districts

img

நகராட்சி அலுவலகத்தை இடம் மாற்ற எதிர்ப்பு திருமுருகன் பூண்டி நகர்மன்ற உறுப்பினர்கள் தர்ணா

அவிநாசி, மே 23– திருமுருகன் பூண்டி நகராட்சி அலுவல கத்தை இடம் மாற்ற எதிர்ப்புத் தெரிவித்து நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர். அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி நகர்மன்றக் கூட்டம் திங்களன்று நகர்மன்ற தலைவர் குமார் தலைமையிலும், ஆணை யாளர் முகம்மது சம்சுதீன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தேவராஜன் பேசு கையில், நகரமன்ற கூட்டம் நடைபெறுவது குறித்து மூன்று நாட்களுக்கு முன்பு முறை யாக சுற்றறிக்கை வழங்கப்பட வேண்டும். ஆனால், இதுவரை அவை முறைப்படுத் தப்படவில்லை, முந்தைய கூட்டத்தில் எங்கள் வார்டு பகுதியில் ரேஷன் கடை வேண்டும் என்று விண்ணப்பிக்கப்பட்டது, இதனை சேர்த்துக் கொள்ள வேண்டும். மன் றக் கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டதை  மன்ற உறுப்பினர்களிடம் கையொப்பம் பெற வேண்டும். தீர்மானத்தை, நகர மன்ற அலு வலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று பேசினார்.  இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 10 ஆவது வார்டு உறுப்பினர் சுப்பிர மணியம் பேசுகையில், சாக்கடை கால்வாய்  அமைக்க கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். குடிநீருக்காக புதிதாக விண்ணப் பித்துள்ளவர்களுக்கு இணைப்பு உடனே வழங்க வேண்டும். மன்றக் கூட்டத்தை முறைப்படி நடத்த வேண்டும். குடிநீர்  பிரச்சினை குறித்து தலைவரிடம் கேள்வி  கேட்டால் அதிமுக உறுப்பினர் லதா அவர் களிடமிருந்து பதில் வருகிறது. மேல்நிலை தொட்டியினை இடிப்பது குறித்து சென்ற  கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு தீர்மானம்  போடப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை  இடிக்கப்படவில்லை. நகரமன்ற அலுவல கமே மாற்றம் செய்யலாம் என முடிவு செய்த பிறகு, கல்வெட்டு வைப்பது அவசியம் தானா என்று கேள்வி எழுப்பினார்

இதன் தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 22ஆவது வார்டு உறுப்பினர் பார்வதி பேசுகையில், சன்னதி  வீதியில் அமைந்துள்ள பொதுக்கழிப்பிடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே, புதிய கழிப்பிடம் அமைத்து தர வேண்டும் என்று பேசினார்.  இதில் நகர மன்ற அலுவலகம் இடமாற் றம் செய்வது குறித்து தீர்மானம் முன்மொ ழியப்பட்டது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த  நகரமன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணியம்,  தேவராஜன், பார்வதி மற்றும் திமுக, அதி முகவைச் சேர்ந்த நகர மன்ற உறுப்பினர்க ளும் எதிர்ப்பு தெரிவித்து தரையில் அமர்ந்து  தர்ணா போராட்டம் ஈடுபட்டனர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியைச் சேர்ந்த சுப்பிரமணியம் கண்டன முழக்கங்களை எழுப்பி கடும் எதிர்ப்பினை பதிவு செய்தார். பலத்த எதிர்ப்புக்கு இடையே நகரமன்ற அலுவலகம் மாற்றம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக உறுப்பினர் பாரதி, மோட்டார் பழுது காரணமாக முறையான தண்ணீர் கிடைப்பதில்லை, நகர மன்ற உறுப்பினர்க ளுக்கு சில்வர் டம்ளர் தேனீரும், தலைவர்  மற்றும் துணைத் தலைவர், ஆணையாளர் ஆகியோருக்கு விஐபி டம்ளரில்  தேனீரும் வழங்கப்பட்டது. இரட்டை டம்ளர் முறை திமுக ஆட்சியில் ஒழிக்கப்பட்டது, ஆனால் தற்பொழுது நகர மன்ற அலுவலகத்தில் இது தொடர்கிறது. இது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்றார்.

மேலும் மன்றக் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த குமார் தலைவராக இருந்தாலும், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் பேரூராட்சித் தலைவ ரான தற்போதைய உறுப்பினர் லதாவே  மன்றக் கூட்டத்தை வழிநடத்தி உறுப்பி னர்கள் கேள்விக்கும் பதிலளித்தார். நகர மன்ற அலுவலகம் மாற்றம் செய்வ தற்கு எதிர்ப்பு தெரிவித்து நகரமன்ற உறுப் பினர்கள் தரையில் அமர்ந்து போராட்டம் செய்யும் போது உறுப்பினர்களை மிரட்டும் தொனியில், தனது கைப்பேசி மூலம் வீடியோ பதிவு செய்யத் தொடங்கினார். இதனை ஆணையாளர் மற்றும் தலைவர் அமைதி யாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த னர்.  இக்கூட்டத்தில் அதிமுகவை சேர்ந்த நகரமன்ற உறுப்பினர் கார்த்திக், வார்டு முழு வதும் மருந்து அடிக்காமல் வீடுகளுக்குள்  ஈக்கள் புகுந்து விடுகிறது. இதனால் பொது மக்களுக்கு நோய் தொற்று அபாயம் ஏற் படுகிறது என்று தெரிவிக்கும் வகையில் ஈக் களை கவரில் கட்டிக்கொண்டு நூதனமான முறையில் தனது எதிர்ப்பை பதிவு செய் தார்.  மேலும்,இக்கூட்டத்தில் குடிநீர்  இணைப்பு பெறுவதற்கு வைப்புத்தொகை ரூ.5000, கமர்சியல் குடிநீர் இணைப்பு பெறு வதற்கு வைப்புத் தொகை ரூ.10,000 என உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.