  மாற்றுத்திறனாளிகள் துறைக்கே  இதுதான் நிலையா என அங்கிருந் தவர்கள் பேசிச்சென்றனர். ஒரு சில அதிகாரிகளின் இதுபோன்ற நடவ டிக்கை ஆட்சிக்கு அவப்பெயர் ஏற் படுத்துகிறது என்பதை ஆட்சியாளர் கள் உணர வேண்டும்.