districts

img

திமுக ஆட்சி கலையும் என்பதா? இது தவழ்ந்து பிடித்த ஆட்சியல்ல

எஸ்.பி.வேலுமணி-பழனிச்சாமியும் சிறை செல்வது உறுதி

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பல்வேறு  வகையில் ஊழலில் ஈடுபட்ட  தொடர்பாக உரிய நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகிறது.  அதன் முதற்கட்டமாக 110 கோடி  ரூபாய் சொத்துக்கள் முடக்கப் பட்டுள்ளது. விரைவில், எஸ்.பி. வேலுமணி, எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் சிறை  செல் வது உறுதி என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
 

கோவை, பிப்.17– மக்களின் பேராதரவோடு அமைந்த திமுக ஆட்சி கலைந்து விடும் என எடப்பாடி பேசுகிறார். இது  கூவத்தூரில் டேபிளுக்கு கீழே தவழ்ந்துபோய் பிடித்த ஆட்சி என  அவர் நினைத்துவிட்டார் என  கோவையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்  திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து கோவை மாவட்டம் முழுவதும் திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதய நிதி ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் மேற் கொண்டார். அப்போது அவர் பேசு கையில், கடந்த 9 மாதத்தில் மூன்று முறை தமிழக முதல்வர் கோவை வந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கின்றார். கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்தபோது, கடந்த கால  ஆட்சியிலிருந்த அதிமுக அரசு எவ்வித உரிய தடுப்பு நடவடிக் கையையும் மேற்கொள்ளவில்லை. தடுப்பு ஊசியையும் சரியாக போட வில்லை. ஆனால், திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற இந்த 9 மாதத் தில் மட்டும் 10 கோடி டோஸ் தடுப்பூசி போட்டு விழுப்புணர்வை ஏற்படுத்தி யது. கொரோனா 3 ஆவது அலையை நாம் பாதிப்பு இல்லாமல் கடக்க காரணம் தடுப்பூசி போட்டது தான். தமிழக அரசின் செயல்பாடு  களை பார்த்து வடமாநில முதல்வர் கள் எல்லாம் நம் முதல்வரை திரும்பி பார்க்கின்றனர். அந்த அளவிற்கு பணிகளை செய்து இருக்கின்றோம்.     இவ்வாறு நாடு முழுவதும் தமிழ கத்தை பாராட்டி வரும் நிலையில்,  முன்னாள் முதல்வர் எடப்பாடி  பழனிச்சாமி தமிழக சட்டமன்றத்தை  முடக்க போவதாக மிரட்டுகின்றார். கூவத்தூரில் டேபிள், சேர்க்கு கீழ்  தவழ்ந்து போய் பிடித்த ஆட்சியல்ல  இது. இது மக்கள் ஆட்சி. உங்களின் உருட்டல், மிரட்டலுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம். தமிழ்நாட்டை பார்த்து திருந்துங்க என பிரதமர் மோடிக்கு சவால் விட்டு நாடாளு மன்றத்தில் ராகுல்காந்தி பேசினார் என்றால், அந்தளவு பாசிசத்திற்கு சிம்மசொப்பனமாக தமிழக ஆட்சி  இருக்கின்றது. ஆகவே, உள்ளாட்சி களில் அடிப்படை வசதிகள் முழு மையாக சென்றடைய திமுக தலை மையிலான மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி வேட்பாளர்க ளுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள், என்றார்.  முன்னதாக, இந்த பிரச்சார இயக்கத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மாவட்ட பொறுப்பாளர்கள் நா. கார்த்திக், பையா கிருஷ்ணன், மருத மலை சேனாதிபதி உள்ளிட்ட நிர் வாகிகள் பங்கேற்றனர்.