districts

img

உணவு விநியோக ஊழியர் தாக்கப்படுவது இது முதல்முறையல்ல

கோவை, ஜூன் 10- உணவு விநியோக ஊழியர் காவல் துறையினரால் தாக்கப்படுவது இது முதல்முறையல்ல. தொடர்ந்து நடை பெறும் இதுபோன்ற அவலத்திற்கு முற் றுப்புள்ளி வைக்க வேண்டும் என சிஐ டியு சார்பில் கோவை மாவட்ட ஆட்சிய ருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுகி நிறுவனத்தில் உணவு விநியோ கம் செய்யும் ஊழியர் ஒருவரை போக்கு வரத்து காவலர் ஒருவர் கடுமையாக தாக் கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளத்திலும் வைரலானதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காவலர் பணி யிடை நீக்கம் செய்யப்பட்டு, கைது செய் யப்பட்டார். இவ்விவகாரத்தில் உடனடி யாக தமிழக காவல்துறை துரித நடவ டிக்கை எடுத்தது அனைவரின் கவனத்தை யும் ஈர்த்தது. இருப்பினும் வேலையின் மையால் கிடைக்கிற வேலையை செய்யும் இதுபோன்ற ஊழியர்கள் அன்றாடம் காவல் துறையினரின் தாக்குதலுக்கும், அத்துமீறல்களுக்கும் உள்ளாவதாக சிஐடியு விமர்சித்துள்ளது.  இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கோவை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சி யர் ஜி.எஸ்.சமீரனிடம் சிஐடியு கோவை மாவட்ட லாட்ஜ், ஹோட்டல் & பேக்கரி சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. இதுகுறித்து அம்மனுவில் தெரிவிக் கப்பட்டுள்ளதாவது, கோவை பீளமேட் டில் உணவு விநியோக ஊழியர் மோகன சுந்தரம் என்பவர் போக்குவரத்து காவல ரால் தாக்கப்பட்டார். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற தனியார் பள்ளி வாகன ஓட்டுநரிடம் கேள்வி கேட்டதற் காக இந்த தாக்குதல் நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேற்கண்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மோகனசுந்த ரம் போன்ற தொழிலாளர்கள் நல்ல கல்வி தகுதியுடையவர்களாக இருந்தும், இந்திய ஒன்றியத்தில் அதிகரித்து வரும்  வேலையில்லா திண்டாட்டத்தால் வேலை கிடைக்காமல் உள்ளனர். குடும்ப சூழலால் ஓலா, ரேப்பிடோ, சுகி, சுமேட்டோ போன்ற நிறுவனங்களில் பணி பாது காப்பும் இல்லாமல் உழைக்கின்றனர். சமூ கத்தில் அனைத்துவகை மக்களும் பயன டையும் போக்குவரத்து, உணவு விநியோ கம் போன்ற பணியினை கடுமையான உழைப்பை செலுத்தி செய்து வருகிறார் கள்.

மேற்கண்ட சம்பவத்தை போன்று சுகி  ஊழியர் ஒருவர் காவல்துறை அதிகாரி யால் தாக்கப்படுவது இது முதல்முறை யல்ல. ஏற்கனவே பலமுறை காவல் துறை அதிகாரிகளால் இது போன்ற நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அலைபேசி இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறித்து வைத்து பணம் கேட்டு மிரட்டுவதும், ஊழி யர்களின் சீருடையை வைத்து அவர்களை மட்டும் குறிவைத்து மடக்கி பிடித்து, எந்த வித காரணமும் இல்லாமல் முகவரி, அலைபேசி எண் வாங்குவது, அவர்க ளின் ஆவணங்களை எல்லாம் புகைப்ப டம் எடுப்பது என்பது தொடர்ந்து நடை பெறுகிறது. ஊழியர்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதும், கண்ணியக்குறை வாக பொது இடங்களில் நடத்தப்ப டுவது, ஏதோ ஒருவகையில் தினந்தோ றும் ஏதோ ஒரு ஊழியருக்கு நிகழ்த்தப் பட்டுக்கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட ஊழியர்கள் எந்த வகை யிலும் மற்ற அரசு துறையிலோ, தனி யார் நிறுவனத்திலோ பணிபுரியும் ஊழியர் களை விட எந்தவிதத்திலும் மதிப்பு குறைந்தவர்கள் அல்ல. கொரோனா தொற்று காலகட்டத்தில் இந்த ஊழி யர்கள் முன்களப் பணியாளர்களாக ஆற் றிய பணி ஒன்றே போதுமானது. இந்த ஊழியர்கள் தங்கள் உயிரையும் பணை யம் வைத்து வீட்டில் முடங்கி கிடந்த வயதானவர்கள், பெண்கள், குழந்தை கள் என அனைவருக்கும் வீட்டு வாசல் வரை சென்று உணவு கொண்டு போய் சேர்த்ததும், பல இடங்களில் இந்த ஊழி யர்கள் நோயின் தாக்கத்தால் பாதிக்கப் பட்டு வீட்டில் முடங்கி இருந்தவர்களை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்ததும், மருந்தகத்தில் இருந்து மருந்து வாங்கி கொடுத்தது என்பதை அனைவரும் அறிந்தே இருக்கிறோம். 

தங்களின் வாழ்வியல் தேவைக்காக ஏதோவொரு பின் தங்கிய கிராமத்திலி ருந்து படித்த படிப்புக்கு வேலையில்லா மல், நல்ல கல்வி தகுதியுடன் குடும்ப சூழலை சமாளிக்க அல்லது கல்லூரி தேவைக்காக சொந்த ஊரைவிட்டு கோவை, சென்னை, மதுரை போன்ற பெருநகரங்களில் உழைப்பை செலுத்தி பணிபுரியும் இந்த ஊழியர்களின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். இது ஒவ் வொரு தொழிற்சங்கங்களின் கடமையா கும். எனவே, இதுபோன்ற தொழிலா ளர்களுக்கு எதிராக காவல்துறை அதி காரிகள் தொடர்ந்து நிகழ்த்தி வரும் சட்ட மீறல்களை ஆட்சியர் எச்சரித்து, தினந்தோ றும் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற ஊழியர்க ளின் பணி பாதுகாப்பு மற்றும் தனிமனித உரிமையை நிலைநாட்ட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சிஐடியு மாவட்ட தலை வர் சி.பத்மநாபன், செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு ஹோட்டல் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலை வர் கே.மனோகரன், பொருளாளர் சந்தோஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனிடம் மனு அளித்தனர்.